தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள் உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப…
அரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல! கருநாடகாவில்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல! கருநாடகாவில்! பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். (திருவள்ளுவர், திருக்குறள் 196) ‘அந்த ஆள்’ பேச்சைப் பொருட்படுத்தக்கூடாதுதான். என்றாலும் பா.ச.க.வின் ஊதுகுழல் போல் அவ்வப்பொழுது உளறிக்கொண்டிருப்பதால் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முதல்வரின் நலக்குறைவால் தமிழக அரசு செயல்படாமல் உள்ளதால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்பதே அந்த ஆளின் வேண்டுகோள். ‘தமிழக அரசு கலைப்பு’ என்னும் மிரட்டல், பா.ச.க. குறுக்கு வழியில் அரசை நடத்துவதற்கு வழி வகுப்பதே ஆகும். கட்டுப்பாட்டுடன்…
வள்ளலாரின் 194ஆவது தோற்றவிழா, உள்ளகரம் – படங்கள்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த: தாயங்கண்ணனார், அகநானூறு, 213.22 (சிறந்து விளங்கும் காவிரி நீர் வரிவரியாகச் செய்திட்ட(கருமணல்)) தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்: பரணர், அகநானூறு, 222.8 (தாழ்ந்த கூந்தலையுடைய காவிரிப்பெண் கவர்ந்துகொண்டதால்) விடியல் வந்த பெரு நீர் காவிரி: பரணர், அகநானூறு, 226.10 ( விடியற்காலையில் புதுவெள்ளம் பெருக வந்த காவிரி) கழை அளந்து அறியா காவிரி படப்பை:…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடக்கம் பேராசிரியர் தந்தை மு.சிங்காரவேலர் பத்து மா நிலங்களும் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் மளிகைக்கடையும் உடைய செல்வத்தில் திளைத்தவரே. தாய் அ.இரத்தினம்மாள் நாட்டாண்மைப் பெருமை பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே. இரு வாசல் இருப்பின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அத்தகைய இரு வாசல் உடைய மிகச் சில வீடுகளில் இவர்களின் வீடும் ஒன்று. என்ன இருந்து…
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்
1-10 இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம் இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம். நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம். இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள…
வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா, உள்ளகரம்,சென்னை 91
உலக மகா குரு திருவருளொளி வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா இடம் 2, இந்து குடியிருப்பு 2ஆவது குறுக்குத்தெரு உள்ளகரம், சென்னை 91 புரட்டாசி 19, 2047 -அட்டோபர் 05, 2016 காலை 10.00 : அகவல் முற்றோதுதல் 11.30: நன்னெறி உரை: இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல பன்னாட்டு மின்னிதழ் 1.00 : சிறப்பு அன்னதானம் மாலை 6.00 : வள்ளலாரை வாசித்தேன் வாழ்க்கையை யோசித்தேன் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பங்கேற்று வெற்றி…
இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்
நந்தவனம் பீடம் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர் புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6.00 வரை வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன் தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம் வாழ்த்துரை : மு.க.முனியாண்டி சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் ‘நான்கண்ட மியான்மர்‘ நூல் வெளியீடு கலைநிகழ்ச்சிகள் கவியரங்கம் தலைமை : முனைவர் கீரைத்தமிழன் விருது வழங்கல் & நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி நன்றியுரை : ஆர்.ஏ.செல்வக்குமார் நந்தவனம் சந்திரசேகரன் ஆர்.ஏ.செல்வக்குமார் ஆறுமுகம்…
முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம் பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…
சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் – இலக்குவனார் திருவள்ளுவன்
சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை(திருவள்ளுவர், திருக்குறள் 541). மணிமேகலை வகுத்தாற்போல் சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக ஆக்குவதைத் தமிழ்நாட்டு அரசாள்வோர் நெறியாகக் கொண்டனர் அன்று. சிறைக்கூடங்கைளக் கொலைக்கூடங்களாக மாற்றுகின்றனர் இன்று. சிறையில் தாக்குதல் அல்லது கலவரம் என்பது எல்லா நாட்டுச் சிறைச்சாலைகளிலும் அரங்கேறும் அவலம்தான். ஆனால், இவை பொதுவாக இரு குழுக்களிடையே அல்லது வெளியே உள்ள குழு ஒன்றின் தூண்டுதலால் நடைபெறுவதாகத்தான் இருக்கும். அல்லது சிறைச்சாலை அடக்கு முறைக்கு எதிராகச் சிறைவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பர். ஆனால், …
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும் உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….