(வெருளி நோய்கள் 1506-1510 : தொடர்ச்சி)

கூரிய முனை உள்ளபொருள்கள் மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் நுனை வெருளி.
“முல்லை வைந் நுனை தோன்ற இல்லமொடு” எனப் புலவர் குறுங்குடி மருதனார் (அகநானூறு:4:1) முல்லைஅரும்பின் கூரிய முனையை நுனை என்கிறார். 2.
கூற்றம் அஞ்சும் கொல்நுனை எஃகின் இளையானும் (சீவக சிந்தாமணி 1.361)எனத் திருத்தக்க தேவர், கூற்றுவனும் நடுங்கும் கொல்லும் முனையுடைய வேல் ஏந்திய இளைஞன் கந்துக் கடன் எனச் சொல்லும் பொழுது வேல் முனையை நுனை என்கிறார். .
“வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெந் நுனைப் பகழி மைந்தர்” (சீவக சிந்தாமணி:2:27).
வேடர்கள் வில் குழைத்துச் சிந்தின விருப்பமுடைய அம்புகளின் கொடிய முனையைக் குறிக்குமிடத்து நுனை எனப் பயன்படுத்தி உள்ளார்.
இவ்வாறு இலக்கியச் சான்றுகள் பல உள்ளன. எனவே கூரிய பொருள்கள் மீதான அச்சத்தைக் குறிக்கையில் நுனை என்னும் சொல்லைப்பயன்படுத்தி நுனை வெருளி எனலாம்.
belளnē, என்னும் பழங்கிரேக்கச்சொல்லின் பொருள் ஊசி. இங்கே கூர் முனை.
00

நூலகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூலக வெருளி.
ஆராய்ச்சித்திறமை குறைவாக இருப்பவர்களும் அதனை மறைக்க வேண்டும் என்க் கருதுபவர்களும் நூலகப் பதற்றத்திற்கு ஆளாகி நூலக வெருளிக்கு ஆளாகிறார்கள். நூலகர் மீது அச்சமும் வெறுப்பும் உள்ளவர்களுக்கும் நூலகத்தின் மீது தேவையற்ற பேரச்சம் வருகிறது.
நூல் வெருளி(bibliophobia) உள்ளவர்களுக்கு நூலக வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

புத்தகத்தின் மீது தேவையின்றி வரும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் நூல் வெருளி எனப்படும்.
கம்பரின் இராமாயணப் பாடல்கள் சிறப்பாக இருப்பதை அறிந்து தாம் பாடிய இராமாயணப்பாடல் சுவடிளை ஒட்டக்கூத்தர் அழித்தாரல்லவா? இதனைப் புத்தக வெருளியில் சேர்க்கலாமா?
biblion என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் புத்தகம்
biblia என்னும் இடைக்கால இலத்தீன் சொல்லின் பொருள் புத்தகம்
00

புத்தகத்தைத் திரைப்படமாகப் பார்ப்பது குறித்த வரம்புகடந்த பேரச்சம் நூல் காணுரை வெருளி – Visulibo phobia
படவடிவில் காட்சியாக நூல்களைப் படிப்பதால் முதலில் நூல்பட (video book)வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் படம் – ஓவியம் எனத் தவறாகப் பொருள்கொள்ள நேரிடும் என்பதால் என இப்பொழுது காணுரை வெருளி எனக் குறித்துள்ளேன்.
00

நூறாயிர எண்/100,000 குறித்த வரம்பற்ற பேரச்சம் நூறாயிர எண் வெருளி.
இலட்சம் என்னும் சொல் பழக்கத்திற்கு வந்து விட்டாலும் நூறாயிரம் என்பதே சரி.
00