தேனி மாவட்டத்தில் வெல்ல உற்பத்தித் தொழில் நலிவடைந்துள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், மஞ்சளாறு அணைப்பகுதிகளில் கரும்புகளில் இருந்து வெல்ல உற்பத்தித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. உழவர்கள் தங்கள் தோட்டத்தில் வெல்லம் உருவாக்கத்தேவையான குடிசைகள், கலன்கள், அடுப்புகள் போன்றவற்றை அமைத்து அதற்கு ஆட்களையும் வைத்திருப்பார்கள். கரும்பு முற்றியவுடன் கரும்புகளை ஆட்டிக் கொதிகலன்களில் சூடாக்கி வெல்லம் உற்பத்தி செய்வார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வெல்லம் தமிழகம் முழுமைக்கும் பிறமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்திருந்தனர்.  …