காணிக்கை

விடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது – என்றாலும் என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க உயிர் நீத்த உறுப்புகள் இழந்த உறவுகள் பிரிந்த உடைமைகள் பறிகொடுத்த ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும் தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள்

  – வெற்றிச்செழியன் செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம் தமிழ்வழிக் கல்வி        “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம்.  உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.

அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்

 – வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர்.  தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்

காலத்தால் அழியாத தமிழ்நாடன்

கவிஞர் சேலம் தமிழ்நாடன் [மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர்,] தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை. சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர்,

தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !

– கவிஞர் இரா .இரவி எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! ‘கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று ‘  திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் ! கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் !

ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது

– முனைவர் வெ .இறையன்பு, இ.ஆ.ப. [சிங்கப்பூர்   ஆசிரியர் கழகமும் அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து மதுரையில் 11.11.2013 அன்று நடத்திய சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் தொடக்கவுரை] தொகுநர் :  கவிஞர் இரா .இரவி தாய்மொழி என்பது ஆழ்மனதுடன் தொடர்புடையது. தமிழை நுகர , செம்மைப்படுத்திக்கொள்ள வந்துள்ளீர்கள் .தமிழில் மேன்மையும், புலமையும் பெறுவீர்கள். ஒவ்வொரு நொடியையும் அடர்த்தியாக்க முடியும். என்னை வளர்த்த குமுகாயத்திற்கு  எதையாவது செய்ய வேண்டும் நோக்கத்தில்

முப்பது நாள்களில் தமிழ்

அன்புடையீர், வணக்கம். தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டு கல்விப்பணியில் நான் கண்டறிந்தவை இவை ) தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பதற்கான பாடத்திட்டங்களும், அணுகுமுறைகளும் என்னிடம் உள்ளன. இதனைக் கற்பிக்க…

தொல்காப்பிய விளக்கம்

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முன்னுரை நம் இனிய செந்தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகத்  தொல்காப்பியம் கருதப்படுகின்றது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். வடமொழிப் பாணினியின் காலமாம் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும், தென்மொழித் திருவள்ளுவரின் காலமாம் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்ததாகும் தொல்காப்பியம்

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 1

 வரலாற்று நோக்கு பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழக் கூடிய தொல்காப்பியம்

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் 1. நாட்டு இயல்  அ. நாடு*  நாடு-விரும்பு: மக்கள் விரும்பி வாழுமிடம் நாடு எனப்பட்டதுபோலும். அந்த நாட்டில் வாழ்வோர் தமக்கு வேண்டியவற்றைத் தேடி வருந்தாமல், பிற நாடுகளை எதிர்பார்த்து  ஏங்கியிராமல் மக்களுக்கு வேண்டியன யாவும் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றிப்பிற நாடுகளை எதிர்பார்த்து வாழும் வகையில் செல்வக் குறைபாடு உடைய நாடு, நாடு ஆகாது

மாமூலனார் பாடல்கள் – 1

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள்  சங்கமாகக் கூடித் தமிழைப்போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொகைநூல்களைக் கொண்டது. இவை படிப்போர் உளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 1

 – தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்     அறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில்  கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் அரங்கேற இருந்தன. தமிழ்க்காப்புக்கழகமும் தமிழ் எழுத்துக் காப்பியக்கமும்