பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும் – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும் ஏற்றத் தாழ்வுகளே என்நாட்டின் முகவரியா? ஏக்கப் பெருமூச்சே ஏழைகளின் தலைவிதியா? ஏட்டுச் சுரைக்காய்கள் விளைகின்ற நிலமாகி, ஏய்த்துப் பிழைப்போரின் ஏகாந்தக் களமாகி, எந்தை நாடிங்கு செம்மை இழக்கிறதே! ஏர்பிடிக்கத் தயங்குமொரு ஏமாளித் தலைமுறை, எதிலுமொரு பிடிப்பின்றி வாழுகின்ற மனநிலை, என்னஇங்கு நடக்குதென்று புரியாத பாமரர்கள், எண்ணற்றுப் பெருகிநிற்கும் பரிதாபச் சூழ்நிலை! எலும்புத் துண்டுகளை நாய்களுக்கு வீசி, எறும்புக் கூட்டத்தின் உழைப்பை விலைபேசி, எச்சில் துர்நாற்றம் வீசுகின்ற தாசி, எளிதாய்ப் பொன்பொருளைச் சேர்த்திடுதல் போலே, எள்ளளவும் மானமின்றிப் பொதுச் சொத்தைத்…

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பி

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! நீயே, செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை! வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில் செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை! உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம் இறவா மொழியால் எழுந்திடப் பாடினை! ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில் தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை! கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை! புதுவை பொரித்த புரட்சிக் குயிலே! எதுவும் யாரும் இணையுனக் கில்லை! ‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர் வினைசா வெனின்அச் சாநாள்…

500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது

20.04.16 அன்று வழங்கப்படவிருந்த பெருந்தோட்ட 500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம்  நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3021 பேரில் 820 பேர் பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு 27.04.2016 ஆம்  நாள் நியமனம் வழங்கவுள்ளதாகக் கல்லி  இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்தார். குறிப்பாக இந்த நியமனம் 20.04.2016 அன்று வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டருந்தது. சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்துச் சிக்கல்கள், மடல்…

தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! – கவிக்கோ ஞானச்செல்வன்

தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்! பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன்றில் றில்லை! சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை! மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ? மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும்…

செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்! – கெர்சோம் செல்லையா

செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்!   மக்களாட்சி என்ற பெயரில், மானம் விற்போர் ஆடுகிறார். சக்கையாக ஏழையைப் பிழிந்து சாற்றை எடுத்து ஓடுகிறார்! செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற செந்தமிழ் நாட்டார் வாடுகிறார். எஃகு போன்ற துணிவு இல்லை; இதனால் அழுது பாடுகிறார்! -கெர்சோம் செல்லையா

யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகத்தின் விழாவும் நிகழ்வுகளும்

‘யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவைஅகம்’ அமைப்பின் ‘தாயக நூலகத் திறப்பு விழா!’   புங்குடு தீவில் (பன்னிரண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் மன்றம் தொடங்கப்பட்டுப் பதினான்காம் ஆண்டு நிறைவு விழாவையும் புங்குடு தீவு ‘தாயகம் குமுகச் (சமூக) சேவைஅகம்’ அமைப்பு தொடங்கப்பட்டு நான்காவது ஆண்டு நிறைவு விழாவையும் முன்னிட்டு ‘புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகம்’ அமைப்பினால், புங்குடு தீவு சிரீகணேசக் கல்விக்கூடத்துக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் ‘புங்குடுதீவு தாயகம் நூலகம்’ என்னும் பெயரில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேற்படி விழா சித்திரை 17, 2047 /…

பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்?   தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மட்டைப் பந்தாட்டம் இன்று(சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016) நடந்து முடிந்துள்ளது. விளையாட்டைப் பரப்புவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டத்தக்கன. 1 வாரம் முன்னதாகவே கலைநிகழ்ச்சிகள் மூலம் விளம்பரப்படுத்தியதும் விழா நாளன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியதும், பிற மாநிலக் கலைஞர்களைத் திருமணத்திற்கு அழைப்பதுபோல் சந்தித்துத் துணிமணிகள், வெற்றிலை, பாக்கு மதிப்புடன் அழைத்ததும் என நன்றாகவே திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் அடிப்படையே ஆட்டம் கண்டதால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை….

படிப்பதால் மட்டுமே விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்! – கவிஞர் மு.முருகேசு

புத்தகம் படிப்பதால் மட்டுமே குமுகாய விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்!     – உலகப் புத்தக நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு   வந்தவாசி.ஏப்.17. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால்மட்டுமே  குமுகாய(சமூக) விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு குறிப்பிட்டார்.      இவ்விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.  ஊர்…

குவிகம் இலக்கிய வாசல் – முதலாமாண்டு நிறைவு விழா

 முதலாம் ஆண்டு நிறைவு விழா “இயல் இசை நாடகம்”   சித்திரை 10, 2047 ஏப்பிரல் 23, 2016  சனிக்கிழமை    மாலை 6.00 மணி    தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் (அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து ) காந்தி மண்டபம் சாலை, சென்னை 600025 இன்றைய தமிழ் இலக்கிய உலகின் சிகரங்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பள்ளி மாணவர்கள்  வழங்கும் இசையும் கவிதையும்  வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. நாடகம்  “மனித உறவுகள்”   திரு கோமல் சாமிநாதன் அவர்களின்…

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு, இலண்டன்

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு சித்திரை 11, 2047 (24.4.2016) ஞாயிறு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம், 200-ஏ(A), வளைவுவழிச் சாலை, உயர்வாசல் குன்று, இலண்டன், என்6 5பிஏ. [200A, Archway Road, Highgate Hill, London, N6 5BA]. அண்மைச் சுரங்க வழி: உயர்வாசல் அல்லது வளைவுவழி. அன்புடையீர், வட மாகாணக் கல்வி வளர்ச்சி குறித்து மாநாடு ஒன்றினை நடத்த நாம் திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இம்மாநாட்டில்…

கனடியத் தமிழ்மகளிர் மாமன்றம் – நூல் வெளியீட்டு விழா, சென்னை

  ‘மடுவின் மனத்தில் இமயம்’  நூல் வெளியீடு நூலாசிரியை : சரசுவதி அரிகிருட்டிணன் சித்திரை 10, 2047 / ஏப்பி்ரல் 23, 2016 மாலை 5.00

சாதியப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்

அம்பேத்கருடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்   புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சித்திரை 01, 2047 – ஏப்பிரல் 14, 2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. எளிய மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது….