(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

ஆட்சியரிடம் பழகும் பொழுது

 கடைப்பிடிக்க  வேண்டிய  முறைகள்.

 

  1. அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க,

     இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார்.

        மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல்,

        நெருங்காமல் ஆய்ந்து பழகு.

 

  1. மன்னர் விழைய விழையாமை, மன்னரால்

     மன்னிய ஆக்கம் தரும்.

     ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை,

        நிலைக்கும் நன்மைகள் தரும்.  

 

  1. போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின்,

     தேற்றுதல் யார்க்கும் அரிது.

      ஆட்சியார் ஏற்காத பெரும்குற்றங்கள்

        செய்வார், தப்பவே முடியாது.

      .

  1. செவிச்சொல்லும், சேர்ந்த நகையும், அவித்(து)ஒழுகல்

     ஆன்ற பெரியார் அகத்து.

        காதுக்குள் சொல்லல், ஐயப்படுமாறு  

        சிரித்தல் பெரியார்முன் வேண்டா.  

 

  1. எப்பொருளும் ஓரார், தொடரார்,மற்(று) அப்பொருளை

     விட்டக்கால் கேட்க மறை.

        எப்பேச்சையும் ஒட்டுக் கேட்காதே;

        கேட்காதே; சொன்னால், கேட்டுக்கொள்.

 

  1. குறிப்(பு)அறிந்து, காலம் கருதி, வெறுப்(பு)இல,

     வேண்டுப வேட்பச் சொலல்.      

        குறிப்பை, காலத்தை ஆராய்ந்தபின்,

        வேண்டியதை விரும்பும்படி சொல்

 

  1. வேட்பன சொல்லி, வினைஇல, எஞ்ஞான்றும்,

     கேட்பினும் சொல்லா விடல்.      

        வேண்டியன, சொல்லு; வேண்டாவற்றைக்,

        கேட்டாலும் சொல்லாது விட்டுத்தள்ளு.        

 

  1. இளையர், இனமுறையர், என்(று)இகழார், நின்ற

     ஒளியோ(டு) ஒழுகப் படும்.

         ‘இளையார், உறவார்’என இகழாது,

         தக்க மதிப்போடு நடக்க.

 

  1. “கொளப்பட்டேம்” என்(று)எண்ணிக், கொள்ளாத செய்யார்,

      துளக்(கு)அற்ற காட்சி யவர்.            

          “ஆட்சியார் மதிக்கிறார்” என்பதால்,

          பேரறிஞர் தகாதன செய்யார்.  

 

  1. “பழையம்” எனக்கருதிப், பண்(பு)அல்ல செய்யும்

     கெழுதகைமை, கேடு தரும்.

        “நெடுநாள் நண்பர்”எனப், பண்புக்கேடு

         செய்யும் நட்புஉரிமையும் கேடு.

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 071. குறிப்பு அறிதல்)