தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.   நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11  அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன்  முதலிடத்தையும், அதே  வகுப்பு மாணவர் சஞ்சீவு  இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6  ஆம்…

ஈழத்தில் வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தினால். திருவள்ளுவர் சிலைகள் 16 வழங்கப்பெற்றன!

 திருவள்ளுவர் சிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் மாகாணக் கல்வி அமைச்சின் ஊடாகக் கல்வி அமைச்சில்  ஆடி 10, 20417 / 25.07.2016 மாலை 3.00மணிக்கு வழங்கப்பட்டன.  தமிழ் நாட்டில் உள்ள வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சி.சந்தோசம் இந்த 16 சிலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன், வி.சி.சந்தோசம்  முதலான பலரும் கலந்து கொண்டனர். இந்தத் தேசிய நிகழ்வில் பண்டாரவளை மத்திய கல்லூரி, அட்டன்  ஐலன்சு மத்தியக் கல்லூரி, தெரனியக்கலை கதிரேசன்…

இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு, இலண்டன்

தமிழ் ஆய்வு மைய வெளியீடாக, ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய ‘இலங்கை அரசியல் யாப்பு நூல்’ வெளியீடு.  ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட “இலங்கை அரசியல் யாப்பு [(இ)டொனமூர் முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016]” என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி பிள்ளையார் மண்டபத்திலும், இலண்டனில்  (கீழ்உலர்நிலம் எனும்) ஈசுட்காம்  மும்மை  மையத்திலும்  / TRINITY…

‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி!

‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி!  ‘ஆள்கடத்தல்-காணாமல் ஆக்கப்படுதல்’  நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு & திருமதி பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட  மக்கள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர்.  இவர்களின் குடும்ப நிலைவரத்தைக் கவனத்தில் கொண்டு, சிவனருள் தொழில் பயிற்சி நிலையத்தினர் மனமுவந்தளித்த இருபது ஆயிரம்(20,000) உரூபாய் நிதியை, வவுனியா மாவட்டக்குடிமக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர்  ஆடி…

பதுளை சரசுவதி தேசியக் கல்லூரி : கட்டடத் திறப்பு விழா & அடிக்கல் நாட்டு நிகழ்வு

  பதுளை சரசுவதி தேசியக் கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடிக் கட்டடத் திறப்பு விழாவும் ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று (ஆடி09, 2047 / சூலை 24, 2016) சீரும் சிறப்புமாக நடைபெற்றது.   நிகழ்வில், மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், அமைச்சர்  அரீன் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்து,  தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேசு, ஊவா மாகாண  அவை உறுப்பினர்களான ஆ.கணேசமூர்த்தி, வே.உருத்திரதீபன், எம்.சச்சிதானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்  கலந்துகொண்டனர். [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன்     இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு  சென்னையில்  ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார்.    இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…

புசல்லாவ சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”

புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”   ஆடி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் அன்று சீடர்கள் தங்களுக்குக் கல்வி புகட்டிய குருவைப் போற்றும் முகமாகக் குரு வழிபாடு எனும் குரு பூசை செய்வதே குரு பூர்ணிமா எனப்படும். அந்த வகையில்  புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையும் இந்து இறைஞர் மன்றமும் இணைந்து குரு பூர்ணிமா பூசையை ஆடி 04, 2047 / சூலை 19, 2016 அன்று நடாத்தியது.   இதில்  தலைமை விருந்தினராக மத்திய…

ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05

(பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 தொடர்ச்சி) ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை! பேரறிவாளன்  குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05 [வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!]   ஆடி 16, 1971 / 1940, சூலை 31 – இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இங்கிலாந்து சிறையொன்றில் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் கொலைக் குற்றத்துக்காகத் தூக்கிலிடப்பட்டார்….

அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு

(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு: காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் பெயர் மாற்றம்:   இழப்பீட்டையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் மைய நிறுவனமாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்(Office for Missing Persons – OMP) செயல்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது தொடர்பில் குழப்பங்களும், புரிதலின்மையும், நம்பிக்கையின்மையும், நிறைவின்மையும் (dissatisfaction) உண்டு.  ‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்கிற…

மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவிழா

  மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய  சிற்றூர்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  மன்பதை மேம்பாட்டு(சமுதாய அபிவிருத்தி) அமைச்சர் பழனி திகாம்பரம் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  ரோகினி கவிரட்ன  முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்

மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்.   நுவரெலியா  சுழற் கழகம் இந்தியாவின் கோயம்புத்தூர் சுழற்கழகத்துடன் இணைந்து இயற்கைப் பேரழிவால் அல்லது  நேர்ச்சிகளால்(விபத்துக்களால்) ஒரு பகுதி கைதுண்டிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கைக் கைகளை வழங்கியது.   இதன்போது ஆறு செயற்கைக் கைகளைக் கோயம்புத்தூர்  சுழற்கழகத்தின் செயலாளர்  செயகாந்தன், நுவரெலியா  சுழற்கழகத் தலைவர் உசித பண்டாரவிடம் கையளித்தார். பயனாளிகளுக்குக் கைகள் வழங்கப்படுவதையும்  நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வின்சண்டு அசோகனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிங்களப் படையே வெளியேறு!

 வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கிலுள்ள மாவட்டங்களின் இளைஞர்கள்,  இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நேற்று நகரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கலை மண்டபத்தில் தங்கியுள்ள படையினருக்கு எதிராக இன்று முற்பகல் 9 மணிக்கு இந்தப் போராட்டம்  தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தப் போராட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வழியாகக் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.  பேருந்தில் பயணித்த போராட்டக்காரர்கள் ஒவ்வோர் இடத்திலுமுள்ள படைமுகாம்களுக்கு முன்னாலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….