தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.

பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்து
மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருட்டிணகுமார்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன்
சொல்லின் செல்வர் விருது – சூரியா சேவியர்
சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சீவிராயர்
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை – திங்களிதழ்
தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு. அரசேந்திரன்
உமறுப்புலவர் விருது – நா. மம்மது
கி.ஆ.பெ. விருது – முனைவர் ம. இராசேந்திரன்,
கம்பர் விருது – பாரதி பாசுகர்
சி.யு.போப்பு விருது – ஏ.எசு. பன்னீர்செல்வம்
மறைமலையடிகள் விருது – சுகி.சிவம்
இளங்கோவடிகள் விருது – நெல்லைக் கண்ணன்
அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான. அலாய்சியசு


மேலும், இந்தாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை உரூ1 இலட்சத்தில் இருந்து 2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. கூடுதலாக, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவார்கள்.