நீல நிறத்தனவாய் நெய் கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக்கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக் கண் நில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக் கண் நின்னூக்கஞ் செய்தியேல் சித்தி படர்தல் தெளி வாழி நெஞ்சே ! வளையாபதி