‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம்
‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம் கவிஞர் வேணு குணசேகரன் படைப்பில் 3 பாகங்கள் கொண்ட 1100 பக்கங்களில் களப்பிரர், முத்தரையர் கால ஆட்சிப் பின்னணியில் மன்பதை நீதிக்கான வரலாற்றுப் புதினம் பல்லக்குத் தூக்கி பல்லக்குத்தூக்கி நூல் வெளியீட்டின் முன்பதிவுத் திட்டம் நல்ல தாள், நேர்த்தியான அச்சு, உறுதியான கட்டமைப்பு, அத்தியாயங்களில் அழகிய ஓவியங்கள், 1/8 அளவில் ஏறத்தாழ 1100 பக்கங்கள் கொண்ட இந் நூலின் விலை உரூபாய் 1200/- ஆகும். முன்பதிவின் விலை: 5 படிகளுக்கு உரூபாய்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 68
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார். “எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது?…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1477 – 1487 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1465-1476 இன் தொடர்ச்சி) 1477. மனிதச் செய்திறனியல் பாதுகாப்பு, செயல் திறன் தொடர்பான மாந்தரின் பணிச்சூழல் ஆய்வு. இந்த இடத்தில் Engineering என்பதை பொறியியல் என்று கூறுவதை விடச் செய்திறனியல் என்பதே சரியாக இருக்கும். மனிதப் பொறியியல் / மனித உடற்கூற்றுப் பொறியியல் எனப் பிறர் கூறுவது பொருந்தாது. மனிதச் செய்திறனியல் எனலாம். பணிச்சூழலுடன் தொடர்புடையது என்பதால் இதனை ergonomics உடன் இணைத்து விடலாம். Human Engineering 1478. மனிதத் திறன்சார் பொறியியல் Human-Factors Engineering 1479….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 41
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 40 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறித்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள். அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1465-1476 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1452 – 1464 இன் தொடர்ச்சி) 1465. மறையிடர் பொருளியல் Risk – ஆபத்து,ஆபத்து காரணி, இழப்பு, இடர், அபாயம், அபாய நேர்வு, கெடு, கேடு, இன்னல், இடையூறு, இக்கு எனப் பல வகையாகக் குறிக்கப் பெறுகிறது. அதில் ஒரு இக்கன்னா இருக்கிறது எனப் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ள ‘இக்கு’ என்பதை நான் முதலில் பயன்படுத்தினேன். இதே சிந்தனை கொண்ட மற்றொருவரும் இச்சொல்லைப் பயன்படுத்தி வந்தார். இருப்பினும் இக்கு என்பதைக் கலைச்சொல் வடிவமாகப் பெரும்பான்மையர் கருதவில்லை. எனவே,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1452 -1464 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1434 – 1451 இன் தொடர்ச்சி) 1452. மருந்து வேதியியல் Medicinal chemistry 1453. பவ்வீ இயல் Coprology – மலத்தியல், கசட்டியல், மலத்தியல், மல இயல், சாண இயல், சாண வியல். சாண அறிவியல் எனப்படுகிறது. மாட்டின் மலம்தான் சாணம். சாணம், மலம் ஆகிய மூலப்பொருள் அடிப்படையில் , சாணவியல் , மலவியல் எனக் கூறுகின்றனர். இரண்டும் சரிதான். ஆட்டின் கழிவு பிழுக்கை, குதிரையின் கழிவு இலத்தி, யானையின் கழிவு இலண்டம் முதலான பிற உயிரினங்களின் கழிவுகளையும் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75
(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் 71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும். 72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும். அஞ்சிறைப் பொன்காற்…
மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடந் தருக! – இலக்குவனார் திருவள்ளுவன்
மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் தமிழறிஞர்களுக்கு இடந் தருக! கல்வித்துறை என்பது மாநில அரசுகளின் வரம்பிற்குட்பட்டது. அதனைப் பொதுப் பிரிவாக மாற்றிய ஒன்றிய அரசு நாளடைவில் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக மாற்றி வருகிறது. இதனால் தேசிய மொழிகள், தேசிய இனங்கள் பாதிப்புறும் வண்ணம் கல்விக்கொள்கையை வகுத்துக் கொண்டு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் மாநில மக்களின் கல்விகளில் அதிகாரம் செலுத்தி அல்லல் படுத்தி வருகிறது. எனவே, இச்சூழலில் தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கைக் குழு என ஒன்றை அமைத்திருப்பது பாராட்டிற்குரியது. இத்தகைய…
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1281-1290)-இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1271-1280) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!திருவள்ளுவர்திருக்குறள்காமத்துப்பால்129. புணர்ச்சி விதும்பல் (தலைவனும் தலைவியும் புணர்ச்சிக்கு விரைதல்) 201. நினைத்தால் களித்தலும் கண்டால் மகிழ்தலும் கள்ளுக்கில்லை, காமத்திற்கு உண்டு.(1281)202. பனையளவு காமத்தின்பொழுது தினையளவும் ஊடாதே.(1282)203. தன் விருப்பப்படி நடந்தாலும் கணவனையே கண்கள் தேடுகின்றன.(1283)204. ஊடச் சென்றேன் நெஞ்சோ கூடியது.(1284)205. கண்ணருகே மைதீட்டி தெரியாததுபோல், கணவர் அருகே குறைகள் தெரிவதில்லை.(1285)206. நாயகரைக் கண்டால் பிழை காணேன். காணாதபோது பிழையன்றி வேறு காணேன்.(1286)207. இழுத்துச் செல்லுதலை அறிந்தும் வெள்ளத்தில் பாய்வதுபோல்,பயனின்மை அறிந்தும் ஊடுவது ஏன்? (1287)208….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1434 – 1451: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1424-1433 இன் தொடர்ச்சி) 1434. மர வளைசலியல் Dendroecology – மரவரை சுற்றுப்புறவியல் எனக் குறிக்கப்படுகிறது. வரலாற்று சுற்றுச்சூழல் செயல்முறைகளை பகுப்பாய்வு செய்ய மரக்காலவியலைப் பயன்படுத்தும் அறிவியல் என்றும் கடந்தகால, நிகழ்கால வனச்சூழல் மாறுபாடுகளை மதிப்பிடுவது என்றும் இவ்வறிவியல் குறித்து விளக்கு கின்றனர். மரத்தின் அடிப் படையிலான புறவியல் என்பதாலும் ecology / வளைசலியல் என நாம் வரையறுத்துள்ளதாலும், மர வளைசலியல் – Dendroecology எனலாம். Dendroecology 1435. மரவரைத் தொல்லியல் மரவரை என்பது மரத்தில் உள்ள காலங்காட்டும்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 67
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 66. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி “என்ன தெரிந்துவிட்டது?” என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். “சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?” என்றேன். மனைவி சிரித்தாள். “சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்” என்றாள். “உங்கள் வீட்டுக்காரர்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1424-1433 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1411 – 1423 இன் தொடர்ச்சி) 1424. மரபு உளவியல் Genetic Psychology 1425. மரபு நுட்பியல் Genetic Technology 1426. குடிவழி யியல் மரபுவழியியல், கொடிவழி, குலவழி, குலமரபு, கால்வழியியல், மரபுவரிசை யியல், குடிமரபியல், மரபியல் எனக் கூறுகின்றனர். Genetic-மரபியல் எனப்படுவதால் அதனை நீக்கி விடலாம். குடிமரபியல், மரபு வழியியல் என்றாலும் குழப்பம் வரலாம். கொடிவழி, குலவழி, கால்வழி என்பன ஒத்த பொருளுடை யனவே. எனினும் எளிமையாகக் குடி வழி > குடிவழியியல் எனலாம். Geneology/ Geneaology/Genealogy…
