ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் “பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள் 2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/01/nighazhambalvizhaa05.jpg)
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/01/nighazhambalaathoornilaiyamvizhaa28.jpg)
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/01/nighazhambalaathoornilaiyamvizhaa29.jpg)
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/01/nighazhambalaathoornilaiyamvizhaa30.jpg)
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/01/nighazhambalaathoornilaiyamvizhaa31.jpg)
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/01/muthiraimakkalmembaattuvinaiyakam.jpg)
![முனைவர் இல.அம்பலவாணன்,](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/01/padamambalavanan.jpg)
Leave a Reply