(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170 – தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 171-175

171. Abscondenceதலைமறைவு
அஞ்சியொளிதல்    
ஒருவர் தமது உறைவிடத்திலோ வெளியிடத்திலோ பதுங்கியிருத்தல் அல்லது சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிந்திருத்தல்
175. Absconderதலைமறைவானவர்
பதுங்கியவர்
அஞ்சியொளியுநர்  
நீதிமன்றப் பிடியாணையின் செயல்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு மறைந்து வாழ்பவர்.   (அஞ்சியொளியுநர் பற்றிய வெளிப்படை அறிவிப்பு குறித்து, கு.ந.ச.தொகுப்பு, பி. 82 கூறுகிறது.)
173. Abscondingதலைமறைவாகுதல்

அஞ்சியொளிதல்    அல்லது அழைப்பாணை பெறுவதில் இருந்து தப்பித்தல் போன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக ஒருவர் தமது உறைவிடத்திலோ வெளியிடத்திலோ தொடர்பிற்கு உரியவர் அறியாமல் பதுங்கியிருத்தல்.
174. Absconding debtorதலைமறைவுக் கடனாளர்
தலைமறைவுக் கடனாளி  

கடனை அல்லது கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டுள்ள கடன்வாங்கிய கடனாளி, கடன்தந்தவர் அல்லது கடன்தந்தவர்கள் பார்வையிலிருந்து அவர் இருப்பிடம் தெரிய இயலா அளவிற்கு வேறிடம் செல்லுதல்.  

கடனாளர்களிடமிருந்து வேண்டுமென்றே தன்னை மறைத்துக் கொள்ளும் கடனாளி.  

கடனைத் திருப்பச் செலுத்துவதற்காகக் கடன்தந்தவர்களிடமிருந்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்பவர்.
175. Absconding offenderதலைமறைவுக் குற்றவாளி,   
தலைமறைவாகப் பதுங்கி இருப்பவர் குற்றவாளி என்றால், தலைமறைவுக் குற்றவாளி ஆகிறார்.  
தலைமறைவானவர். சட்டத்தின் பார்வையில் “தலைமறைவாக” இருக்க, ஒருவர் தனது வீட்டை விட்டு ஓடியிருப்பது இன்றியமையாதது. என்றாலும் மறைவான இடம் அவரது சொந்த வீடாக இருந்தாலும், சட்டத்தின் செயல்முறையைத் தவிர்க்க அவர் தன்னை மறைத்துக்கொண்டால் தலைமறைவானவர் எனக் குறிப்பிடப் போதுமானது

. – கருதாரே எதிர் உ.பி் அரசு   [ Kartarey v. State of U.P., 1976 Cri.L.J. 13 (SC)= (1976) 1 SCC 172, (1975) SCC (Cri.) 803, (1975) Cri.L.R. (SC) 690.]   இப்போது “தலைமறைவு” என்பதன் பொருளுக்கு வருவோம். உச்ச நீதிமன்றம் செயேந்திர விட்ணு தாக்கூர் எதிர் மகாராட்டிரா மற்றும் மற்றொரு மாநிலம், [(2009) 7 SCC 104=(2010) 2 SCC (Cri) 500= (2008)108 CLT 761.] அந்தத் தீர்ப்பின் 40 மற்றும் 41 ஆம் பத்திகளில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-   “தலைமறைவு” என்ற சொல் பல அகராதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நாம் குறிப்பிடலாம்: பிளாக்கின் சட்ட அகராதி, கைது, வழக்கு அல்லது சட்டச் செயல்முறை சேவையைத் தவிர்க்க. மறைவாகவோ  திடீரெனவோ வெளியேறுதல் என்கிறது.  


தலைமறைவு”, “தலைமறைவர்”, “தலைமறைவாக இருத்தல்” என்ற சொற்களின்  நியாயமான முடிவு என்னவென்றால், ஒருவர் தனது வீட்டை விட்டு ஓடியிருக்க வேண்டிய தேவையில்லை;  சட்டப்பூர்வ நடைமுறையைத் தவிர்க்கும் நோக்கில் மறைந்திருந்தால் போதுமானது.  மறைந்திருக்கும் இடம் சொந்த வீடாக இருந்தாலும், சட்டத்தின் நடைமுறையிலிருந்து தப்பிக்க தன்னை மறைத்துக் கொண்டால் போதும்.
தற்போதைய சூழலில் மேற்கூறிய வார்த்தைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள பொருளைப் பயன்படுத்தினால், மனுதாரர் “தலைமறைவானவர்” என்று கருத முடியாது, அதனால் அவர் மீது குற்றச்சாட்டிதழ் பதியப்ப்டு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. – சந்தோசு குமார் மோகரனா எதிர் அறியப்படாதவர் (20.09.2013)Santosh Kumar Moharana @ vs Unknown on 20 September, 2013, ஒரிசா உயர்நீதிமன்றம், கட்டாக்கு(CRLMC No. 2609 of 2013)  
ஒருவர் தன் வீட்டில் மறைந்திருந்தாலும் மக்கள் மத்தியில் வீட்டை விட்டு ஓடிப்போனதாக ஒரு மாயையை உருவாக்குவதால், ஓடிப்போனவராகக் கருதலாம்.  
தலைமறைவுக் குற்றவாளியே குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றநடைமுறைத் தொகுப்பு, பிரிவு 82 இன் கீழ்  அறிவிக்கப்படும் குற்றவாளி(proclaimed offender) யாகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்