இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ்  மொழிகளின் தொன்மையை யறிவதற்கு அவற்றின் எழுத்துச் சான்றுகளும் (கல்வெட்டுகள், செப்பேடுகள்) இலக்கியங்களும் பெரிதும் துணை புரிகின்றன.   எகித்து நாட்டில் கி.மு. 6000 ஆண்டிலிருந்தே கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. கி.மு. 3700 முதல் கி.மு. 200 வரை எழுத்தாவணங்கள் தொடர்ந்து வந்துள்ளன.   அசீரிய  பாபிலோனியா நாட்டில் இலக்கியப் பொற்காலம் கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.   பெரிசிய நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இலக்கியத் தோற்றம் எழுந்துள்ளது.   பரதக் கண்டத்தில் ஆரிய…

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 5

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 4 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 5 மருத நிலம்‌ ஆறு நிலவளமும்‌, நீர்வளமும்‌ உடைய தமிழ்‌ நாட்டில்‌ நினைப்பிற்கு எட்டாத காலந்‌ தொட்டுப்‌ பயிர்த்தொழில்‌ பண்புற நடந்து வருகின்றது. பண்டைத்‌ தமிழர்‌ ஆற்று நீர்‌ பாயும்‌ அவல பரப்பைப்‌ பண்படுத்திப்‌ பயிர்‌ செய்து மருத நிலமாக்கினார்கள்‌. அருமந்த பிள்ளையைப்‌ பாலூட்டி வளர்க்கும் தாய்போல் மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்.49 காவிரியாற்றைப்‌ பொன்னியாறென்று புகழ்ந்தார்கள்‌; வைகையாற்றைப்‌  “பொய்யாக்‌ குலக்கொடி” 50 என்று…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 69

(குறிஞ்சி மலர்  68 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 பொன்காட்டும் நிறம்காட்டிப்பூக்காட்டும் விழிகாட்டிப்பண்காட்டும் மொழிகாட்டிப்பையவே நடைகாட்டிமின்காட்டும் இடைகாட்டிமுகில்காட்டும் குழல்காட்டிநன்பாட்டுப் பொருள் நயம்போல்நகைக்கின்றாய் நகைக்கின்றாய்பண்பாட்டுப் பெருமையெலாம்பயன்காட்டி நகைக்கின்றாய்.      — அரவிந்தன் கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட்டு துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.41- 1.6.43

 (இராவண காவியம்: 1.6.36- 1.6.40 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்          41.      தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர்                  வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத்                  தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும்                  திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர்.   42.      முத்தமி ழாய்தர முறையி னாக்கிய                  அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும்                  வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந்                  தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே.          43.     அந்நிலை யிருந்தநம் அருமைத்…

மணமக்கள் தமிழ்நடைப்பாவை – மார்க்கு இணையர் வாழ்கவே!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேத்தி தொல்தமிழ் எழுத்துருக்கள், சேது பிழை திருத்தர், பேராசிரியர் இலக்கணப் பேராசான், கலைஞர் அகரமுதலி எனப் பல முன்னோடி தமிழ்க் கணினிச் செயலிகளை உருவாக்கிய கணிஞர் வா.மு.சே. கவிஅரசன் – முத்துமாரி இணையர் திருமகள் தமிழ்நடைப்பாவைக்கும் திருநிறை செல்வன் மார்க்கு என்பாருக்கும் வரும் ஆவணி 24இல் (9-9-2022)  நடைபெறும் திருமண நிகழ்விற்குப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்  – பேரா.சுபத்திரா ஆகியோரின் வாழ்த்து திருமணம், முன்னதான வரவேற்பு ஆகியவற்றை இணைய வழியில்காண: சேது காணொலி இணையக் காட்சி : SethuWebTV- YouTube-Live                    https://www.youtube.com/channel/UCPFM6TRrAeu8GOFik0jY8Ewநேரலை நேரம் : திருமணம்              :…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 6

(உ.வே.சா.வின் என் சரித்திரம், 5 இன் தொடர்ச்சி) என் பாட்டனார் (தொடர்ச்சி) அப்போது மேலெழும் கோபத்தால் சிறிது நேரம் மௌனம் ஏற்படும். மறுபடியும் ஆரம்பிப்பார்: “அதை அம்மியிலே வச்சு நன்னா ஓட்டி ஓட்டி ஓட்டி ஓட்டி அரைக்கணும்” அந்த ‘ஓட்டி’ என்னும் சொல்லை அவர் பலமுறைசொல்லுவார். அப்படிச் சொல்லும்போது அவர் கைகளின் அபிநயத்தைப் பார்த்தால் உண்மையாகவே கத்தரிக்காய்த் துவையலை அரைப்பவர்கள் கூட அவ்வளவு சிரத்தை கொள்ள மாட்டார்களென்று தோற்றும். தாத்தாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு கொஞ்ச தூரம் போவேன். அதற்குள் மறுபடியும் அவர், “டே,…

தமிழ்நாடும் மொழியும் 4 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 3 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் பழைய கற்காலம் நினைப்பிற்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்னர்க் கதிரவனிடமிருந்து ஒரு சிறு பகுதி தெறித்து விழுந்தது. விழுந்த பகுதி படிப்படியாகக் குளிர்ந்தது. பிறகு அதிலே நீரில் வாழ்வன தோன்றின. பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழவல்ல உயிர்கள் தோன்றின. இவ்வாறு பல்வேறு வகையான உயிர்கள் தோன்றித் தோன்றி இறுதியிலே மனிதன் தோன்றினான் என அறிஞர் பலர் நமது தோற்றம் குறித்துக் கூறியுள்ளனர். தோன்றிய மனிதன் முதலிலே விலங்குகள் போல வாழ்ந்தான். வாழ்க்கையிலே சிறிது சிறிதாக முன்னேறினான். விலங்குகள் போல…

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 – சி. பா.  

(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3 தொடர்ச்சி) 3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 தமிழ் மலையென விளங்கியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாய் விளங்கி, மொழிக்கு வளம் சேர்த்தவர். தமது எழுத்தாலும் பேச்சாலும் சைவ சமயத்தின் பெருமைகளை நாடெங்கும் பரப்பியவர். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உரம் பாய்ந்த உடலும் உறுதி கொண்ட உள்ளமும் உடையவர். தமிழில் மட்டுமின்றி வடமொழி ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் புலமை நலம் சான்ற பெரியார் இவர். இவர்தம் எழுத்தும், பேச்சும்,…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி    தமிழ்க் குடும்ப மொழிகளுள் திணை எனும் பாகுபாடு உண்டு.  ஏனைய குடும்ப மொழிகளுள் இத் திணைப் பாகுபாடு காண்டல் அரிது.   இந்தோஐரோப்பிய மொழிகள் சொற்களின் இயல்புக் கேற்பப் பால் கூறும் முறையைக் கொண்டுள்ளது. பொருள் உயர்திணை ஆண்பாலைச் சார்ந்ததாய் இருக்கலாம். ஆனால் சொல் அஃறிணை ஒன்றன்பாலாய்க் கூறப்படும்.   இந்தோஐரோப்பிய மொழிகளுள் சிலவற்றுள் எல்லாம் உயர் திணையே; ஆண்பால் அல்லது பெண்பால் என்ற பகுப்புத்தான் உண்டு.  …

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர். கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது. யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம். எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர்…

வெற்றிச்சிங்கம் இலக்குவர்- மறைமலை இலக்குவனார்

வெற்றிச்சிங்கம் இலக்குவர் தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன …… தனதான சட்டத்துறை நீதித் துறை பொறியியல் நுட்பத்துறை ஆட்சித்துறை அறிவியல் ஒட்பம் பல தேர்ந்திடும் மருத்துவம் எனவோதும் புத்தம்புது கல்வித்துறைகளில் தித்தித்திடும் தமிழ்மொழி இடம்பெற நித்தம் வற் புறுத்திநம் அரசுடன் –போராடி பக்தவத்சலரது ஆட்சியில் மக்கள்திரள் தெருவினில் கூட்டியே தெள்ளத்தெளி தமிழில் பரப்புரை – செய்தாரே உச்சிக்கதிர் வெப்பச் சருகென மக்கள்நலன் கெட்டுத் தொலைந்திட ஒற்றைத்தனி மொழியா என இவர் —- கிளர்ந்தாரே விட்டுக் கொடுத்திடின் நாம்…

இலக்குவனார் நினைவேந்தல், 04.09.2022

தமிழ்க்காப்புக் கழகம் கி.இ.க.[ஒய்.எம்.சி.ஏ.] பட்டிமன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்    வரவேற்புரை:       முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர், கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம் ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர் திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி….