(மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014 தொடர்ச்சி)

 thiruvalluvamaalaiyin_melaanmai

then-honey01

10.2. இறையனாரதுநிறைபாடல்— 03

  • சொல்தொடர்:

என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.

  • பொருள்உரை

     எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள்.

  • நுட்பங்கள்
  • சொல்: தேன்

தேனின்மருத்துவக்குணங்கள்

  •      கண்பார்வையைத்தெளிவாக்கும்
  •     ]இருமலைத்தீர்க்கும
  •   குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும்
  •      குருதியைத்தூய்மைப்படுத்தும்
  •      கொழுப்பைக்குறைக்கும்
  •      இதயத்தின்ஆற்றலைக்கூட்டும்
  • தேன்உடல்நோய்களைத்தீர்க்கும்.
  • திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது அதிகாரம் மருந்து.
  • தேன் சுவைக்கச்சுவைக்கத் தெவிட்டும்.
  • திருக்குறள் சுவைக்கச் சுவைக்கச் சுவைகள் கூடும்; தெவிட்டாது;   இனிக்கும்.
  • தேன்மரங்களில், மலைகளின் உச்சிகளில் இருக்கும்.

   திருக்குறளும் உச்சியில் இருக்கும் உயர்அறப் பெருநூல்.

  • தேன் பருப்பொருள் வடிவ மருந்து.
  • திருக்குறள் நுண்பொருள் வடிவ மருந்து..
  • தேன்மனநோயைத்தீர்க்காது.
  • திருக்குறள்மனநோய்களையும்தீர்க்கும்.
  • தேன்இனிக்கும்; நல்ல வண்ணத்தது; இயற்கையாது.    .
  • திருக்குறள் படிக்கப்படிக்க இனிக்கும்.

   பல்வகை ஒலிவண்ணங்களால் நல்லிசை தருவது.

   மனிதனுக்குத் தேவையான இயற்கையான / இயல்பான

   வழிகளையும், நெறிமுறைகளையும் காட்டுவது.

  • சொல்தொடர்: நின்றுஅலர்தல் 
  • பொருள்உரை

   மலர்ந்துநிலைத்துநிற்றல். அதாவதுகூம்பல்இல்லாதது.

  • நுட்பம்
  • திருக்குறள் அன்று மலர்ந்தது; இன்றும் மலர்ந்த நிலையிலேயே   உள்ளது. என்றும் மலர்ந்த நிலையிலேயே இருக்கும். திருக்குறளும் கூம்பல் இல்லாதது.
  •  சொல்தொடர்: வள்ளுவன்வாய்ச்சொல்
  •   நுட்பங்கள்

   திருக்குறளைத் திருவள்ளுவர் ஒருவரே செய்திருக்கமுடியாது; பலர் பாடிய குறட்பாக்களைத் திருவள்ளுவர் தொகுத்தார் என்றெல்லாம் சொல்வார்க்கு வள்ளுவன் வாய்ச்சொல் [இறையனார்பாடல் — 03] என்னும் சொல் தொடரில் பதிலின் பதிவு உள்ளது. அதாவது, திருவள்ளுவரது வாயிலிருந்து வந்ததுதான் திருக்குறள் என்பதும், அது தொகுப்புநூல் அன்று என்பதும் அச் சொல்தொடர் நுட்பமாக அறிவிக்கின்றது.

  • இக்கருத்தை நுட்பமாவும், நேரடியாகவும், வலியுறுத்தும்   திருவள்ளுவமாலைப்பாடல்தொடர்கள்
  • வள்ளுவன்வாயது –– நாமகள் பாடல் — 01
  • வள்ளுவனார்தாம்அளந்தகுறள் — பொன்முடியார் பாடல் — 14
  • வள்ளுவர் வாய்மொழி — மாங்குடிமருதனார் பாடல் — 24
  • வள்ளுவர்ஓதியஇன்குறள் — பெருஞ்சித்திரனார் பாடல் — 32
  •   வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள் — நரிவெரூஉத்தலையார் பாடல் — 33
  • வள்ளுவர்வாய்மொழி — செயலூர்க்கொடுங்கண்ணனார் பாடல் — 42
  • வள்ளுவனார் ஓதுகுறள் — வண்ணகஞ்சாத்தனார் — பாடல் 43
  • வள்ளுவனார் தம்வாயால் கேளாதன எல்லாம் கேட்டு –– கொடிஞாழல்மாணி பூதனார் பாடல் — 50
  • வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா —மதுரைப்பாலாசிரியனார்பாடல் — 52
பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன்

 – பேரா.வெ.அரங்கராசன்

(மணக்கும்)