பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாள் விழா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு” சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி கோ.பாரதி, புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம்! இப்பொழுது இணையத்தில்!     மின் உற்பத்தியில் நுழைந்த தனியார் நிறுவனங்கள், நாட்டின் பொதுத்துறைப் பரிமாற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி உரூபாய்! இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாளர்களும், அலுவலர்களும் நடத்திய ‘மின்சார ஊழல்’ எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப்படம் இது! ஆய்வு, எழுத்து,வருணனை: சா.காந்தி வடிவம், இயக்கம்: சா.காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன் ஒளிப்பதிவு: எம்.ஆர்.சரவணக்குமார் படத்தொகுப்பு: கா.கார்த்திக் படைப்பு: தமிழ்நாடு…

17ஆவது சைவ மாநாடு, இலண்டன்

 சித்திரை 17 , 2047  / ஏப்பிரல் 30   2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை இலாக்சுபோர்டு பள்ளி அறக்கட்டளை   சிறப்பு விருந்தினர்:                சிவஞான பாலையா சுவாமிகள்    சித்திரை 18, 2047  / ஏப்பிரல்  மே 1, 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றத்தின் விழாக்கள், சென்னை

சித்திரை 13, 2047 / ஏப்பிரல் 26, 2016 மாலை 6.00 தாமரைத்திரு ஔவை சண்முகம் 104 ஆவது பிறந்தநாள் விழா சோழன் தி.க.பகவதி நூற்றாண்டு விழா தமிழ்ச்சான்றோர் விருது வழங்கல்  நூற்றாண்டு நினைவு விருது வழங்கல் கலைைமேதைகள் விருது வழங்கல் திருவுருவப் படங்கள் திறப்பு குறும்படம் திரையீடு தி.க.ச.கலைவாணன் தி.க.ச.புகழேந்தி

இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு

  இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு   சித்திரை 24 & 25, 2047  /  மே 07 & 08, 2016 மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) இரண்டு நாட்களும் காலை, நண்பகல், இரவு உணவு, தங்குமிடம், பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.   நண்பர்களே!   இயற்கை வேளாண்மை – இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு  மேற்குறித்தவாறு, மே மாதம் 7,8  நாள்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூா் (மாவட்டம்)…

பாரதிதாசன் 126ஆவது பிறந்தநாள் விழா, புதுச்சேரி

சித்திரை 16, 2047 / ஏப்பிரல் 29, 2016 காலை 10.00 அனைத்திந்தியத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் விருது வழங்கல் முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் இதயகீதம் இராமாநுசம் புலவர் இரா.இராமமூர்த்தி

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! காரியம் முடிந்தவுடன் கைகழுவும் கயவர்மேல், காரி உமிழ்ந்தாலும் தவறில்லை உமிழுங்கள்! சீரிய சிந்தனையில் சமநிலையைக் கொள்ளுங்கள், சீறிடும் கோபத்தை நெஞ்சுக்குள் வையுங்கள், கூரிய ஆயுதமது கைவிரல்தான் காணுங்கள், குறிவைத்துச் சரியாக அதைநீங்கள் பாய்ச்சுங்கள், வீரியம் இல்லாத விதைகளை விலக்கிவிட்டு, வறுமையை நீக்கும்நல் விதைகளை விதையுங்கள்! திராவிடன் தமிழனெனும் வாதத்தைக் கடந்து, தீரமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நல்ல, தூயவன் யாரென்று தெளிவாக உணருங்கள்! தயக்கம் இல்லாமல், தாமதம் செய்யாமல், தமிழர்க்குத் தலைவனென அவனை ஆக்குங்கள்! சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! – (உ)லோக நாதன்

தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! (உ)லோக நாதன்

தலைவன் என்றே நினைக்காதே! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தலைவன் என்றே நினைக்காதே! அன்னையின் கருவில் சிதைவுற்றுப் பிறந்த, பிண்டம் போலக் கிடக்காதே! உன்னையும் தெருவில் நிறுத்தும் ஒருவனை, தலைவன் என்றே நினைக்காதே! மந்தையில் நரிஎனப் புகுந்திடும் நீசர்கள், மண்டையை உடைக்கவும் தயங்காதே! சந்தையில் மறியென வாக்கிற்கு உயரிய, விலை வைப்பார்கள் வீழாதே! சந்தனம் என்றே சொல்லிச் சொல்லி, சேற்றை வாரி இறைப்பார்கள்! உன்தடம் அழித்து உரிமையைப் பறிக்க, ஊளை இடுவார் மயங்காதே! பந்தயக் குதிரையைப் போலத் தேர்தலில், பாய்ந்திடும் தலைவர்கள் எல்லாரும், உன்முதுகேறி ஓடுகிறார்! அதில், பொய்முகம் கொண்ட பேயர்களை, பின்முதுகாம் புற…

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்   சென்னையில்  சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18.4.2016  காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அலுவலகம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமை கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இரா.அதியமான், கவிஞர் வா.மு.சேதுராமன்  முதலான பலர் கைதாயினர்.

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…