செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

 காந்திகிராம ஊரகப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய [பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை] பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்   தமிழில் கலைச்சொற்கள் பெருகி வருகின்றன. எனினும் துறைதோறும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. புதிய கலைச்சொற்களை உருவாக்க நாம் எங்கும் செல்ல வேண்டிய தேவை இல்லை. புதிய கலைச்சொற்கள் என்பன பழந்தமிழ்ச் சொல்லின் மீட்டுருவாக்கமாகவோ பழஞ்சொற்களின் அடிப்படையில் பிறந்த சொற்களாகவோதான் அமைகின்றன. செவ்வியல் காலச் சொற்களின் தொடர்ச்சியாகப்…

நானில மக்களை நால்வருண மக்களாகக் காட்டினர்

  “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” என்னும் நூற்பா 22இல் உள்ள நால்வர் என்னும் சொல் நான்கு திணைகளில் வாழ்பவரை குறிப்பதாகும். ஆனால் இது நான்கு வருணமக்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் மேலோர் என்பது, முதல் இரு வருணத்தை சேர்ந்த இருபிறப்பாளர்கள் எனத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த சொல் வல்லமை மிக்கவர்களையே குறிக்கிறது. – பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies) தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்

  திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது. –…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி. திருச்சிராப்பள்ளி பங்குனி 13 &14, 2045 / மார்ச்சு 27& 28, 2014    தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிய, இப்போது தமிழ் இணையக்கல்விக்கழகமாகச் செயல்படும் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த இலக்கண இலக்கியங்களை அறியவும் அறிமுக நிலையில் தமிழ் கற்கவும் பட்டயக்கல்வி, பட்டய மேற் கல்வி, இளங்கலைக் கல்வி, கணிணிக்கல்வி ஆகியன கற்கவும் சொற்பொருள், கலைச்சொற்கள் அறியவும் சிறப்பாக உதவி வருகிறது. தகவல் மையம், சுற்றுலா வழிகாட்டி, கணிப்பொறி தொடர்பானவை…

இறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி)   நிலப்புற அரசுகளும் (States on exile)  இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன.  அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத்து அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது….

வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.

ஆடி 12, 2046 / சூலை 28, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்   சமூக வலைத்தளங்கள் குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

இறையாண்மை என்றால் இதுதான் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  2   இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல்…

தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும்   நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்….

மெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண வேண்டியனவும்

தமிழரால் வாழும்   கலைஞர்களே! பிற துறையினரே! தமிழர்க்காகவும் வாழுங்கள்!      மெல்லிசை மன்னர் (ஆங்கில முதல் எழுத்துகளில்) எம்.எசு.வி. (என அழைக்கப்பெறும் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்) அல்லது ம.சு.விசுவநாதன் ஆனி, 2046, சூலை 14, 2015 அன்று இசைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தன் இசையால் பன்னூறாயிர மக்களைக் கட்டிப்போட்டவரைக் காலன் கட்டிப்போட்டுவிட்டான்.   ஆனி 11, 1959 / சூன் 24, 1928 அன்று கேரளாவில் பாலக்காட்டு அருகில் உள்ள எலப்புள்ளி என்னும் ஊரில் சுப்பிரமணியன் – நாராயணக்குட்டியம்மாள் (நானிக்குட்டி) ஆகியோரின் மகனாகப்…

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும்…

வள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்

வள்ளுவர் மாலை – நாட்டியப் பாடல் தித், தித், தை; தாம் தித், தித், தை; தித்தக்கு தத்தக்கு தத்த தாம்; குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தங்குகு தங்குகு தங்குகு தித்தாம் குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தாதங்கி தங்கி கிடதக தித்தித் தை தத் தத் தாம தத்தாம் திருகிட கிடதக திக்கும்தாரி அருமறை தந்தவர், உலகப்புலவர் குறள்நெறி நல்கிய வள்ளுவர் வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! ஞாலப்…

தாய்த்தமிழும் மலையாளமும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆனி 27, 2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) தாய்த்தமிழும் மலையாளமும் 3   ஒருவேளை மலையாள மொழியின் தோற்றக் காலத்தில்தான் அவ்வாறு தமிழாக இருந்தது; இப்பொழுது அவ்வாறில்லை எனக் கருதினால் அதுவும் முற்றிலும் தவறாகும். சான்றிற்கு இன்றைய நிலைக்குச் சிலவற்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் வகுப்பு மலையாளப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வருமாறு: பாவ பாவ பாவ நோக்கு                 புதிய புதிய பாவ நோக்கு கய்ய வீசும் பாவ நோக்கு                 கண்ணிமய்க்கும்…