கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia; 1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia;152. மகவு வெருளி-Kiddophobia

கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம் பூண்டு வெருளி-Alliumphobia   கலைச்சொல் தெளிவோம்!1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia  பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர். பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பெண் வெருளி-Gynephobia/Gynophobia கலைச்சொல் தெளிவோம்! 152. மகவு வெருளி-Kiddophobia குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக்…

தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்

சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொல்காப்பியர் ஆய்வு மையம் அறக்கட்டளை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகள் தமிழாலயம், சாமித்தோப்பு, குமரிமாவட்டம் தலைமை: கு.பச்சைமால் முன்தொகை அளிப்பவர் : வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கவுரை: புலவர் த.சுந்தரராசன் சிறப்புரை: பேராசிரியர் ஆறு அழகப்பன் பேராசிரியர் பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன்  

சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்

 புரட்சிக்கவிஞர் 125 ஆம் பிறந்தநாள் விழா 36ஆம் ஆண்டு தமிழர்கலைபண்பாட்டுப் புரட்சிவிழா சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம் சித்திரை 12 & 13, 2046 25.04.2015 &  26.04.2015  சனி & ஞாயிறு தமிழவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இசைத்தமிழறிஞர் விபுலானந்த அடிகள்,  பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்,  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் பொதுவரங்கம் தமிழர்தலைவர் கி.வீரமணி, பேராசிரியர்  முனைவர் மா.நன்னன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிஞர்…

கலைச்சொல் தெளிவோம்! 149 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia

 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia   புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1) செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10) புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2) நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2) பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (பெரும்பாண் ஆற்றுப்படை : 277) புற்று போன்ற தன்மையில் உடலில் ஏற்படும் நோய்தான் புற்று நோய். வேளாணியல்,…

கலைச்சொல் தெளிவோம்! 148 புதைவு வெருளி-Taphephobia

புதைவு வெருளி-Taphephobia அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு (பெரும்பாண் ஆற்றுப்படை : 69) வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு (பெரும்பாண் ஆற்றுப்படை : 123) முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே (ஐங்குறுநூறு : 197.2) மயிர் புதை மாக் கண் கடிய கழற (பதிற்றுப்பத்து : 29.12) தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் (கலித்தொகை : 39.2) முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப (அகநானூறு : 86.23) நிலம் புதைப் பழுனிய மட்டின்…

கலைச்சொல் தெளிவோம்! 146 பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia; 147 புதுமை வெருளி-Neophobia

பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia   faeces-மலம் எனச் சூழறிவியல், மீனியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். மலம் என்பதை இடக்கர் அடக்கலாகப் பவ்வீ (பகரத்தில் வரும் ஈகாரம்-ப்+ஈ) என்பது தமிழ் மரபு. மலத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia புதுமை வெருளி-Neophobia   புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுநர் (புறநானூறு : 174.16) இது தவிர, புதிது(14), புது(109), புதுவ(4), புதுவதின்(1), புதுவது(19), புதுவர்(1), புதுவன(1), புதுவிர்(2), புதுவை(1), புதுவோர்(5), புதுவோர்த்து(1), எனப் புது…

கலைச்சொல் தெளிவோம்! 144 பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia; 145 பயிர் வெருளி-Botanophobia

பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia   13 ஆம் எண் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia 145 பயிர் வெருளி-Botanophobia பயிர்(22) சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பயிர் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் பயிர் வெருளி-Botanophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 143 படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia

படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia   படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன. படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2) இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி மனமுவந்து ஏற்பாடு செய்யும் உணவுத்திட்டம் முதலியன என்கிறார். இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தரப்படும் படி(allowance) என்பதற்கு இது முற்றிலும் பொருந்துகின்றது. எனினும் மாடி அல்லது ஏணி…

கலைச்சொல் தெளிவோம்! 135 நீர் வெருளி-Aquaphobia

கலைச்சொல்  135 நீர் வெருளி-Aquaphobia தண்ணீர்(3), நீர்(699) ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தண்ணீரைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சத்தின் பெயர், நீர் வெருளி-Aquaphobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 137 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia

 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன (மதுரைக் காஞ்சி : 682) தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, (நெடுநல்வாடை : 55) நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய், (மலைபடுகடாம் : 149) நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் (நற்றிணை : 154.9) நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் (குறுந்தொகை : 160.1) நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் (ஐங்குறுநூறு : 388.1) நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (கலித்தொகை :…

கலைச்சொல் தெளிவோம்! 136 நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia

 நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia   நூல் நெறி மரபின், பண்ணி, ஆனாது (சிறுபாண் ஆற்றுப்படை : 230) செறிந்த          நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி         ஊர் காப்பாளர், (மதுரைக் காஞ்சி : 645-647) நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு (நெடுநல்வாடை : 76) திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, (கலித்தொகை : 99.3) நூலோர் புகழ்ந்த மாட்சிய (பெரும்பாண் ஆற்றுப்படை :487) என்பன போல் நூல்பற்றிய சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் உள்ளன….

சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!

ஆந்திரரின் அளப்பரிய கொடுமை! வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்! சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!   கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்….