இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21 தொடர்ச்சி) 22 அமெரிக்காவின் அழைப்பு   இன்றைய உலகில் எங்கு நோக்கினும் போட்டியும் பூசலுமே நிலவுகின்றன. இவை நாட்டைத் துன்புறுத்தும் கேடான செய்திகளாம். அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சித் திறத்தால் நம்முடைய இனிய தமிழ்நாட்டில் அமைதியும் ஒழுங்கும் குடிகொண்டு விளங்குகின்றது. இந்நிலவுலகத்தின் இதனை அறிந்த மக்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நாட்டில் தலைவர் அண்ணா அவர்கள் காட்சி தர வேண்டும். களிப்பினை நல்க வேண்டும் என்றே விரும்பினர். அனைவரும் அழைக்க எண்ணுகையில் எதிலும் முன்றிற்கும் செல்வச் சிறப்புடைய…

மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா: “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்

  மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்   [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]    

யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ

யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] செந்தமிழினி பிரபாகரன்

அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை! ஆனால், . . . – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை!     சென்னை முதலான மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின்பொழுது “எல்லாம் நானே” எனச்  சொல்லும் முதல்வர் செயலலிதாவின் செயல்பாடின்மை குறித்த சினம்  அப்பகுதி மக்களிடம் இன்னும் உள்ளது; மதுவிலக்கு குறித்து நாடகம் ஆடினாலும் மது எதிர்ப்புப் பாடல்களைப் பாடியதற்காகச் சிறுமியர் மீதும் தேசப்பாதுகாப்பு எதிர்ப்பு  என்னும் வகையில் கடுங்குற்ற வழக்குகள் தொடுத்தமையால், மதுவால் துன்புறும் குடும்பத்தினரிடையே வளர்ந்து வரும்   வெறுப்பு;  தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் இயற்றிக் கொண்டே, அடைக்கலமாக வந்த ஈழத்மிழர்களை அடக்கியும்…

பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாள் விழா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு” சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி கோ.பாரதி, புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!     மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் பொதுத்துறைப் பரிமாற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி உரூபாய்! இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாளர்களும், அலுவலர்களும் நடத்திய ‘மின்சார ஊழல்’ எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது! ஆய்வு, எழுத்து,வருணனை: சா.காந்தி வடிவம், இயக்கம்: சா.காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன் ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணக்குமார் படத்தொகுப்பு: கா.கார்த்திக் படைப்பு: தமிழ்நாடு…

17ஆவது சைவ மாநாடு, இலண்டன்

 சித்திரை 17 , 2047  / ஏப்பிரல் 30   2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை இலாக்சுபோர்டு பள்ளி அறக்கட்டளை   சிறப்பு விருந்தினர்:                சிவஞான பாலையா சுவாமிகள்    சித்திரை 18, 2047  / ஏப்பிரல்  மே 1, 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றத்தின் விழாக்கள், சென்னை

சித்திரை 13, 2047 / ஏப்பிரல் 26, 2016 மாலை 6.00 தாமரைத்திரு ஔவை சண்முகம் 104 ஆவது பிறந்தநாள் விழா சோழன் தி.க.பகவதி நூற்றாண்டு விழா தமிழ்ச்சான்றோர் விருது வழங்கல்  நூற்றாண்டு நினைவு விருது வழங்கல் கலைைமேதைகள் விருது வழங்கல் திருவுருவப் படங்கள் திறப்பு குறும்படம் திரையீடு தி.க.ச.கலைவாணன் தி.க.ச.புகழேந்தி

இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு

  இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு   சித்திரை 24 & 25, 2047  /  மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.   நண்பர்களே!   இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு  மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8  நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…

பாரதிதாசன் 126ஆவது பிறந்தநாள் விழா, புதுச்சேரி

சித்திரை 16, 2047 / ஏப்பிரல் 29, 2016 காலை 10.00 அனைத்திந்தியத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் விருது வழங்கல் முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் இதயகீதம் இராமாநுசம் புலவர் இரா.இராமமூர்த்தி

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! காரியம் முடிந்தவுடன் கைகழுவும் கயவர்மேல், காரி உமிழ்ந்தாலும் தவறில்லை உமிழுங்கள்! சீரிய சிந்தனையில் சமநிலையைக் கொள்ளுங்கள், சீறிடும் கோபத்தை நெஞ்சுக்குள் வையுங்கள், கூரிய ஆயுதமது கைவிரல்தான் காணுங்கள், குறிவைத்துச் சரியாக அதைநீங்கள் பாய்ச்சுங்கள், வீரியம் இல்லாத விதைகளை விலக்கிவிட்டு, வறுமையை நீக்கும்நல் விதைகளை விதையுங்கள்! திராவிடன் தமிழனெனும் வாதத்தைக் கடந்து, தீரமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நல்ல, தூயவன் யாரென்று தெளிவாக உணருங்கள்! தயக்கம் இல்லாமல், தாமதம் செய்யாமல், தமிழர்க்குத் தலைவனென அவனை ஆக்குங்கள்! சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! – (உ)லோக நாதன்

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! (உ)லோக நாதன்