வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07

(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 தொடர்ச்சி) வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) “எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன்,  வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தனது…

அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருவிழா

ஆடிப் பூரத் திருவிழா    ஆடிப் பூரத்திருவிழா புசசல்லாவை வாடித்துரை தோட்டம்  அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.  அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கைத் தொழிலாளர்  பேராய(காங்கிரசு) துணைத்தலைவரும் முன்னாள் பகுதிஅவை சபை உறுப்பினருமான எம்.எசு.எசு.செல்லமுத்து  கலந்து சிறப்பித்தார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தொறன்றோ தமிழ்ச்சங்கத்தின் செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை : கலந்துரையாடல்

தொறன்றோ தமிழ்ச்சங்கம் மாத இலக்கியக் கலந்துரையாடல் “செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை – பல்கோணப் பார்வைகள்” சிறப்புபேச்சாளர்கள் உரை: “செங்கை ஆழியான் என்ற கல்வியாளர்”- கவிநாயகர் வி.கந்தவனம் “என் பார்வையில் செங்கை ஆழியான்” – திரு.வ.ந.கிரிதரன் “ஈழத்தின் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியானுக்குரிய இடம்” – கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:  ஆவணி 11, 2047 / 27-08-2015 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: தொறன்றோ தமிழ்ச்சங்க மண்டபம் [3A, 5637, Finch avenue East,…

முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்; எதிர் வரும் ஆகத்து 14 , 2016 அன்று  தொறொன்ரோவில் நடைபெற இருக்கிறது. இதில் பார்வையாளர்களாகவோ பங்கேற்பவர்களாகவோ கலந்து கொள்ளுமாறு நா க த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சு உங்களை அன்புடன் அழைக்கிறது. காலம்: ஞாயிறு,  ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 நேரம் : காலை 8.00 – மாலை 6.00 இடம்:  பிர்ச்சுமவுண்டு அரங்கம் [Birchmount Stadium,…

அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு

(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு   இதன் ஊடாக, மூன்று வகையான நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்டு.   ஒன்று: மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குள்ளிருந்தே, உயர்தரம் வரையான கல்வியைக் கற்றுள்ள தகுதியான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது உணர்வுடன் இரண்டறக் கலந்துள்ள ஆட்களோடு தொடர்புபட்டுள்ள இந்தச் சிக்கலில் வேலைவாய்ப்பை…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு   புலம்பெயர் உறவான பிரான்சைச் சேர்ந்த உதயகுமார் தருசினி  தன் தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு  நாளை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்குப் புதிய  மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்  பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்கத் தலைமைச்செயலகத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சி.நிரஞ்சிகா, வட்டு இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.பவானி…

தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன!

தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது  வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன :  – முன்னாள் போராளி சான்றுரை  இனப்படுகொலைப் போரின் பின்னரான  மறுவாழ்வின்போது தமக்கு  வேதிய(இரசாயனம் கலந்த) உணவுகள் வழங்கப்பட்டதோடு  ஐயத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சான்றுரைத்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும்…

தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.   நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11  அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன்  முதலிடத்தையும், அதே  வகுப்பு மாணவர் சஞ்சீவு  இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6  ஆம்…

ஈழத்தில் வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தினால். திருவள்ளுவர் சிலைகள் 16 வழங்கப்பெற்றன!

 திருவள்ளுவர் சிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் மாகாணக் கல்வி அமைச்சின் ஊடாகக் கல்வி அமைச்சில்  ஆடி 10, 20417 / 25.07.2016 மாலை 3.00மணிக்கு வழங்கப்பட்டன.  தமிழ் நாட்டில் உள்ள வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சி.சந்தோசம் இந்த 16 சிலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன், வி.சி.சந்தோசம்  முதலான பலரும் கலந்து கொண்டனர். இந்தத் தேசிய நிகழ்வில் பண்டாரவளை மத்திய கல்லூரி, அட்டன்  ஐலன்சு மத்தியக் கல்லூரி, தெரனியக்கலை கதிரேசன்…

இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு, இலண்டன்

தமிழ் ஆய்வு மைய வெளியீடாக, ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய ‘இலங்கை அரசியல் யாப்பு நூல்’ வெளியீடு.  ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட “இலங்கை அரசியல் யாப்பு [(இ)டொனமூர் முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016]” என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி பிள்ளையார் மண்டபத்திலும், இலண்டனில்  (கீழ்உலர்நிலம் எனும்) ஈசுட்காம்  மும்மை  மையத்திலும்  / TRINITY…

‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி!

‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி!  ‘ஆள்கடத்தல்-காணாமல் ஆக்கப்படுதல்’  நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு & திருமதி பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட  மக்கள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர்.  இவர்களின் குடும்ப நிலைவரத்தைக் கவனத்தில் கொண்டு, சிவனருள் தொழில் பயிற்சி நிலையத்தினர் மனமுவந்தளித்த இருபது ஆயிரம்(20,000) உரூபாய் நிதியை, வவுனியா மாவட்டக்குடிமக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர்  ஆடி…

பதுளை சரசுவதி தேசியக் கல்லூரி : கட்டடத் திறப்பு விழா & அடிக்கல் நாட்டு நிகழ்வு

  பதுளை சரசுவதி தேசியக் கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடிக் கட்டடத் திறப்பு விழாவும் ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று (ஆடி09, 2047 / சூலை 24, 2016) சீரும் சிறப்புமாக நடைபெற்றது.   நிகழ்வில், மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், அமைச்சர்  அரீன் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்து,  தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேசு, ஊவா மாகாண  அவை உறுப்பினர்களான ஆ.கணேசமூர்த்தி, வே.உருத்திரதீபன், எம்.சச்சிதானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்  கலந்துகொண்டனர். [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]