வெருளி நோய்கள் 1086-1090: இலக்குவனார்
(வெருளி நோய்கள் 1081-1085 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1086-1090 சுழல் விளக்கு/சுழல்வொளிர்வு(strobe light) பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் சுழல் விளக்கு வெருளி.ஆட்சியாளர்கள், உயர் அலுவர்கள் ஊர்திகளில் சுழல் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. எனவே, சுழல் விளக்கை அதிகாரத்தின் அறிகுறியாக எண்ணிப் பெரிதும் அச்சப்படுகின்றனர்.00 சுழற் கதவு (revolving door)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுழற் கதவு வெருளி.நம்மால் தள்ளி இயக்கக்கூடியதாகவும் தன்னால் இயங்கக்கூடியதாகவும் சுழற்கதவுகள் உள்ளன. இதன் செயல்பாட்டைப்புரிந்து கொள்ளாமல், சிக்கிக் கொள்ள நேரிடும் என அஞ்சுவோர் உள்ளனர்.அரசியலில் சுழற்கதவு இயக்கம் உள்ளது. சட்டத்தை இயற்றுநருக்கும்…
இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! “இந்தியை அல்ல, இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” என நம்மைத் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள். நாமும் “ஆமாம், ஆமாம்” என்று சொல்லி இந்தித் திணிப்பிற்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மாநிலங்களில் இந்திப் பயன்பாட்டை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு அப்பால் பிற மக்களின் மீது, நம் மக்களின் மீது இந்தியை நுழைப்பதே திணிப்பதுதான். பள்ளிகளில் இளமழலை(L.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி திணிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகிறது. கேட்டால் விருப்பப் பாடம் என்கிறார்கள். விருப்பப்பாடம் என்றால் வேறு மொழிகளும் விருப்பப்பாடப் பட்டியலில் இருக்கிறதா என்றால்…
வெருளி நோய்கள் 1081-1085: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1076-1080: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1081-1085 சுவரொட்டி(wallpaper) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவரொட்டி வெருளி.சுவரொட்டிகள் மூலம் அரசியல் கருத்துகள், நிகழ்ச்சி விவரங்கள் பயன்படுத்தாலும், எழுச்சி முழக்கங்களும் பரப்பப்படுகின்றன. எனினும் சுவெராட்டிகள் மூலம் எதிரான கருத்துகளும் பரப்பப்படுவதால் இதனால் அச்சமும் எரிச்சலும் அடைந்து காரணமற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.Tapetsaria என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சுவரொட்டி எனப் பொருள்.00 சுவர் குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவர் வெருளி.சுவர் இடிந்து விழுந்து மரணம், படுகாயம் முதலானவை நேர்ந்த செய்திகளைப் படித்தவர்கள் பாழடைந்த சுவர்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘ காலனி’: சரிதானா? எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? ??? ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். உண்மையில் ‘காலனி’ என்பது குடியேற்றப் பகுதியைக் குறிக்கும். அஃதாவது, குடியேற்ற ஊர், குடியேற்ற நகர், குடியேற்ற நாடு என எல்லாமே…
வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1055-1060: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1061-1065 சிறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சிறை வெருளி.சிறைவாசிகளுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிந்து விடுமோ என்ற பேரச்சம் வரும்.செல்வாக்கு உள்ளவர்க்கு ஒரு நிலைப்பாடு இல்லாதவர்க்கு ஒரு நிலைப்பாடு என நிலவுவதால், விசாரணையில் உள்ள கைதிகளுக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும் சிறைபற்றிய அச்சம் மிகுதியாகின்றது. சட்டப்படியான குற்றம் புரியாதவர்களும் சிறைபற்றிய செய்திகளையும் கதைகளையும் படிப்பதாலும் தொலைக்காட்சி, திரைக்காட்சிகளில் காண்பதாலும் சிறைகள்பற்றிய பேரச்சம் வருகிறது.carcer என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சிறை எனப் பொருள்.00 சிற்றுண்டிகள் விற்பனையகம் குறித்த காரணமற்ற…
மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : தொடரச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு குறித்து, அதிலும் குறிப்பாக மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் குறித்து முந்தைய இதழ்களில் பார்த்தோம். 13.11.1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடு குறித்த செய்தியையும் பார்த்தோம். இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார். இதுவே தமிழ் உணர்வுடன் தமிழுக்காக, உயிருக்கும்…
வெருளி நோய்கள் 1016-1020: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1011-1015 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1016-1020 சாம்பல் நிறம் தொடர்பானவற்றின் மீது ஏற்படும் வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சாம்பல்நிற வெருளிசாம்பல் நிறம் நடுவுநிலைமை, ஒத்துப்போதல், சலிப்பு, ஐயப்பாடு, முதுமை, புறக்கணிப்பு, நாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறியீடாக விளங்குகிறது.glauco என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல்நிறம்.00 தனித்திராமல் பிறரைச் சார்ந்திருக்கும் சார்பு(dependence on others) நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்பு வெருளி.தற்சார்பின்றிப் பிறரை அண்டியிருத்தல் உரிய செயலைக் குறித்த காலத்தில் முடிப்பது குறித்த கவலையை உருவாக்கும். சார்தலுக்குரியவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்யாமல்…
வெருளி நோய்கள் 991-995: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 986-990 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 991-995 சனவரி 3 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 3 வெருளி.சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.3 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 3 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 4 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 4 வெருளி.சனவரி 4 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி…
பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்
பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன் கோவையிலுள்ள தனியார் அறக்கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், “பகவத்து கிதையை வெறும் மதநூலாகப் பார்க்கக்கூடாது. அஃது ஒரு தார்மீக அறிவியல் நூல்; தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்து கீதை, இந்த மண்ணின் தாக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார். அஃதாவது இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகத்து கீதை இந்துக்களுக்கமட்டுமல்ல…
வெருளி நோய்கள் 966-970: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 961-965: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 966-970 சட்டை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சட்டை வெருளி.பெளகமிசோ – Poukamiso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சட்டை.ஆடை வெருளி உள்ளவர்களுக்குச் சட்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சதுரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சதுர வெருளி.சதுரமான கட்டடங்கள், சதுரமான அரங்குகள், சதுரமான அமைப்புகள் முதலியவை மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.சிலர் சதுரம் என்பதை வடசொல்லாகக் கருதுகின்றனர். எனவே, அதனை நாற்கரம் என்பர். ஆனால், வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல்…
வெருளி நோய்கள் 961-965: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 956-960: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 961-965 சங்கடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கட வெருளி.சங்கடங்கள் (Embarrassment) மனஅளவிலும் குமுக அளவிலும் பல தீமைகளை ஏற்படுத்தும். அவை மனச்சோர்வு, பதற்றம், அவமானம், தன்மதிப்புக் குறைவு, மற்றவர்களைப் பற்றிய பயம்,தோல்வி பயம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மேலும் சில சமயங்களில், குமுகத் தொடர்புகளைத் தவிர்ப்பதற்கும், செயல்திறன் வீழ்ச்சிக்கும் வழிவகுத்து, தனிப்பட்ட/கல்வி/தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, சங்கடங்கள் நேரும்பொழுதோ சங்கடங்கள் வரும் என எதிர்நோக்கும் பொழுதோ வெருளிக்கு ஆளாகின்றனர். இறையன்பர்கள் சங்கடங்களால் வரும் தீமைகளைத் தடுக்கும்…
வெருளி நோய்கள் 956-960: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 956-960 கடைப்பொருள் தள்ளி / சகடி (shopping cart) குறித்த வரம்பற்ற பேரச்சம் சகடி வெருளி.குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியுடன்(stroller) குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இங்கே தள்ளுவண்டி எனப் பயன்படுத்தவில்லை.வண்டி, உருடை, ஒழுகை, சகடம், சகடி முதலானவை வண்டியைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். சகடி என்னும் சொல்லை நாம் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. எனவே கடைக்குள் பொருள்களை எடுத்து வருவதற்காகப் பயன்படுத்தப்படும சக்கரங்கள் உள்ள தள்ளுவண்டியைக் கடைச்சகடி என்றும் சுருக்கமாகச் சகடி என்றும் குறிக்கலாம்.00 சக்கர நாற்காலி…
