கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் இரவி சுப்பிரமணியன்

நாள் : மாசி 3, 2046 / 15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 6: 00 மணிக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான “ஆளுமைகள் தருணங்கள்” என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய கலந்துரையாடல் காணறி நூல் அரண்மனையில் / ‘டிசுகவரி புக் பேலசில்‘ நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள். இடம் : காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை,  க.க. நகர். சென்னை…

தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்  தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி முதற்பரிசு 500 உருவா; 2ஆம் பரிசு 300 உருவா;  3ஆம் பரிசு 200 உருவா.    நெறிமுறைகள் : நடுவர்களின்தீர்ப்பே இறுதியானது பிறமொழிச்சொற்கள்கலவாத தனித்தமிழில், பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும். பாடல்கள்அறிவியல், விளையாட்டு, பகுத்தறிவு முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். இதுவரைவெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும் பாடல்கள்தாளின் ஓருபக்கம் மட்டும் இருத்தல் வேண்டும். தாளின் பின்பக்கம் எதுவும் எழுதுதல் கூடாது. பாடல்களின்2 படிகளைக் கட்டாயம் அனுப்புக. ஒரு படியில் மட்டும் பெயர் முகவரி இருக்கலாம். இன்னொரு படியில் பெயர் போன்றவை இல்லாமல் வெறும் பாட்டு மட்டுமே இருத்தல் வேண்டும். 7. பாடல் ஆசிரியரின் ஒளிப்படம் இணைக்க வேண்டும். 8.  தழுவல், மொழிபெயர்ப்புகள்ஏற்கப்படா. 9. தேர்ந்தெடுக்கும்பாடல்கள் ‘வெல்லும் தூயதமிழ்’ மாத இதழில் வெளிவரும் 10. வெல்லும் தூயதமிழ்சிறுவர்பாடல் சிறப்பிதழ் விலை உருவா 20.00. விருப்பம்  உள்ளவர்கள் தொகை அனுப்பலாம். போட்டி முடிவுகள் மார்ச்சு 2015 இல் வெளிவரும். இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குபவர் :  தமிழ்மாமணி மா.தன.அருணாசலம், புதுச்சேரி. பாடல்களை அனுப்பவேண்டிய முகவரி : முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,  தொ.பே : 0413-2247072, 97916 29979 66, மாரியம்மன் கோயில்தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009   படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : மாசி 8, 2046 / பிப்ரவரி…

என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை

ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை:  பொறி.கெ.பக்தவத்சலம்