தேனிப் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருட்டு

தேனி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இக்காலம் கோயில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் இப்பகுதியில் தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா என எந்த விழாவாக இருந்தாலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் கோயில்திருவிழாவின்போது வண்ண வண்ண விளக்குகள், சாலையோரம் குழல்விளக்குகள் போன்றவை கட்டப்படுகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுகிறது….

அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)

தனியார் பள்ளிப்பேருந்துகளில் அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டிப் பகுதிகளில் தனியார் பள்ளிப்பேருந்துகளில் அளவுக்கதிமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் பேரிடர் நேர்ச்சி ஏற்படும்   கண்டம் உள்ளது.   தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வேல்நகர், தண்ணீர்ப்பந்தல் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.   தனியார்பள்ளிகளில் கும்பகோணம் இடர்நேர்ச்சி ஏற்பட்டபின்பும், சென்னையில் பள்ளியூர்திகள் இடர்நேர்ச்சிகளுக்கான பின்பும் அரசு சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதன் படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன ஆய்வு மேற்கொண்டு ஊர்திகளைச்…

தாய்மொழி நாளில் கல்வியியக்கப் பேரணி

பெருந்தகையீர் வணக்கம். *தமிழ்வழியே கல்வி! *தமிழ்வழிப் படித்தோர்க்கே வேலை! *தமிழ்நாட்டிற்க்கே கல்வி உரிமை! எனும்முழக்கங்களோடு தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது, தோழமைகள்அனைவரும் கட்சி இயக்க வேறுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைவோம், தமிழ்நாட்டிற்க்கான கல்வியை உருவாக்கும், கல்விக்காக ஒரு மக்கள் இயக்கத்தைஉருவாக்குவோம். நன்றி தொடர்புக்கு: தோழர் பொழிலன்:8608068002 தோழர் திருமலை தமிழரசன்:9962101000

தேவதானப்பட்டிப் பகுதியில் மின்னியக்கி மூலம் தண்ணீர்த் திருட்டு

தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, அ.வாடிப்பட்டி பகுதிகளில் மின்னியக்கி மூலம் தண்ணீர் திருடப்படுவதால் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லும் நிலை தடுக்கப்படுகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள வைகை அணைப்பகுதியில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் மூலம் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டப்பகுதிகளில் வேளாண் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கானகாணி(ஏக்கர்) பரப்பளவில் வேளாண்மை நடைபெற்று வருகிறது.   திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நெல், கரும்பு, தக்காளி, கத்திரிக்காய் போன்ற…

தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவர்கள் தங்கள் வேளாண் பணியை விட்டுவிட்டுத் தொழில்நகரங்களை நாடிச்சென்றனர். ஒரு சிலர் கூலி வேலைக்காக அருகில் உள்ள ஊர்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். தற்பொழுது மஞ்சளாறு அணை, வைகை அணை போன்ற அணைகள் பாசன வசதிக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகிறது. இதனால் உழவர்கள் தங்கள்…

தேனிப் பகுதியில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தேனிப் பகுதியில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி பகுதிகளில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் இடர்ப்படுகின்றனர். தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் 22 ஆம்நாள் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பலகாரம் செய்யும் பணியை வீடுகளில் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாகத் திருமணம் ஆன இணையர்களுக்குத் தாய்வீட்டிலிருந்து இனிப்பு வகைகள் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதற்கு தாலநெய்(பாமாயில்) இன்றியமையாது வேண்டப்படும். ரேசன்கடைகளில் கடந்த சில மாதங்களாகத் தாலநெய்(பாமாயில்)…

தீர்வல்ல தற்கொலை!

தற்கொலை தீர்வாகுமா ?   அண்மைக் காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. உலக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அஃதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கையானது கொலைகள் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.   உலகில் வாழும் 5% பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில்…

விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு

தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு-மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. தேனிப் பகுதியில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, செயமங்கலம், முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகைஅணை, மேல்மங்கலம் பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், திண்காரை(சிமிண்ட்டு) நிறுவனங்கள், தனியார் துணிக்கடைகள், தனியார் நகைக்கடைகள் ஆகியவை பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்களிடம் எந்த வித உரிமமும் பெறாமல், அரசிற்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் விளம்பரங்கள் செய்கின்றனர். மேலும் கண்ணைக் கவரும் வகையில்…

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை உயர்வு

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், செயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இப்பொழுது கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் புதுமணத்தம்பதிகள் தலைதீபாவளிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தலை தீபாவளி, திருவிழாக்கள் இணைந்து வருவதால் நாட்டுக்கோழி விற்பனை சூடுபிடித்துள்ளது.   கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தனர். அதன் பின்னர் இறைச்சிக் கோழி வருகையால் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தது.   இந்நிலையில் தற்பொழுது தென்னந்தோப்புகளிலும், பண்ணை வயல்களிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து…

குறுங்காலப் பயிருக்கு மாறும் தேனி

      தேவதானப்பட்டி பகுதியில் பருவமழை ஏமாற்றிவருவதால் குறுகிய காலப்பயிர்த் தொழிலுக்கு உழவர்கள் மாறத் தொடங்கிவிட்டனர்.   தேவதானப்பட்டி பகுதியில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, வாழை, நெல் போன்றவை நடப்பட்டு வேளாண்மை நடைபெற்று வந்தது. இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பசுமை விரித்தாற்போல நெல்வயல்களும், வாழை மற்றும் கரும்பு விவசாயமும் நடைபெற்று வந்தது. இதனால் இப்பகுதியில் விளையும் பொருட்கள் தமிழகத்திற்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.    கடந்த மூன்று வருடங்களாகத் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய மழைகள் பொய்த்துவருகின்றன. இதனால்…

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் – நூலாடல்

  “தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்”  நூல் குறித்த உரையாடல்   சிறப்பு விருந்தினர்கள் ================= அபிலாசு இலக்சுமி சரவணகுமார் காவேரி ================ நூலாசிரியர் தாமிரா   நாள்: ஞாயிறு தேதி: ஐப்பசி 2, 2045 / 19-10-2014 நேரம்: மாலை 5:30 – இரவு 8:00   இடம் ===== பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041. தொலைபேசி: 4310 0442, 9382853646 http://www.panuval.com | buybooks@panuval.com https://www.facebook.com/events/650033921781467

புலிகள் மீதான தடை நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு!   இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) இலக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில்…

1 3 4 5 8