தேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர்.   மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை…

நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்

குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது. சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படம்  தரப்பட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் முத்து.செல்வன் உறுப்பினர் தொல்காப்பியர் சிலை அமைப்புக் குழு. செயல் தலைவர் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை

சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கான பரிசுப் போட்டி

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சிறுகதை/கவிதை/கட்டுரை நூல்களுக்கான 10ஆம் ஆண்டு பரிசளிப்புப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு 2013 முதல் 2015 ஆம் ஆண்டு சூலை வரை வெளியான நூல்கள் அனுப்பலாம். நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், முற்போக்கு சிந்தனைகளை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும். கவிதை நூல்கள் புதுக்கவிதையாகவோ, மரபுக் கவிதையாகவோ இருக்கலாம். கட்டுரை நூல்கள் தமிழ், வரலாறு, அறிவியல், இலக்கியம், சமூகம் சார்ந்தவையாக இருக்க வேண்டும். போட்டியில், முதல் பரிசாக உரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக உரூ.1000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும்…

எழிலனும் கனிமொழியும் ஈழப்போரில் இந்தியப்பங்கும்

  கனிமொழி கருணாநிதி கனிவுடன் உண்மையை மொழிய வேண்டும்.   விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி சசிதரன், இப்பொழுது வடமாகாண அவை உறுப்பினராக உள்ளார்.   இவர், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில், தன் கணவன் எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்தில் சான்றுரை வழங்குகையில், விடுதலைப்புலிகள் சிங்களப்படையிடம் சரணடைவது, பன்னாட்டு ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும் இந்தியாவும் பங்கு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   அப்பொழுது…

திராவிடத்தை வென்றிடுவோம்! தமிழியத்தை ஊன்றிடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  திராவிடத்தை வென்றிடுவோம் எனச் சொல்வது ஆரியக் குரலா என எண்ணத் தோன்றுகிறதா? ஆரிய மாயையில் இருந்து மட்டுமல்லாமல் திராவிட மாயையில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். தமிழின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அறிஞர் வேங்கடகிருட்டிணன், தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும்.(தமிழே முதன் மொழி. பக்.389) எனக்…

சிலப்பதிகார விழா – கருத்தரங்கம்

ஆனி 13, 2046 / சூன் 28, 2015  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மருதம் அரங்கு,  திருச்சிராப்பள்ளி தென்னகக் கலை இலக்கிய வளர்ச்சிக் குழு  

மெய்யப்பனார் நினைவேந்தல் – மாணாக்கர்களுக்குப் பரிசளிப்பு

பேரா.ச.மெய்யப்பனார் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் 10ஆம் வகுப்பில் தமிழ் முதல் மதிப்பெண் பெற்றோருக்குப் பரிசளிப்பு ஆனி 13, 2046 / சூன் 28, 2015  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 தலைநகர்த் தமிழ்ச்சங்கம்,  வண்டலூர், சென்னை 48

யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்

யானோர் காலக் கணிதம் கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்போன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரியென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்; ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்! உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்! வண்டா யெழுந்து மலர்களில்…

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்குக!

    திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!   நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிப்பகுதி, பனங்குடி ஊராட்சி, வாழ்மங்கலம் முதலான பகுதிகளில் சுற்றுப்புறச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கவேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாவண்ணம் தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழ்நிலை பாதுகாப்பு -மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நீரில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் சார்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.  …

பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 29 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 29 அங்கம்    :     ஆண்சிட்டு, பெண்சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (ஊடல் கூடல்) (சிட்டுகள் சின்ன சிரிப்பாலே சிறகால் அடித்து முகம் மலர்ந்து மெட்டுகள் போட்டு கீச் சீச் பண்பாடி ஆட்டம் போட்டுவிட) (கவிஞரும் அன்பும் கண்டதனைக் கண்களால் சிமிட்டிப் பேசியபின் புவியைப் பார்த்து மேல் நோக்கி புன்னகை வீசிய பொழுதினிலே)   (காட்சி முடிவு)  –  தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்