“கருமவீரர் காமராசர்” கட்டுரைப் போட்டி – வல்லமை

  உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கருமவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும்.   இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்….

கண்மைகாயு முன்கருகிட்ட கண்மணிகள் ! – – இளையவன் செயா (மா.கந்தையா)

பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046    ஆடவை ( ஆனி ) 30                15–07–2015 பத்தோடு  ஓராண்டு பறந்தோடி  விட்டதுகாற்றாய் இத்தரையில்  இன்னா  இனியதறியா   இளம்குருத்துகள் புத்தகமும்  கையுமாய் புத்தறிவுப்  பெறப்போனவர்களை பத்திஎரிந்த  தீநாக்கு பதம்பார்த்து  விட்டதே ! குடந்தைப்  பள்ளியிலே மடந்தையர்பெற்ற  மலர்கள் இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே ! குடமளவு  கண்ணீரைக்  கொட்டினரே  மக்கள் தடம்மாறா  நினைவுகளைத் தரணிக்கு அளிப்போம் !  (16–07–2004 ) கருகிய …

தமிழ்ப்புலவர்கள் இயற்கை நுணுக்கம் அறிந்தவர்கள் – மலைமலையடிகள்

தமிழ்ப்புலவர்கள் இயற்கை நுணுக்கம் அறிந்தவர்கள்   இனிப்பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல்லாரும் உலக இயற்கைத் திறம் பிறழாமல், அதனை ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியுமுடையராயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம் மனவுணர்விற்கு இசைந்தவண்ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்த வைத்துத் தம் நினைவினை விரிவு செய்து விளக்கி மகிழ்ந்தனர். இம்முறைமை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச் சிறப்பினதாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர் 0 என்னும் ஆங்கில மொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு…

‘தமிழ்க்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!

  ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும். 1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு: 1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய் 2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய் 3 ஆம் இடம் ஐயாயிரம்…

தாய்த்தமிழும் மலையாளமும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 27, 2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 3   ஒருவேளை மலையாள மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது; இப்பொழுது அவ்வாறில்லை எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வகுப்பு மலையாளப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு: பாவ பாவ பாவ நோக்கு                 புதிய புதிய பாவ நோக்கு கய்ய வீசும் பாவ நோக்கு                 கண்ணிமய்க்கும்…

தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம் – மறைமலையடிகள்

தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம்!  தொன்றுதொட்ட சிறப்பும் இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரொடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்…

தேவதானப்பட்டியில் இலவசப் பொருள்கள் வழங்கல்

  தேவதானப்பட்டியில் இந்தியத் தவ்கித் சமாத்து சார்பில் பொதுமக்களுக்கு இலவசப் பொருள்கள் வழங்கப் பெற்றன.

தமிழைக் கட்டாயமாக்குக! – நா.மகாலிங்கம்

தமிழைக் கட்டாயமாக்குக!  மேடைதோறும் ‘தமிழ்! தமிழ்!’ என்று முழங்கிவிட்டு, தமிழ்நாட்டில் தமிழ் அழிந்து வரும் அவல நிலையைச் சிறிதும் உணராமல் இருந்து வருகிறோம். இதிலிருந்து தமிழ்நாட்டை உடனடியாக மீட்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் அது யார் நடத்தும் பள்ளிக் கூடமாக இருந்தாலும், ‘கான்வெண்டாக’ இருந்தாலும் அவற்றில் எல்லாம் தமிழ்தான் பாடமொழியாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரைக் கட்டாயமாகத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் பாடம் நடத்தக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். இதற்காகத் தமிழ் நாட்டில்…

உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு – வி.உருத்திரகுமாரன்

உலகத்தமிழ்ப் பேராயிரம் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? தலைமையாளர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !    உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.   குறிக்கப்பட்ட இலக்குடன் யூலை 15வரை ஈட்டப்பட்டுள்ள 12 இலட்சம் கையெழுத்துகள் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தலைமையாளர், இக்கையெழுத்து இயக்கம் செயன்முனைப்பு குறித்து விரிவான…

இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்

இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலிருந்து சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனீசு என்பவர், தாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வாகக் கேள்விப்பட்டதாகப் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றபோது, “ஈராக்ளிசுக்குப் பாண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத், தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தான். அங்கு அவனது ஆட்சிக்குட்டப்பட்டவர்களை முந்நூற்று அறுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து, ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குக் கப்பம் கட்ட வேண்டுமென்ற கட்டளையிட்டான்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில்…

குமுக வளர்ச்சி 4 – முனைவர் இராம.கி.

 இதுவரை கூறிய இந்த உள்கட்டுமானங்களை எல்லாம் நாம் சரிசெய்யவில்லையென்றால், நிலத்தடி நீர் கிடைப்பதிற் சிக்கல் ஏற்படுமென்றால், நம் ஊர்ப்பக்கங்களில் ஏற்படும் வீட்டுமனைத் தேவைகள் வெடித்துச் சிதறும் குமிழ்போல ஆவது வெகுதொலைவில் இல்லை. இப்பொழுது நம் ஊர்கள் சற்று தகைவோடு(stress)தான் உள்ளன. நம் ஊர்ப்பக்கங்களில் பொதுவாகவுள்ள பொருளியல் உந்துகளைச் சற்று எண்ணிப்பார்ப்போமா? இவற்றில் நிறைகளும் இருக்கின்றன; குறைகளும் இருக்கின்றன. முதலில் நிறைகள்: சுற்றுவட்டாரத்திலுள்ளோர் தேடிவந்து வாங்கும் நிலைவெள்ளிப் பாத்திரங்களின் கணிசமான உருவாக்கமும் விற்பனையும் அதே போல வைர, தங்க நகைகளின் உருவாக்கமும், விற்பனையும், செட்டிநாட்டுப் பருத்திச்…