கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia

கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia  மனைஅறிவியல், மருந்தியல், ஆகியவற்றில் agoraphobia திறந்தவெளி அச்சம் எனப் பயன்படுத்துகின்றனர். திறந்த வெளி என்பதை விடப் பெரு வெளி என்பதே பொருத்தம். திறந்த பெரு வெளியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் பெருவெளி வெருளி-agoraphobia கலைச்சொல் தெளிவோம்! 154. பேய் வெருளி-Phasmophobia/Spectrophobia  மாணா விரல வல் வாய்ப் பேஎய் (நற்றிணை : : 73: 2) ”பேஎய்க் கொளீஇயள்” இவள் எனப்படுதல் (குறுந்தொகை : : 263:5) பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே. (ஐங்குறுநூறு…

கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia; 1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia;152. மகவு வெருளி-Kiddophobia

கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம் பூண்டு வெருளி-Alliumphobia   கலைச்சொல் தெளிவோம்!1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia  பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர். பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பெண் வெருளி-Gynephobia/Gynophobia கலைச்சொல் தெளிவோம்! 152. மகவு வெருளி-Kiddophobia குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக்…

பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா

சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி “தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்”- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை சித்திரை 11, 2046 / ஏப்பிரல் 24, 2015 அன்றுநடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் கணினிகளில் தமிழின் அறிமுகத்தைப் பற்றியும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. மறைந்த திரு நா.கோவிந்தசாமி, இணையத்திற்கு தமிழை அறிமுகப்படுத்தியது நினைவுகூரப்பட்டது. [மென்பொருட்ளைக் கொண்டு தமிழ் கற்றல், கற்பித்தல் எப்படி என்பதைப் பற்றி மாணவர்கள் உரையாற்றுகின்றனர்.]…

தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்

சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொல்காப்பியர் ஆய்வு மையம் அறக்கட்டளை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகள் தமிழாலயம், சாமித்தோப்பு, குமரிமாவட்டம் தலைமை: கு.பச்சைமால் முன்தொகை அளிப்பவர் : வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கவுரை: புலவர் த.சுந்தரராசன் சிறப்புரை: பேராசிரியர் ஆறு அழகப்பன் பேராசிரியர் பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன்  

புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் மே நாள்

சித்திரை 20, 2046 / மே 03, 2015 புலவர் செம்பியன் நிலவழகன் தலைமையில் கவியரங்கம் புலவர்  கோ.பார்த்தசாரதி நடுவராக உள்ள பட்டிமன்றம் அழைக்கிறார் த.மகாராசன்

ஒலிபெயர்ப்பு தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல்

    தமிழ்ப்பின்னங்கள், சிறப்புக்குறியீடுகள் ஆகியவற்றின் ஒலிபெயர்ப்பு, தொடர்பான முன்மொழிவுகள்   பற்றிய கலந்துரையாடல் கூட்டம் தமிழக அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எப்.50 கூடம், முதன்மைக் கட்டடம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை 600 005 இல் சித்திரை 16, 2046 / ஏப்பிரல் 29,2016 காலை 10.30 முதல் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற்று கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துகளையும் பங்கேற்கும் விழைவையும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.   அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மணிகண்டன் (044 2844 9537), முனைவர் பாலாசி…

நேபாளத்தில் சீற்றமடா ! – சி. செயபாரதன், கனடா

  இமயத் தொட்டிலில் ஆட்டமடா !  இயற்கை அன்னை சீற்றமடா !  பூமாதேவி சற்று தோள சைத்தாள் !  பொத்தென வீழும் மாளிகைகள்  பொடி ஆயின குடி வீடுகள் !  செத்து மாண்டவர் எத்தனை பேர் ?  இமைப் பொழுதில் எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?  கட்டிய இல்லம், சேமித்த செல்வம்  பெட்டி, படுக்கை, உடுப்பு,  உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !  அந்தோ !  வேனிற் கால வாடைக் காற்றில், அழும் சேய்க ளோடு  தெரு மேடையில் தூங்குகிறார் !  வானமே கூரை…

சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது

சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது இயற்கை ஒலிகளையுடைய சுருங்கிய எழுத்துக்களை உடைமை. ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்களைப் பெருவாரியாக உடைத்தாயிருத்தல். சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும்போல் ஒற்றுமை உடைமை. தெளிந்த நடையையும், இனிய ஓசையையும், பா அமைதியையும் உடைமை. பகுதியும், அதனிற் தோன்றும் சொற்களும் மாறுபடாமை. காலம் இடம்தட்பவெப்பங்களால் மாறுபடாமை என்றும் அழியாப் புத்தழகு உடைமை. புது நூற்கள் யாத்தற்கு இயைபு உடைமை. பிறமொழிச் சொற்களை மொழி பெயர்த்தற்கு ஏற்ற திறன் உடைமை. பிறமொழி உதவியின்றி இயங்கும் ஆண்மையும், பலமொழிகளுக்குத் தாயாயிருக்கும் பெண்மையும்…

மொழிக்கல்வியும் மொழிக் கலப்பும் – ஏ.ஆதித்தன்

  சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கம். தன்னம்பிக்கைக்கும், புத்துருவாக்கத்திற்கும் வழிவகை செய்யாத கல்வி, வெற்றிடக் கல்வியாகவே கருதப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் தனிமனிதப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கருவிதான் கல்வி என நம்பப்படுகிறது. மாணவர்களை, வேலைச்சந்தைக்கு பயிற்சி அளிப்பதே கல்வி பயிற்றுவித்தல் எனவும், இதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களே கல்வி நிறுவனங்கள் எனவும் நம்பப்படுகிறது. பல்கலைப் பட்டங்கள், அறிவின் தேடலைவிட, அகந்தையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன. பட்டங்களை பெருமையாகக் கொண்டாடும் நாட்டில், கல்வியின் தரம் கசப்பாகக் கருதப்படுகிறது. மொழிதான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திச், சமூக…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-2)  சிக்கல் − 2 பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது!  ஒருவருடைய கையேட்டுப் படியை ஓர் அச்சகத்தின் பக்கங்களுக்குள் கொண்டுவருவது எளிதான செயல் இல்லை! இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் என்னைக் கிண்டல் செய்து குற்றம் சொன்னார்கள்! மக்களின் இந்த மாதிரிக் கிண்டலில் என்ன புதுமை? சில மக்கள் பிறரைக் குற்றம் சொல்லியும் கிண்டலடித்துமே பொழுதைப் போக்குகிறவர்கள் ஆச்சே!  …