கணிணித்தமிழ் – இணைய இதழ் : அறிமுகம்
தமிழ்க்கணிமை சார்ந்த ஆராய்ச்சிகள் பலகாலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல கட்டற்ற மென்பொருட்களும், தனியுரிம மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கணிணி அறிஞர்கள், பல்வேறு கணிணி மொழிகளில் தமிழுக்காக நிரலாக்கம் செய்து வருகின்றனர். பல்வேறு தமிழ் அறிஞர்களும் பல வகையில் பங்களித்து வருகின்றனர். இந்த முயற்சிகள் அனைத்தையும் இணைக்கும் பாலமே இந்த இணைய இதழ். இங்கு நீங்களும் பங்களிக்கலாம். நீங்கள் பங்களிக்கும் தமிழ்க் கணிமை சார்ந்த திட்டங்கள், உரையாடல்கள், கருத்துகளை இங்கே பகிரலாம். எவ்வாறு பங்களிக்கலாம்?…
இனப்படுகொலை – ஆவணப்படம் வெளியீடு
அன்பார்ந்த தோழர்களே , உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் “இது,திட்டமிட்ட இனப்படுகொலை!” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனச்சான்றை உலுக்கும் வகையில் இயக்குநர்.வ.கவுதமன் அவர்களின் “இது, இனப்படுகொலையா இல்லையா?” எனும் நெருப்புப் படைப்பு சித்திரை 30, 2046, மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (ஆர்.கே.வி.படநிலையம், வடபழனி, சென்னை) வெளியாக உள்ளது….
ஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள்
ஆசிரியர்: என். சொக்கன், பெங்களூரு மின்வரி: nchokkan@gmail.com தளம் : http://nchokkan.wordpress.com வெளியீடு: இலவய மின்தமிழ்நூல்கள் [ FreeTamilEbooks.com ] புத்தக எண் – 165 உரிமை – எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அனைத்துவகைக் கணிணி,கைப்பேசிகளில் கட்டணமின்றிப் பதிவிறக்கலாம். மின்னூலாக்கம் : சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com
தமிழ்மக்கள் ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்! – கவிமணி தேசிகவிநாயகம்
என்றும் தமிழ்மக்கள் யாவரும் ஒத்திணங்கி, ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்; – அன்றெனில், மானம்போம், செல்வம்போம், மானிட வாழ்விற்குரிய தானம்போம், யாவும்போம், தாழ்ந்து. பண்டைத் தமிழர் பழம்பெருமை பாடிஇன்னும் மண்டை யுடைத்து வருந்துவதேன்? – அண்டும்இக் காலத்திற் கேற்றகல்வி கற்றுக் கடைப்பிடித்து ஞாலத்தில் வாழ்ந்திடுவோம் நன்கு. வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர்செய்வோம்; காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம் – பேணிநம் சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய்நாட்டுக்கே உழைப்போம்; சிந்தை மகிழ்ந்து தினம். தெய்வம் தொழுவோம்; திருந்தத் தமிழ்கற்போம்; செய்வினையும் நன்றாகச் செய்திடுவோம் – ஐயமின்றி எவ்வெவ் வறமும்…
கலைச்சொல் தெளிவோம் 175 – 184 (அறிவியல் துறைப் பெயர்கள்)
வேதியியல் – chemistry: தனிமம் சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்புகளையும் ஆராயும் இயைபியல் துறை. வேதிவகைப்பாட்டியல் – chemo-taxonomy: வேதிப் பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்த பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வுத் துறை. திரைப்படவியல் – cinematography: திரைப்படம் தொடர்பான நுணுக்கங்களை ஆராயும் துறை. மருத்துவ மரபணுவியல் – clinical genetics: நோயாளியை நேரடியாக உற்று நோக்கி உயிரியல் மரபுரிமையை ஆராயும் மருத்துவத் துறை. மருத்துவ நோய் இயல் – clinical pathology: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர், சளி முதலியவற்றை…
கலைச்சொல் தெளிவோம் 165 – 174 (அறிவியல் துறைப் பெயர்கள்)
வானியல் – astronomy : ஞாயிறு பிற கோள்கள் விண்மீன்கள் முதலிய வானில் உள்ளவற்றை ஆராயும் துறை வான இயற்பியல் – astrophysics : விண்வெளியில் உள்ளவற்றின் இயல்பையும் அவற்றால் காற்றுவெளியில் நேரும் நிகழ்வுகளையும் ஆராயும் துறை உயிரிய வேதியியல் – biochemistry: உயிரின் வேதிச்செயல்பாடுகளையும் வேதிப்பொருள்களையும் ஆராயும் துறை. உயிரிய வேதி வகைப்பாட்டியல் – biochemical taxonomy: வேதிப்பண்புகளின் அடிப்படையில் உயிரிகளைப் பாகுபாடு செய்யும் ஆய்வுத் துறை. உயிரிய மின்னணுவியல் – bio electronics : உடலில் மின்னணுக் கருவி அமைப்புகளைப் பதிய…
கலைச்சொல் தெளிவோம்! 164.பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி
கலைச்சொல் 164. பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி – araskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia வெள்ளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வெள்ளி மாழையையும், சிறுபான்மை வெள்ளிக் கோளையும் குறிக்கும் வகையிலேயே காணலாம். வெள்ளிக் கோளால் அமைந்த நாளே வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் நாள் அமையும் பொழுது வரும் பேரச்சமும், பிற கிழமையில் வரும் பதின்மூன்றாம் நாள் குறித்த பேரச்சமும் உள்ளன. அவை வருமாறு: பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி- Paraskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia . இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழா எங்கே உன் தாய்? – பாவலர் கருமலைத்தமிழாழன்
உறுதி ஏற்பாய் ! அன்னையினை இழிவுசெய்யும் தமிழா ! வீட்டில் அருந்தமிழைக் கொலைசெய்யும் தமிழா ! நாட்டில் உன்மொழியை ஏளனமாய்ப் பேசிப் பேசி உயர்மொழியைத் தாழ்வுசெய்து கீழ்மை யானாய் முன்னோர்கள் வழிவழியாய்ப் பேணிக் காத்த முத்தமிழில் பிறமொழியின் மாசைச் சேர்த்து விண்வெளியில் ஓசோனைக் கெடுத்த தைப்போல் விளைவித்தாய் ஊறுதனைத் தூய்மை நீக்கி ! வீட்டிற்குள் புதையலினை வைத்துக் கொண்டு வீதியிலே எச்சிலிலை பொறுக்கு கின்றாய் காட்டிற்கே எரித்தநிலா போன்று சங்கக் கவின்நூல்கள் வீணாகக் கிடக்கு திங்கே…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்
அனைவருக்கும், வணக்கம் ! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization,USA ) ஒருங்கிணைக்கின்றது. அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம். நாள்: வைகாசி 03, 2046 / 05/17/2015 – ஞாயிற்றுக் கிழமை நேரம்: மாலை 12.30 – மாலை 3.00 மணி (கிழக்கு நேரம்) [இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Pl,Sterling, VA 20165] – தரவு : நாஞ்சில் பீட்டர்
பாளமாய் ஆனதே நேபாளம்! – உருத்ரா
மலை மடிப்புக்குள்ளிருந்தும் மண் பாம்பின் சீற்றமா? பாளம் பாளமாய் ஆனதே நேபாளம். நசுங்கிய உடல்கள் திண்காரைப் பிணங்களாய் என்னே அவலம்!. செங்கல் நொறுங்கிய குவியல்களில் தொன்மைப்படிவங்களும் தொலைந்து கிடக்கின்றன. குரல்கள் அவிழ்க்கும் முன் உயிர்ப்பூக்கள் கூழாய்ப்போயின. ஊழிக்கூத்தின் உடுக்கைகள் கோவில்களில் அதிர்ந்து காட்டிய போதெலாம் கண்களில் ஒற்றிக்கொண்டோமே ஒத்திகை தான் அது என இன்று காட்டினானோ அந்த சிவன். எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல. கிடைக்கின்ற கைகளும் கால்களும் முழுக்கணக்கு காட்டும்போது நம் மூச்சடங்கி அல்லவா போகிறது பெரும் அதிர்ச்சியில். அந்த மக்களுக்கு நாம் தோள்…
தொடர்சொற்பொழிவு : மணிமேகலை நிறைவும் பெரியபுராணம் தொடக்கமும்
வேனில் விழா வாணாள் உறுப்பினர் அட்டை வழங்கல் விருது வழங்கல் சித்திரை 27, 2016 / மே 10, 2015 சென்னை (தலைநகர்த் தமிழ்ச்சங்க வளாகம்)
பெரியார் சாக்கரட்டீசு நினைவு விருது 2015
சித்திரை 29, 2046 / மே 12, 2015