கருத்தரங்கு 2: இந்தியால் தமிழுக்குக் கேடு…!- ச.சிவசங்கர்

ஐயா! குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள். அவ்வன்பர் தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால் தமிழன்; என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!’ எனக்கூறிவிட்டுப் பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண் அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு மிக வேண்டற்பாலதாகும். – ச.சிவசங்கர். 1. ஒரு காலத்தில் ஆண்டமொழியாக இருந்த தமிழ், வெள்ளையன் காலத்தில் இரண்டாந்தர மொழியாக ஆகியது. வெள்ளையன் சென்ற பின் காங்கிரசு…

செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்

இன்தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்துச் செந்தமிழ் காகச் செந்தீ மூழ்கிய சின்னச்சாமியைப் போற்றுதும் நாளும்! தமிழ்மொழி காக்கத் தம்முயிர் ஈயும் உரவோர் உண்மையை உணர்ந்து ஒழிமின் மறந்தும் தமிழை மாய்க்கும் புன்செயல். எரியில் மூழ்கி எம்தமிழ் காக்க வேண்டும் சூழ்நிலை விரிதல் நன்றோ? இந்தியின் முதன்மை எம்தமிழ் அழிக்கும் அழிசெயல் என்பதை அறியார் யாரே? நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும் வல்வினை ஒழிமின்! வண்டமிழ் போற்றுமின்! தீந்தமிழ் மறவன் சாமியை நினைத்து ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே –…

அரசுப்பணிக்குத் தமிழ்ப்புலவர்கள்

    தமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு  அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ப்புலமைப் பட்டம் பெற்றோர்க்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை தமிழ்ப் புலமையுற்றோர் பணிதேடிச் செல்லுங்கால் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தம், அதனுடன் தமிழ்ப்புலமை பெற்றிருப்பதால் அதற்காக இகழப்படுகின்றனராம். என்னே…

ஆட்சி மொழிச் சிக்கல்

-வழக்குரைஞர் வே.சௌந்தரராசன்- இந்தியப் பாராளுமன்றின் அலுவல்களில் புதிய சில நெருக்கடி நிலைகள் தோன்றியுள்ளன. அரசியல் மேகமோ இருள் சூழ்ந்ததாக இன்று மாறி வருகின்றது. புயலடிக்கத் தொடங்கியுள்ளது போன்ற அச்ச உணர்ச்சி ஆங்காங்கே பரவலாகத் தென்படுகின்றது. இதுகாறும் பல்வேறு நல்ல முடிவுகளைக் கண்ட இப்பேரவை இன்று ஏனோ ஆட்சிமொழிச் சிக்கலுக்கு உரியதோர் தீர்வு காணவியலாது நிற்கின்றது. நல்லோர் உள்ளங்களில் அதுபற்றி அமைதி குலைந்து காணப்படுகின்றது. ஆளவந்தார் இதனை எளிதெனக் கருதி அதிகாரத்தையே நம்பி நிற்கின்றனர். மக்களாட்சி முறைக்கு ஒரு வினாக்குறி எழுந்துள்ளது என்றே சொல்லவேண்டும். ஆட்சிமொழி…

உண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…

ஒட்டடார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கொட்டான் எனப்படுதல் நன்று.     இந்தியக் கூட்டரசு பதினான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் சட்டம் கூறுகின்றது. எல்லா மாநிலங்களும் இணைந்துள்ள கூட்டரசில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தல் வேண்டும். கூட்டரசுப் பாராளுமன்றில் அவைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை இருத்தலாகாது. கூட்டரசுப் பாராளுமன்றில் தேசிய மொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவற்றுள், எதில் வேண்டுமானாலும் யாரும் உரை நிகழ்த்தலாம் எனும் உரிமை ஒப்புக் கொள்ளப்படல் வேண்டும். இவ்வுரிமை மறுக்கப்பட்டால் கூட்டரசு என்பது பொருளற்று…

மனக்கதவும் திறவாதோ!

-மதுரை க. பாண்டியன் படர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே, பாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்! இடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே, இனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்! விடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே. வழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக! நடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே நல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்! இந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை இன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே, இந்நாட்டில் இருக்கின்றான்! இன்னுருவாய் வாழ்கின்றான்! இகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்! மந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க மண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி…

கருத்தரங்கு 1: இந்தியால் தமிழுக்குக் கேடு!

-சா.வி. இராசேந்திரதாசன், தேனி 1937ஆம் ஆண்டில் தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் தி.ருவி.க. பசுமலை பாரதியார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் மணம், தமிழகத்து மூலை முடுக்குகளில் உள்ளவர்களையெல்லாம் மொழியுணர்வு மிக்கவர்களாய் எழுச்சி பெறச் செய்து தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி அளித்தது. அன்றுதொட்டு இந்திமொழி இந்நாட்டை ஆளத் தகுதியற்றது என மொழித்துறை அறிஞர் பலர் தம் கருத்துக்களைத் தெளிவுபடுத்தி வந்துள்ளனர். நாடோறும் நல்ல தமிழ் வழங்கும் நாட்டம் உடையவராய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நண்பர் திரு. பாரதம், எம்.சி….

சந்தனத் தமிழன்

  – கவிஞர் முருகு சுந்தரம் அமிழ்தமாம் தமிழைக் காக்க ஆருயிர் நெருப்பில் தந்த தமிழவேள் சின்னசாமி தமிழர்க்குப் பெரிய சாமி! உமியினைப் போன்று மக்கள் உலகினில் பலபேர் வாழ இமயத்தைச் சிறிய தாக்கி இவன் புகழ் எழுப்பி விட்டான்! மக்களும் மறவன்; ஆட்டு மந்தையில் பிறந்த வேங்கை. தக்கைகள் நடுவே மின்னும் தனித்தவோர் தங்கக் கூர்வாள்; சக்கைபோல் தமிழ ருக்குள் சந்தனத் தமிழன்; அஞ்சிப் பக்கத்தில் பதுங்கி டாமல் பாய்கின்ற சிங்கக் குட்டி. கொழுந்துவிட் டெரியும் தீயில் குந்திய அப்பா அன்று செழுந்தமிழ்த்…

அன்பர் கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு!

குறள்நெறி  மாசி 18. 1995 / 01.03.1964 இதழில், ‘பாரதம்’ எம்.சி.(இ)லிங்கம் என்னும் நண்பர் இந்தி குறித்துப் பின்வருமாறு எழுதி 7 வினாக்களைத் தொடுத்து விடை கேட்டிருந்தார். நான் பிறப்பால் தமிழன்! மொழியால் தமிழன்! என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!  சுருங்கக்கூறின் என் உடல், பொருள், ஆவி தமிழ்தான்! எனினும் தேசியப்பற்று உடையவன். என் தேசம் இந்தியா! என் தலைவர் நேருசி, என் உரிமை காமராசர், என் சகோதர,  சகோதரிகள் நாற்பது கோடி மக்களும்! ஆக,…

செந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : தி.ஆ.1970 (தாது ஆண்டு ) ஆடித்திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30-7-1939) இரவு எட்டு மணி. தந்தை: ஆறுமுக(முதலியார்). தாய் : தங்காள். ஊர் : கீழப்பழுவூர், உடையார் பாளையம் வட்டம், திருச்சி மாவட்டம். படிப்பு : ஐந்தாம் வகுப்பு. திருமணம் : ஏவிளம்பி ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் வியாழக்கிழமை காலை 9 மணி: சீர்திருத்த முறையில் செல்வி கமலம் என்பாரை மணந்தார். மணமகளின் தந்தை : வையாபுரி தாய் : விருத்தம்பாள். ஊர் : ஆடுதுறை, பெரம்பலூர் வட்டம்…

தமிழ்ப் புலவர்கட்கு வேண்டுகோள்

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் தனக்குரிய இடத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டபோதும் ஆங்கில மொழியாட்சி இன்னும் அகன்றிலது. ஆங்கிலேயர் ஆண்டகாலத்தைவிட இன்று ஆங்கிலம் போற்றப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றது. தமிழை இந்நாட்டின் ஆட்சிமொழி என ஒப்புக்கொண்டுள்ள போதிலும் தமிழைக் கற்றுப் புலமையடைந்தோர்களைத் தக்கவாறு பயன்படுத்தும் சூழ்நிலை இன்னும் உண்டாகவில்லை. தலைமையிடத்தில் இருப்போரெல்லாரும் ஆங்கிலப் பற்று மிகுந்தோராய்த் தமிழ்ப்பற்றும் அறிவும் குறைந்தோராய் இருப்பதனால் தமிழை எள்ளி இகழ்ந்து ஒதுக்கும் நிலையிலேயே உள்ளனர். ஆகவே இச்சூழ்நிலையில் தமிழைப் போற்றிவளர்த்து, அதற்குரிய இடத்தை அடையுமாறு…

செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி

  – கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…