கருகும் தென்னை மரங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் கருகும் தென்னை மரங்கள்  தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் தென்னை மரங்கள் கருகுவதால் உழவர்கள் வேதனை அடைகின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டி, செங்குளத்துப்பட்டி, மஞ்சளாறு அணை, சில்வார்பட்டி, குள்ளப்புரம், கெங்குவார்பட்டி   முதலான பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால் அரசின் புள்ளிவிவரப்படி ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் கருகின. இதனால் உழவர்கள் தென்னை மரத்தை வெட்டி விட்டு அதனை வீட்டடி மனைகளாக மாற்றிவிட்டனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் ஆறு, ஏரிகள், கிணறுகள்…

மாம்பூவில் நோய் தாக்குதல்- உழவர்கள் கவலை

      இந்தியாவின் தேசியப் பழமான மாம்பழம் தன்னுடைய மணத்தாலும் சுவையாலும் நம்மை மயக்க வல்லது. மாம்பழ உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தியா கிட்டத்தட்ட உலக உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது.      சேலத்திற்கு அடுத்தபடியாகப் பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி பகுதியில் பல காணி பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிட்டு வருகின்றனர். மாங்காயிலிருந்து வடு, மாங்காய் வற்றல், மாம்பழம் எனப் பலவகை கிடைக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் மாந்தளிரில் பலவகையான பூச்சிகள் தாக்கியுள்ளன. தத்துப்பூச்சிகள், மாங்கொட்டைக் கூண்வண்டு, அசுவினி, செதில் பூச்சி, பூங்கொத்துப்…

முடித்த பணியைப் புதுப்பணியாகக் காட்டும் பொதுப்பணித்துறையின் ஊழல்!

தேவதானப்பட்டிப் பகுதிகளில் நடைபெற்ற பணியினை மீண்டும் மீண்டும் செய்து அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பொதுப்பணித்துறை!     தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கண்மாய் ஏற்கெனவே குளத்தில் உள்ள கரைகளை மேம்படுத்திச் சீராக வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அப்பகுதியில் உள்ள உழவர்கள் பயனடைந்து வருகின்றனர்.இப்பொழுது பொதுப்பணித்துறை, ஏற்கெனவே செய்த வேலையை மீண்டும் உடைப்பு இயந்திரம் கொண்டு கரையை உயர்த்துகின்ற பணியினை செய்து வருகிறது. இதே போல செங்குளத்துப்பட்டி கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் பணி நடைபெற்றது. அப்போது…

கொள்ளை போகும் இசுலாமிய அறக்கொடை – வைகை அனிசு

கொள்ளை போகும் வக்பு வாரிய நிலங்கள் மீட்டெடுக்கப் பல்வேறு அமைப்புகள் போராட்டம்   உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துகள் உள்ள நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பது இந்தியாதான்.  வக்பு என்ற அரபிச் சொல்லுக்கு அருப்பணித்தல் என்று பொருளாகும். இந்தியாவை ஆண்ட சுல்தான்களால்   இம்முறை உண்டாக்கப்பட்டு முறையாகப் பேணப்பட்டு வந்தது. இந்தியாவில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களைப்   பேணவும் முசுலிம்களின் அடக்க மனைகளை உருவாக்கிடவும், ஈத்கா மைதானம்(வருடத்திற்கு ஒருமுறை தொழுகும் இடம்) உருவாக்கிடவும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திட ஆதரவற்றோர் காப்பகம்…

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள்

வைகை அணைப்பகுதியில் தரமற்ற பாலங்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு   தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டி, வைகை அணை, செயமங்கல் ஆகிய பகுதிகளில் தரைப்பாலங்களை உடைத்துவிட்டு புதிய பாலங்களைக் கட்டுகின்றனர். இவ்வாறு கட்டப்படும் பாலங்கள் தரமற்றவையாக உள்ளன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   தரைப்பாலங்களில் பைஞ்சுதைக் குழாய்களை(சிமிண்ட்டு) வைத்து அதன்மேல் எந்த விதக் கலவையும் போடாமல் வெறும் சல்லித்தூசிகளைக் கொட்டிவிட்டு அதன்மேல் செம்மண்ணை வைத்து வேலையை முடித்துவிடுகின்றனர். இவ்வாறு அமைக்கப்படும் தரைப்பாலங்களில் சுமையூர்திகள், கனவகை இயந்திரங்கள் செல்லும் போது பாலங்கள் உடைந்து விடுகின்றன….

தேவதானப்பட்டி : வறண்ட மேய்ச்சல் நிலங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு முன்பே வறண்ட மேய்ச்சல் நிலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு முன்பே மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போனதால் கால்நடைகள் அடிமாடுகளுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி முதலான சிற்றூர்களில் கால்நடைகளும், வேளாண்மையும் முதன்மைத் தொழிலாக உள்ளது. தற்பொழுது கோடைக் காலத்திற்கு முன்பே இப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்கு நிலம் இல்லாததால் காய்ந்த சருகுகளையும், காய்ந்த புற்களையும் கால்நடைகள் உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்…

தேவதானப்பட்டியில் இயந்திர அறுவடை

தேவதானப்பட்டிப் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை   தேவதானப்பட்டிப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கியது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ..கல்லுப்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம், மேல்பகுதியில் பல காணி பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்றது.   கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழையின்மையால்; இப்பகுதியில் நிலங்கள் அனைத்தும் தரிசாக இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பின. வற்றி இருந்த கிணறுகளும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் நெல் பயிரிட்டனர். நெல்…

முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலகம் எங்கே?

முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலர் அலுவலகத்தைத் தேடி அலையும் பொதுமக்கள்   தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். முதலக்கம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட வைகை புதூர், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி முதலான ஊர்களுக்கு ஊர் நிருவாக அலுவலகம் முதலக்கம்பட்டியில் உள்ளது.  முதலக்கம்பட்டியில் ஊ.நி.அ.திகாரி அலுவலகத்திற்குக் கட்டடம் இ;ல்லை. இதனால் ஊ.நி.அ. அலுவலகக் கட்டடம் வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சமுதாயக்கட்டடத்தில் இயங்கியது. அதன்பின்னர் அக்கட்டடம் புறநூலகமாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஊர் வறுமை ஒழிப்புச் சங்கத்திற்குச்…

தேவதானப்பட்டியில் நிலங்களைக் கைப்பற்றும் கும்பல்

தேவதானப்பட்டிப் பகுதியில் இடைத்தரகர்கள் மூலம் நிலங்களைக் கைப்பற்றும் கும்பல்   தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நிலங்களை வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் சேர்ந்து நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, தேவதானப்பட்டி கிழக்குப்பகுதி, புல்லக்காபட்டி, அட்டணம்பட்டி, கோட்டார்பட்டி முதலான ஊர்களுக்கு வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான் பத்திரப்பதிவு நடக்கும். கடந்த 3 ஆண்டுகளாகப் போதியமழையின்மையால் இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் இடைத்தரகர்கள், பத்திரப்பதிவு செய்பவர்கள் ஆகியோர்…

தேவதானப்பட்டியில் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றக் கூட்டம்

  தேவதானப்பட்டியில் முனைவர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்டத் துணைச் செயலர் வி.சிரீதர் தலைமை தாங்கினார். செல்வி சாந்த சொரூபன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினைத் தொடக்கி வைத்தார்.   மஞ்சளாறு அணை முனைவர் சிவந்தி ஆதித்தனார் மன்றக் கிளைத் தலைவர் பி.செயராசு  முன்னிலை வகித்தார்   நகர்மன்ற உறுப்பினர் இரமேசு வரவேற்புரை நிகழ்த்தினார்.   சாந்தசொரூபன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்; சாந்தசொரூபன், “இளைஞர்கள் தற்பொழுது தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி…

தேவதானப்பட்டியில் சூறாவளியால் பயிர்கள் சேதம்

தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை அறுவடைக்குத்தயாரான நெற்பயிர்கள் சேதம்  தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, மஞ்சளாறு அணைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது.   இப்பகுதியில் முதல்நாள் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டமுடியாதநிலை இருந்தது. அதன்பின்னர் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. இதனால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் சாய்ந்தன. சில பகுதிகளில் நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.   இந்நிலையில் செயமங்கலம், மேல்மங்கலம்,…

நள்ளிரவில் மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பதற்றம்

தேவதானப்பட்டியில் நள்ளிரவில் பதற்றம்! மகிழுந்து கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு   தேவதானப்பட்டியில் வெடி வெடித்ததால் நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது.   தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சளாறு அணைப்பகுதியில் தனியார் திருமண மண்படம் உள்ளது. இத்திருமண மண்டபத்தில் புல்லக்காபட்டியைச்சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய காதணி விழா நடைபெற்றது. காதணி விழாவையொட்டி தாய்,மாமன் வரவேற்பு நிகழ்ச்சியில் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளும், கண்ணாடிகளும் அதிர்வடைந்தன.   மேலும் மஞ்சளாறு அணைச் சாலையில் ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த சேக்கு என்பவருக்குச்…