பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள் –  இலக்குவனார் திருவள்ளுவன்

  பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்     ‘திருவேலன் ஒரு  பொறியாளர்’ என்று மட்டும் அறிந்திருப்போம். ஆனால் விரிந்து பரந்த அறிவு மிக்கவர். தரக்கட்டுப்பாட்டை நிலைப்படுத்தல், மேம்படுத்தல், ஆய்விடல், பயிற்சி யளித்தல் எனப் பல்துறைத் தொழில் நுட்பட அறிவராகத் திகழ்கிறார். வெளிநாடுகளில் பணியாற்றியதால் ஆங்கிலம்,செருமானியம், சப்பானியம்முதலான பல மொழிகள்  அறிந்தவர். பன்மொழிகள் அறிந்திருந்தாலும் தாய்த்தமிழை மறக்காதவர்.   பொறியாளராகப் பல நாடுகளில் பணியாற்றியவர் எனப் பொதுவாக எண்ணுவதைவிட அவர் எத்தகைய பணியாற்றிவர், ஆற்றிவருபவர் என்பதை அறிந்தால்தான் அவரின் சிறப்பை உணர முடியும்….

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!    ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.   இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று…

தனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்

 பெட்டகம் தனிமங்கள்(Chemical Elements)  அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.   இயல்பான நிலையில் தனிமங்கள்  திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா. …

இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை

இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை கார்த்திகை 22, 23& 24, 2048  /  8,9,10 திசம்பர் 2017 இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம்   பேரன்புடையீர், வணக்கம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்: இரட்டைக் காப்பியங்கள் துணைக் கருப்பொருள்:…

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3     முன்னுரை   உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும்   புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின்  உயிர்நாடி  தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை இணையத் தளம்புகுவே மாமகுடம் (வெண்பா இணையக்குறள், 2017) எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில்…

இலை அறிவியல் (science of leaf )-இலக்குவனார் திருவள்ளுவன்

இலை அறிவியல் (science of leaf )    காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில்…

மூ மா(Dinosaur) – இலக்குவனார் திருவள்ளுவன்

  மூ மா(Dinosaur)    ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை.  நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த – அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை – ஊர்வனவற்றை  மூ ஊரி – மூவூரி…

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம் துபாய் : துபாய் ஈமான் அமைப்பு  ஐப்பசி 17, 2048 / 03.11.2017  / வெள்ளிக்கிழமை இரத்தத்தான முகாம் ஒன்றை நடத்துகிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல்நண்பகல்  1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம் உள்ள திறன் மண்டல(talent zone)நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள…

இங்கிலாந்தில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு

திருக்குறளுக்குப் பன்னாட்டு ஏற்பு           இங்கிலாந்து நாட்டில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு     இங்கிலாந்து நாட்டின்  (இ)லிவர்பூல்  பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டுப் புகழ் பெற்ற ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகத்தில்(Liverpool Hope University) அடுத்த ஆண்டு (2018) ஆனி 13, 14, & 15 , 2049 / 27,28,29-06.2018  ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.    நாகர்கோவிலில் கடந்த மே-மாதத்தில் நடைபெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு (இ)லிவர்பூலில்  நடை பெறுகின்றது.   தமிழக எல்லைகளுக்கு…

கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்

    ஐப்பசி 11, 2048  / 28.10.2017 வைகறை  5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம் ஈபெர்  பாதிரியார் (Bishop Heber) கல்லூரி,  திருச்சிராப்பள்ளி   உரையாளர்கள்:  முனைவர் காமாட்சி முனைவர் பத்துமநாபன் முனைவர் இராசேந்திரன் முனைவர் உமாராசு முனைவர் கருப்பத்தேவன் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முனைவர் பிரகதி முனைவர் இந்திரகுமாரி முனைவர் இலக்குமி இதழாளர் சதீசுகுமார் முனைவர் குணசீலன் மரு.சிவசுப்பிரமணியன்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு

  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு   வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன.  மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது…

‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!

‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்! வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே!   எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ(Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம்(Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும்(eBooks) மின்இதழ்களும்(eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அஃதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணிணியில் சேமித்து வைத்து விரும்பிய வேளை படிக்க முடிகிறது. இவற்றை மின்நூலகங்களில்(eLibrary) பேணிப் பகிருவதால் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வாய்ப்பும் உண்டும்.   இதனடிப்படையிலேயே நாம் ‘தமிழ் இலக்கிய வழி’…