கற்பக விநாயகர் கோயில், இலண்டன் : ஒன்பான் இரவு விழா
கற்பக விநாயகர் கோயில், இலண்டன் ஒன்பான் இரவு விழா பங்குனி 26, 2047/ 08.04.2016 முதல் சித்திரை 03, 2047 / 16.04.2016 வரை
இசைக்குயில் 2015, இலண்டன் – விண்ணப்பப்படிவம்
கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, இலண்டன்
83ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் 10, தவுனிங்கு தெரு(Downing Street) முன்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. 1983 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் நாள் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஆடி 07, 2046 / சூலை மாதம் 23 ஆம் நாள்…
வருங்கால மரபினரும் தமிழ்க்கல்வியும் – கருத்துப்பரிமாற்ற ஒளிப்பதிவு, இலண்டன்
வருங்கால மரபினரும் தமிழ்க்கல்வியும் கருத்துப் பரிமாற்றம் உயர்வாசற்குன்று முருகன் ஆலயம் இலண்டன் ஒளிப்பதிவு வைகாசி 09, 2046 மே 23, 2015
ஐரோப்பாவின் தங்கத்தமிழ்க்குரல் போட்டிகள்
பார்வையும் செயற்பாடும் ஐரோப்பியத் தங்கத் தமிழ்க்குரலுக்கான பாடல் போட்டி நிகழ்ச்சியை லிபாராவின் ஆதரவுடன் பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவன(ஐ.பி.சி.)த் தொலைக்காட்சி வழங்க இருக்கின்றது. நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு வெற்றியாளர்களுக்கு மாபெரும் மதிப்புடன் பெரும் தொகையான பரிசுகளையும் வழங்க இருக்கின்றது ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இந்தப் போட்டியின் மூலம் சிறந்த ஐரோப்பிய தமிழ்ப் பாடகர்களை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளது ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இறுதிப் போட்டியில் உலக அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் கலந்து போட்டியாளர்களைத் தெரிவு செய்ய உள்ளார்கள். தொடர்புகளுக்கும், விண்ணப்பங்கள் பெறுவதற்குமான தொலைபேசி இலக்கங்கள்….
தமிழ் இலக்கியக் கலைவிழா
உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை உலகத் தமிழ் மையம், இலண்டன் மலேசியத் தமிழ்ச்சங்கம் மலேசிய இந்தியப் பண்பாட்டுக் குழு தமிழ் இலக்கியக்கலைவிழா மார்கழி 10, 2014 / திச.25,2014 சென்னை -28
தமிழ்க் கலைகள் பாதுகாப்புப் போராட்டம்.
இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும் தமிழ்க் கலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம்! இலங்கையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகள் நாங்கள். சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் ஏகபோக அரசுகளாலும் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் கூட வணிகமாக்கப்படும் அவமானகரமான சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அபகரிக்கப்படும் தமிழ் மண்ணில் உலகின் பல்தேசிய நிறுவனங்கள் தமது பேரரசை நிறுவிக்கொள்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள-பௌத்தக் குடியேற்றங்களும், மறுபுறத்தில் பல்தேசிய வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் தமிழ் அடையாளத்தை அழித்து வருகின்றன. இவையெல்லாம் இனச்சுத்திகரிப்பைப் படம்போட்டுக் காட்டுகின்ன்றன. கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மை…