மாநில வளைகோல் போட்டி : திருநகர் அணி வெற்றி
மதுரை திருநகர் வளைகோல் மன்றம் சார்பில் வளைகோல் வீரர்கள் பாலசுப்பிரமணியன், செயசிங், பழனியாண்டவர் மெய்யப்பன் ஆகியோர்களது நினைவுச் சுழற் கோப்பைக்கான 15– ஆம் ஆண்டு மாநில அளவிலான வளைகோல் போட்டி பிப்ரவரி 5 அன்று காலையில் தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள முதன்மை நகரங்களைச் சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடின. முதல் நாளன்று காலையில் வாடிப்பட்டி ‘எவர்கிரேட்’ வளைகோல் மன்ற அணியும், இராசபாளையம் பெடட் பிரன்சு அணியும் களத்தில் இறங்கி மோதின. அதில் வாடிப்பட்டி எவர்…
பொள்ளாச்சியார் திருந்தமாட்டாரா? தமிழ்க்கொலையை நிறுத்த மாட்டாரா?
பொள்ளாச்சியார், வள்ளலார் கொள்கையைப் பரப்பும் அருள் உள்ளம் கொண்டவர். ஆனால், தமிழ்த்தாய்மீது அருள் இல்லாதவர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் நெறி பரப்புபவர், அயல்மொழிகளால் வதைக்கப்பட்டு வாடும் தமிழன்னை மீது பரிவு காட்ட வேண்டாவா? மாறாகத் தமிழைப் பாராட்டி ஆரியத்தை முன் நிறுத்துவதையே கொள்கையாகக் கொண்டவர். ஆரியத்தை அடைவதற்குரிய பாதைதான் தமிழ் என்பது அவரது வழிமுறை. தமிழ்க் கோப்பையில் ஆரிய நஞ்சு தருவதில் வல்லவர். எனவே, அவரிடம் இதனை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால், அவரின் நெருங்கிய வட்டம் தமிழ் எழுத்துவடிவங்களைச்…
ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு
“தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா? அப்பாவும் நானும், முன்பே எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!” “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!” “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே…
இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா
சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு. இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும். சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு. 1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய…
மண் பறித்த மானம்! -இளையவன் செயா
விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக் கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு நேத்தாசியைப்பெற்று வளர்த்த வங்கமண் இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும் பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக் கழையாக நினைத்தொடித்த கவிஞர் பிழையில்லா இரவீ ந்திரநாத் தாகூர் பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை வேட்கையால் வீறுகொண்டு கெடுதலையே செய்யும் கேடர்களை வெற்றிகொள்ள வீரமுழக்கமிட்ட வீரர்கள் வற்றிப் போகாதமண் வங்கமண் !…
இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்
சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே…
ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ
இராசபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்க, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ இலங்கை அதிபர் இராசபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத்தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார்: மதிமுக வரலாற்றில் நடந்த 21 பொதுக்குழுக்கூட்டங்களை விட 22- ஆவது பொதுக்குழு மிகவும் சிறப்பான பொதுக்குழுவாக…
கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..
வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா? விடைகள்: வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய…
இதுதான் மக்களாட்சியா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக் கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல் வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர். இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும் கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில் அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப் பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன் தன்மையாலா? வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம்,…
நாய்க்கும் கிளிக்கும் தோழமை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஒலிமடா பகுதியில் கணபதி என்பவர் வசிக்கிறார். இவர் பப்பி என்னும் நாயையும் ரோசி என்னும் கிளியையும் வளர்த்து வருகிறார். நாய் கம்பித்தடுப்பு உடைய கூண்டுபோன்ற பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் பப்பி/நாய் இருந்த கூண்டிற்கு ரோசி/கிளி சென்றுள்ளது. உடனே பப்பி/நாய் வெறியுடன் ந்த பப்பி, ரோசி/கிளியைக் கடிக்க முயன்றது. விர்ரென்று பறந்து ரோசி உயிர் தப்பியது. மீண்டும் ஒரு முறை பப்பி கூண்டிற்கு ரோசி சென்றது. ஆனால், இந்தமுறை அமைதியாக இருந்தது. இதையடுத்து, நாட்கள் செல்ல..செல்ல….
பன்னாட்டுக் கருத்தரங்கம்-தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள்
அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம். தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச்சு 27,28 – 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தொடர்பிற்கு முனைவர் துரை.மணிகண்டன் அலைபேசி எண்: 9486265886 http://www.manikandanvanathi.blogspot.in/2014/01/blog-post.html
“தென்றல்” சிறுகதைப் போட்டி
தென்றல் சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்காணுமாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு: $300 இரண்டாம் பரிசு: $200 மூன்றாம் பரிசு: $100 நகைச்சுவை, குமுகாயம், அலுவலகம், அறிவியல் என்று எதைப்பற்றியும் சிறுகதைகள் எழுதலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, ஈகம்(தியாகம்), கொல்லாமை போன்ற உயர்பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது. ஒருவர் 3 கதைகளுக்கு மிகாமல் அனுப்பலாம். உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள் பங்குகொள்ள…