மாணாக்கர் நலனுக்கான திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் கல்வி இரவு 2018
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு பெற்றுப் பண வசதியின்மையால் படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில் …
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41
ஆவணி 14, 2049 (வியாழக்கிழமை) 30.08.2018 மாலை 5.45 மணி கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை நவீன விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41 தலைப்பு: நானும் என் எழுத்தும் சிறப்புரை : அசயன்பாலா (சிறுகதை ஆசிரியர், திரைப்படம் குறித்த நூற்படைப்பாளர், திரைப்பட இயக்குநர்) அன்புடன் நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை
இ.கி.அ.(ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் இ.கி.அ.அகலிடம்(ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு) கிளை (உயர்நீதிமன்றம் எதிரில்), சென்னை-600001 செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 19, 2049 – செவ்வாய்க்கிழமை -4-9-2018 மாலை 6-00மணி அகலிட இ.கி.அ.(எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.)அரங்கம்
கலைஞர் ஆயிரம் – கவிதாஞ்சலி
ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கும் கலைஞருக்கான கவிதாஞ்சலி ஆவணி 22,2049 – 07.09.2018 காலை 9.00 முதல் இரவு 9.00 வரை எசு.பி.எசு.திருமண மண்டபம், சைதாப்பேட்டை, சென்னை 15
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் தமிழ்நூல் வெளியீடு – விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த ஆகட்டு 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா சென்னை இ.கி.அ.(ஒய்எம்சிஏ) திடலில் நடைபெற்றது. புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று( ஆவணி 11, 2049 -27.08.2018 அன்று) , 2017-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன. இவற்றுள் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘எங்கிருந்து தொடங்குவது’…
பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்றாலும் இது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவந்த துறைகளில்கூட, இணையப் பயன்பாடு, கணிணிப் பயன்பாடு ஆகிய காரணங்களால் தமிழ் ஒதுக்கப்பட்டு வருகிறது. இவற்றிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த முடியும். என்றாலும் தக்க வழிகாட்டியின்றியும், சோம்பல், ஆர்வமின்மை ஆகியவற்றாலும் ஆங்கிலப் பயன்பாடு பெருகி வருகிறது. இச்சூழலில் பதிவுத்துறையின் தமிழ்ப்பயன்பாட்டிற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். பதிவுத்துறையில் பிற துறைகளைப்போலவே தமிழ், ஆங்கிலம்…
கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? : தி.க.உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? : தி.க.உறங்குவது ஏன்? கடவுள் உருவச் சிலைகள் திருட்டுகள் குறித்துத் தாங்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் நேர்மையாக நடவடிக்கை எடுப்போம் எனச் சார்புரை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாளர்களா அல்லரா என்பதை மக்கள் அறிவார்கள். எனினும், தவறாகப் பாகுபடுத்தும் வரையறை மூலம் நேர்மையை அளவிட்டுப் பெருமை பேசக்கூடாது. நேர்மையாக வாழும் ஒருவர் தன்னை நேர்மையாளராகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், “நான் படித்தவன், நேர்மையாகத்தான் வாழ்வேன்”…
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41
ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018 மாலை 6.00 மணி இலக்கியச் சிந்தனை நிகழ்வு 578 கலைஞர் நினைவலைகள் திரு ப இலட்சுமணன் சிறப்புரை தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின் கை நிறையச் சோழி’கள்’ அறிமுகம் செய்பவர்கள் :- திருமதி பானுமதி திரு ஈசுவர் சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018
ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது. இந்த ஆயி மண்டப முகப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காரை விழுந்து சேதமடைந்ததால் சரிசெய்ய பாெதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டது. ஒப்பந்தக்காரர் மூலம் பணிகள் மேம்போக்காக அரைகுறையாகச் செய்யப்பட்டதன் விளைவாக ஒட்டப்பட்ட காரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது. இதற்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று…
மருத்துவ முகாம், திருமுல்லைவாயில்
ஆவணி 09, 2049 சனி 25.08.2018 முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை மத்தியப் பதின்நிலைப்பள்ளி வளாகம், தென்றல்நகர் மேற்கு, திருமுல்லைவாயில் மாபெரும் மருத்துவ முகாம் 8 ஆம் வகுதி மகளிர் குழுக்கள் மாஃபா அறக்கட்டளை சவீதா மருத்துவமனை
இராவண காவியச் சொற்பொழிவு & கலைஞர் கருணாநிதி படத்திறப்பு, புதுச்சேரி
ஆவணி 03, 2049 ஞாயிறு 19.08.2018 தொடர் பொழிவாளர் : முனைவர் க.தமிழமல்லன் கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு விழா பகுத்தறிவாளர் கழகம் புதுவை-தமிழ்நாடு
உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! வேட்டைக்காரன் காத்துக் கொண்டுள்ளான். பாய்ந்து குதறி எடுக்க நேரம் பார்த்துக்கொண்டுள்ளான். வேட்டை நாய்களையும் ஆயத்தமாக வைத்துள்ளான். குறி வைக்கப்பட்டவர்களுக்கு எதையும் எதிர்நோக்கும் வலிமையும் ஒற்றுமையும் இருப்பின் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த உண்மை ஒன்றும் மறைபொருளன்று. அறிந்திருந்தும் சிலர் வலையில் விழ விழைவதால் அனைவருக்குமே தீங்கு நேரும் பேரிடர் உள்ளது. இந்தச் சிந்தனையுடன் நாம் கட்டுரையைத் தொடருவோம்! மேனாள் முதல்வரும் அதிமுக தலைவியுமான செயலலிதா மறைந்த பின் பல நேர்வுகளில் அதிமுக ஒற்றுமை…