தெற்றிக் காடுகளும் நாகலிங்க மரங்களும்

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் வைகைப்படுகையில் செங்காற்றால் உருவான தெற்றிக் காடுகளும்  காற்றில் அதிகக் கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும் நாகலிங்க மரங்களும்   பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழன் நிலத்தை 5 பிரிவுகளாகப் பிரித்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைத்தான். பாலை நிலம் போன்று அதே வேளையில் பாலை நிலம் அல்லாத நிலம்தான் தெற்றிக்காடுகள்.   தேனிமாவட்டத்தில் கள்ளிக்காடு, தெற்றிக்காடு, கோயில்காடு, பனங்காடு எனக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் பண்டைய காலத்தில் சிங்கம், புலி, கரடி, பருவிலங்கு (காண்டாமிருகம்) எனப் பல…

காசை கொடுத்துக் கருமாந்தரத்தை விலைக்கு வாங்காதீர்கள்!

   அன்றாடம் அதிகாலையில் எழுந்து இரவு வரை ஆங்கில வழிக்கல்வி, பள்ளியில் படிப்புச்சுமை அதன் பின்னர் சிறப்பு வகுப்பு; பெற்றோரின் தூண்டுதலால் தற்காப்புக்கலை(கராத்தே), ஒத்தியம்(ஆர்மோனியம்), நாட்டியம், பரதம், காணொளி ஆட்டங்கள் எனக் கசக்கிப்பிழியப்படல்: வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடச் சிறப்புப் பயிற்சி வகுப்பு என மாணவ, மாணவியர்களுக்கு அடுக்கடுக்கான வேலைகள். இதற்கிடையில் என்றாவது ஒரு நாள் விடுமுறை விட்டால் கூடப் பண்டைய காலத்தில் விளையாடிய கோலிக்குண்டு, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கிட்டிப்புள், மணல் விளையாட்டு, சடுகுடு, நீச்சல் போன்ற எந்த…

தேவதானப்பட்டியில் அப்துல்கலாமிற்கு இரங்கல் கூட்டம் – சிறப்புத்தொழுகை

  தேவதானப்பட்டியில் முன்னாள் குடியரசு தலைவர் ஆ.ப.சை.அப்துல் கலாம் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.   கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுக் கடைகள் அடைக்கப்பட்டன; சட்டைகளில் கருப்புத்துணி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் தேவதானப்பட்டி முசுலிம் சமாஅத்து, வணிகர்கள் சங்கம், அனைத்துக் கட்சிமுன்னணியினர் காந்தித்திடலில் அமைதிவணக்கம் செலுத்தினார்கள். அஞ்சலிக்கூட்டத்தில் தேவதானப்பட்டி பேரூராட்சித்;துணைத்தலைவர் பி.ஆர்இராசேந்திரன், தேவதானப்பட்டி சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் முதலான பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊர்வலமாகப் பள்ளிவாசலை வந்தடைந்தனர்.பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகையும், வழிபாடும் நிகழ்த்தப்பட்டன. இச்சிறப்பு வழிபாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பாப்புலர் பிரண்ட்டு ஆப் இந்தியா,…

மதநல்லிணக்கக் கட்டடங்கள் – வைகை அனீசு

மதநல்லிணக்கக் கட்டடங்கள்   இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள், தர்ஃகாக்கள், அகழாய்வுகள் மூலம் கண்டறிந்தவை, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வரலாற்று உருவாக்கத்திற்கு அடிப்படைச்சான்றுகளாய்…

இரம்சான் நோன்பை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி – வைகை அனிசு

 தேவதானப்பட்டியில் முசுலிம்சமாஅத்து இளைஞர்கள் விளையாட்டுக்குழுவும் இந்திய நன்மதிப்பு முன்னணியும்(பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா) ஆண்டுதோறும் இரம்சான் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி நடத்தி வருகின்றன.  தேவதானப்பட்டியில் உள்ள திப்பு சுல்தான் திடலில் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் கம்பு விளையாட்டு, சடுகுடு போட்டி, இசைநாற்காலி, ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி முதலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.   இந்நிகழ்ச்சிக்குப் பள்ளிவாசல் சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கினார். இவ்விளையாட்டுப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ,…

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 6 – வைகை அனீசு

(ஆனி 27,2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) 6 சட்டஅறிவு   இல்லாத பொதுத்தகவல் அலுவலர்கள்   தகவல் உரிமைச்சட்டத்தில் அதிகாரமிக்கவர் பொதுத்தகவல் அலுவலர். பொதுத்தகவல் அலுவலருக்குத் தகவல் உரிமை சட்டத்தைப்பற்றிய சட்ட விழிப்புணர்வும் சட்டஞானமும் தெரியவில்லை. தஞ்சாவூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கடந்த 6.6.2015 அன்று வணிக வரித்துறையில் பணிபுரியும் அருள் என்பவருடைய அலுவல் தொடர்பாகத் தகவல்களை வேண்டினோம். அதற்கு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ந.க.எண்3844-2015-ஆ6 என்ற மறுமொழி மடல் வந்தது.   அம்மடலில், “பிரிவு (8) ஒ. [8.j.] இன்படித் திரு.அருள்…

தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி மின்தடை

  தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர்   தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இதில் கடந்த வாரம் முதல் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அவ்வப்பொழுது இயக்கப்படும் மின்கருவிகள்,  உழவர்களின் மின்னியந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்பொழுது அதிக மின்அழுத்தத்துடன் வருகிறது. இதனால் தொலைக்காட்சிப் பெட்டிகள், தண்கலன், மின்…

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 5 – வைகை அனீசு

5 கடமை ஆற்றுவோர் ஒருபுறம்! கடமை தவறி அலைக்கழிப்போர் மறுபுறம்! பேரூராட்சிச் செயல் அலுவலர்கள் செயல்பாடுகள்     நாம் கேட்கக்கூடிய தகவலைத் தருவற்கு மாற்றாக தகவல் தர மறுப்பதற்குச் சில பிரிவுகளை வைத்துள்ளனர். அந்தப்பிரிவில் ஒன்றான “8(1) என்ற பிரிவின் கீழ் தகவல் தர இயலாது” எனக்காரணம் கூறித் தப்பித்துவிடுகின்றனர்.   பிரிவு8(1)( ஒ) [8(1)(j)] : தனிப்பட்ட ஒருவரைக் குறித்து நாம் கேட்கும் தகவல், பொதுச்செயல்பாடு அல்லது பொது நலனுக்காக எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில் உள்ள தகவலாக இருப்பின் அல்லது…

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 4 – வைகை அனீசு

(சூன் 28, 2015 இதழின் தொடர்ச்சி) 4 உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்   பிரிவு 24: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசால் நிறுவப்பட்ட உளவு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது எனப் பிரிவு 24 கூறுகிறது. இதில், 25 வகையான நிறுவனங்கள் அடங்கும். இருந்தபோதிலும், இந்நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தகவல் கேட்டால் அதனைப் பொதுத் தகவல் அலுவலர் மறுக்கக் கூடாது;   தொடர்பான…

இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் இரங்கத்தக்க ஊர்கள்! – வைகை அனிசு

இறப்பிற்குப் பின்னரும் தொடரும் ஊர் விலக்கக் கொடுமை   தமிழகத்தில் உயிருடன் இருக்கின்றபோது இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தி அதன்மூலம் சாதித் தலைவர்கள் குளிர்காய்வது வழக்கம். அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தி அந்தத் தலைவர்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது   நடைமுறை உண்மை. ஆனால் இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தும் ஊர்கள் தமிழகத்தில் பல உள்ளன.   இந்த இடஒதுக்கீடு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கேட்பதுபோல் இல்லை. தங்கள் சொந்த சாதியினரிடையே இடஒதுக்கீடு கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. உயிருடன் இருக்கும்போது கல்வி,வேலைவாய்ப்பு, அரசுப்பணி அதற்காகப்…

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 3

3   நாம் கேட்கும் தகவல்களை முறையாகத் தகவல் தராமல் அலைக்கழிப்பு செய்வதற்காக அரசு அதிகார்கள் மூன்றாமவர் பற்றிய தகவலைத் தரமுடியாது என ஒரே வரியில் கூறிவிடுவார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அப்துல் மசீத்து என்பவர் தன்னுடைய குடும்ப அட்டையில் முத்துப்பேட்டையில் வசிக்கும் நபர்களின் பெயரைச் சேர்த்துக் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொருட்களை வாங்கி வருகிறார். அவர் குறிப்பிட்டுள்ள இருநபர்களுக்கு திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டையிலும் குடும்ப அட்டை உள்ளது. இதன் தொடர்பாகக் கேட்கப்பட்ட தகவலுக்கு விடை கூறமால் மூன்றாமவர் தொடர்புடைய பதில் கூறஇயலாது என…

தேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர்.   மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை…