இலங்கை வேந்தன் கல்லூரியின் 5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை தொடங்கும்

இலங்கை வேந்தன் கல்லூரியின்  5 நாள் இயல் இசை நாடக விழா புதன்கிழமை  தொடங்கும்  யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் இயல் இசை நாடக விழா சித்திரை 21, 2017 / மே 04  புதன்கிழமை அன்று  தொடங்குகின்றது. தொடாந்து ஐந்து நாட்களுக்கு யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலை இணைக்கும் கல்லூரி வீதியில் உள்ள இந்த மண்டபத்தில் இடம்பெறவுள்ள கலைவிழா மூன்றாவது தடவையாக இடம்பெறுகின்றது. நுழைவு இலவசம் எனவும் யாழ். கலைஞர்களின் முயற்சிகளில் பங்கேற்று ஆதரவு நல்குமாறும் ஏற்பாட்டாளரான இலங்கை…

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!  வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்)சங்கத் தலைமைச்செயலகத்தில்  பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு  மிதிவண்டிகளும் ஒருவருக்குத் தையல்பொறியும் வழங்கப்பட்டுள்ளன.   சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட்டு இந்துஇளைஞர்(வாலிபர்) சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக  மிதி வண்டிகள், தையல் இயந்திரம் என்பன தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி, வட்டு  மத்திய கல்லூரி, வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை, மூளாய் சுப்பிரமணிய வித்திய சாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு …

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்   சித்திரை  முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள  இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.   இந்நிகழ்வில் முன்னாள்  நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக்…

யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ

யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] செந்தமிழினி பிரபாகரன்

17ஆவது சைவ மாநாடு, இலண்டன்

 சித்திரை 17 , 2047  / ஏப்பிரல் 30   2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை இலாக்சுபோர்டு பள்ளி அறக்கட்டளை   சிறப்பு விருந்தினர்:                சிவஞான பாலையா சுவாமிகள்    சித்திரை 18, 2047  / ஏப்பிரல்  மே 1, 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா

முத்தேர்த் திருவிழா   நுவரெலியா ஆவேலியா  அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின்  ஆண்டு சித்திரை முழுநிலவு முத்தேர்த்திருவிழா  சித்திரை 07, 2016 / 21.04.2016 காலை 10.30  மணியளவில் தொடங்கிச்சிறப்பாக நடைபெற்றது.   ஊர்வலத்தில் கலை  பண்பாடடு நிகழ்வுகளுடன் முத்தேர் பவனி நகர்வலம் வருவதையும் ஆலயத்தின்  செயற்குழுத் தலைவரும் கல்வி இணையமைச்சருமான வேலுசாமி இராதாகிருட்டிணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால்   சார்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம்,  ஆலயச் செயற்குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு   மலையகத்தின்  மூத்த தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின்  நிறுவனரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59  ஆவது பிறந்த  நாளை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் முதன்மையாளர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த வழிபாடுகள்  அட்டன் முருகன் ஆலயத்தில் (17/4 அன்று) நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்விஇணையமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், செயலாளர் நாயகம் ஏ. இலோரன்சு. ஊட்பட மலையக மக்கள் முன்னணியின்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது

20.04.16 அன்று வழங்கப்படவிருந்த பெருந்தோட்ட 500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம் 27 ஆம்  நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3021 பேரில் 820 பேர் பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு 27.04.2016 ஆம்  நாள் நியமனம் வழங்கவுள்ளதாகக் கல்லி  இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்தார். குறிப்பாக இந்த நியமனம் 20.04.2016 அன்று வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டருந்தது. சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்துச் சிக்கல்கள், மடல்…

யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகத்தின் விழாவும் நிகழ்வுகளும்

‘யாழ்ப்பாணம், புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவைஅகம்’ அமைப்பின் ‘தாயக நூலகத் திறப்பு விழா!’   புங்குடு தீவில் (பன்னிரண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் மன்றம் தொடங்கப்பட்டுப் பதினான்காம் ஆண்டு நிறைவு விழாவையும் புங்குடு தீவு ‘தாயகம் குமுகச் (சமூக) சேவைஅகம்’ அமைப்பு தொடங்கப்பட்டு நான்காவது ஆண்டு நிறைவு விழாவையும் முன்னிட்டு ‘புங்குடுதீவு தாயகம் குமுகச் சேவையகம்’ அமைப்பினால், புங்குடு தீவு சிரீகணேசக் கல்விக்கூடத்துக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் ‘புங்குடுதீவு தாயகம் நூலகம்’ என்னும் பெயரில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேற்படி விழா சித்திரை 17, 2047 /…