தமிழை விலக்கும் தனிப்பிரிவு

தமிழை விலக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு    தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமைச் செயலகத்தில் இயங்குவதையும் இப்பொழுது இணைய வழியாகக் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அனைவரும்அறிவார்கள்.  தனிப்பிரிவிற்கு மடல் அனுப்பினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. மக்கள் அனுப்பும் முறையீடுகளைப் பெரும்பாலும் வேறு துறைக்கு மாற்றுதல் அல்லது முறையான மறுமொழி அளிக்காமை முதலானவையே பெரும்பாலும் துறைகளின் பணிகளாக நிகழ்கின்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மடல்கள்மீது துறைகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு சான்று.   பொதுநூலகத்துறையில் நூல் வாங்குவதற்கு…

இடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்

எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்!    இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்? வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம். மக்கள்…

இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையமாநாடு 2015, சிங்கப்பூர்   இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com முன்னுரை:     உலகின் முதல் குடியாகிய தமிழ்க்குடி தோன்றிய பின்னர், இயற்கைச் சீற்றங்களால், கடல் கோள்களால், நிலத் திட்டு நகர்வுகளால் மக்களினம் பிரியும் சூழல் ஏற்பட்டது. அங்கங்கே பிரிந்து சென்றவர்கள் தாய்க்குடியுடன் தொடர்பின்றி அங்கங்குள்ள சூழலுக்கேற்பப் பேசி புதிய மொழிகள் பிறந்தன. பல மொழிகள் பிறந்ததும், வெவ்வேறு மொழி பேசுவோரிடையே தொடர்பு   ஏற்பட்டதும் மொழிபெயர்ப்பும் உருவானது. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டிற்கு…

அரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்

     பொதுமக்கள் நன்மைக்காகத் தமிழக அரசு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் “இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் உரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு உரூ. 1 இலட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உரூ. 4 இலட்சம் உரூபாய் வரை சிகிச்சை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நோய்களுக்கு…

வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர் இலக்குவன் திருவள்ளுவன்(ர்)  அன்புடைத் தமிழ்ப்பணிக்கே அடியேனின் வாழ்த்துகள்! தங்கள் பணியெல்லாம் தாய்த்தமிழ் நற்பணியாய் எங்கெங்கும் உள்ளோர் இதயத்தால்-பொங்கிமகிழ் வெய்திடவே எந்நாளும் ஏற்றமுறப் பொங்கட்டும்! நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு! என்றும்தமிழ் அன்புடன் கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…

14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்

 வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)  

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்!     தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமன்று!  மூவா முத்தமிழாய் விளங்குவது!மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் திகழ்ந்து முன்னைப் பழமைக்கும் பழமையாய் இருப்பினும் காலந்தோறும் வளர்ந்து பின்னைப் புதுமைக்கும்  புதுமையாய்த் திகழ்வது!   பாரதி கூறியவாறு“வானம் அறிந்த தனைத்தும் அறிந்த வளர்மொழி”  யல்லவா நம் தமிழ்! எனவே,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் காலந்தோறும் தமிழை வளப்படுத்த வேண்டும். ஆனால்,தமிழ்ச்சொற்களால் தமிழை வளப்படுத்துவதுதான் முறையாகும். இல்லையேல் தமிழ் நாளும் நலிந்து போகும்.   சிலர், ஆங்கிலம் உலக மொழியானதன் காரணம், பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவதுதான் எனத் தவறாக நம்பியும் எழுதியும் பேசியும்…

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு எனவே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா றாகச் செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்! வாழ நாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!…

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்! வீழ்ந்தவர்கள் தாழலாமா?   காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே!   பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487)   மன உரமாவது வேண்டுமல்லவா? “வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில் “சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித்…

கலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)

மரபு இயைபியல் – genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை: மரபு வழியியல் – geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை: புவி வேதியியல் – geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை புவி வடிவ இயல் – geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை புவியியல் – geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும்…

கலைச்சொல் தெளிவோம் 185 – 194(அறிவியல் துறைப் பெயர்கள்)

மின்னணுவியல் – electronics: மின் சுற்றுகளின் பெருக்கத்தை ஆராயும் பயன் முறை அறிவியல் துறை 186. அகச் சுரப்பியியல் – endo crinology: தொண்டைச் சுரப்பி முதலிய அகச் சுரப்பிகளை ஆராயும் துறை பூச்சியியல் – entomology: பூச்சிகளை ஆராயும் துறை நொதித் தொழில் நுட்பவியல் – enzyme technology:தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் தூய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை நொதியியல் – enzymology: அறிவியல் முறையில் நொதிகளை ஆராயும் துறை கொள்ளை நோயியல் – epidomology: கொள்ளை நோய்களுக்குக் காரணமானவற்றை ஆராயும் துறை…