தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 256-266

(தமிழ்ச்சொல்லாக்கம் 245 – 255தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 256. விசித்திரம் – பேரழகு நூல்   :           அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) நூலாசிரியர்         :           கவித்தலம் துரைசாமி மூப்பனார். ★ 257. பிரசண்ட மாருதம் :           பெருங்காற்று (1909) இதழ் :           செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் – 71 கட்டுரையாளர்    :           வீராசாமி ஐயங்கார் ★ 258. சந்திபாதம்    –           முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் 259.அவதூதம்       –           புறங்கையாற் கீழே…

ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்

தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில்‌ இனிது நடாத்தி வரும்‌  அமைப்புகள்‌ பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த்‌ திகழ்வது ஒன்று. அது நூல்‌ என்பது. நூலின்‌ உள்ளுறை யாது? அறிவு. ஆதலின்‌, நூல் அமைப்பை அறிவுச்‌ சுரங்கம்‌ என்று கூறலாம்‌. நூல்கள்‌ பல திறம்‌. பல திறத்துள்‌ இரவியும் தனித்தும்‌ நிற்பது வரலாறு. வரலாறு வான்‌ போன்றது. வான்‌ மற்றப்‌ பூதங்களிற்‌ கலந்தும்‌, அவற்றைக்‌ கடந்து தனித்தும்‌ நிற்பதன்றோ? “ஊரும்‌ பேரும்‌” என்னும்‌ இந்‌ நூல்‌ வரலாற்றின்பாற்பட்டது. இவ்‌ வரலாறு தமிழ்‌ நாட்டின்‌…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி  சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். ‘ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?’ என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 245 – 255

(தமிழ்ச்சொல்லாக்கம் 238 – 244 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 245. அநுபந்தம்     –           பின்வருவது 246. அபிதானம்    –           பெயர் 247. அபிநயம்        –           கைமெய்காட்டல் 248. அவிழ்தம்       –           மருந்து 249. இலக்குமி       –           தாக்கணங்கு 250. இலக்கு            –           குறிப்பு 251. சுபாவம்          –           இயற்கை 252. கோமளம்       –           இளமை 253. சுதந்தரம்       –           உரிமை 254. திலகர் –          மேம்பட்டவர் 255. வருணாச்சிரமம்    –           சாதியொழுக்கம் நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்            3.     இனியசெந் தேனு மினியவான் பாலு                       மினியதீஞ் சுவைநிறைந் தியலும்                  கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங்                       கனிவரு முதலவின் பருப்பும்                  இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற்                       கினிமைநம் பாலிலை யென்று                  கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக்                       கைசெயுங் கனிதமிழ் மொழியே.            4.     உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக்                       குழறியுங் குழறியு…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 238 – 244

(தமிழ்ச்சொல்லாக்கம் 228 – 237தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 238. சுக்கிலம்        –           வெண்மை 239. கிருட்டிணம்   –           கருமை 240. பீதம்     –           பொன்மை 241. இரக்கதம்          –           செம்மை 242. அரிதம்            –           பசுமை 243. கபிலம்            –           புகைமை 244. இரத்தினம்    –           மணி நூல்   :           தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8. நூலாசிரியர்         –            தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி இராசு. (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி இரவு எல்லாரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்?…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 228 – 237

(தமிழ்ச்சொல்லாக்கம் 218 -227தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 228. தேசிய கீதம் – நாட்டுப் பாட்டு (1908) பரலி ச. நெல்லையப்பர் 229. அஞ்சலி           –           கும்பிடல் 230. அதீதம்            –           எட்டாதது 231. அபிநயம்        –           கைமெய் காட்டல் 232. சம்மதம்          –           உடன்பாடு 233. சுதந்தரம்       –           உரிமை 234. கனிட்டர்        –           இளையவர் 235. நிருத்தம்        –           கூத்து 236. இரத்தம்          –           புண்ணீர் 237. விவாகம்         –           மணம் நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம்        21.   காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு                  சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல்                  ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக்                  காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர்.            22.    அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே                  மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப்                  புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார்                  திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர்.            23.   ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ்                 …

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 218 -227

(தமிழ்ச்சொல்லாக்கம் 213 – 217 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 218. அசாதாரண தருமம்   –    சிறப்பியல்பு 219. ஆசீர்வாத ரூபம்     – வாழ்த்து 220. திருக்கு – அறிவு 221. நாநா    –          பல 222. பரசுபரம்      – ஒன்றற் கொன்று 223. பத்தியம் – பாடல் 224. பிரதியோகி  – எதிர்மறை 225. பிராக பாவம் – முன்னின்மை 226. விசேடம் – அடைகொளி 227. விட்சேபம்      – புடைபெயர்ச்சி நூல்   :           வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) குறிப்புரை…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 21 நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்கனற்புகைய வேகின்றான். . .     – புகழேந்தி முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது. அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்;…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 213 – 217

(தமிழ்ச்சொல்லாக்கம் 208-212தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 213. GLAND- உமிழ்நீர்க் கோளம் கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவற்றில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன. நூல்   :           சரீரவியவசேத சாத்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15 நூலாசிரியர்                     டி. ஆர். மகாதேவ பண்டிதர் ★ 214. தத்தம் –           கொடுக்கப்பட்ட பொருள் 215. சூதிகாகாரம்            –           பிள்ளை பெறும் வீடு 216. திகுதிகு           –           சுடுகடு நூல்   :           சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை (1907)…