‘சென்னை நாள்’ குறித்து வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் பங்கேற்கிறேன்.

ஆவணி 08, 2046 / ஆகத்து 25, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் ‘சென்னை நாள்’ குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

வைகோவிற்கு அழகல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

வைகோவிற்கு அழகல்ல!     உலக மக்களால் போற்றப்படும் மக்கள் நலத்தலைவர் வைகோ. அவரது கடும் உழைப்பும் விடா முயற்சியும் வாதுரைத்திறனும், அநீதிக்கு எதிரான போராட்டக் குணமும் மாற்றுக்கட்சியினராலும் பாராட்டப்படுகின்றன. ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துத் தமிழின உணர்வாளர்களின் நெஞ்சில் இடம் பதித்துள்ளார். இருப்பினும் அவர் புகைச் சுருள் (cigarette) விற்பனை தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது பண்பிற்கு ஏற்றதல்ல! அவருக்குப் பெருமை சேர்ப்பதுமல்ல!   மது விலக்கு வேண்டிப்போராடும் வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் அவரின் மகன் புகைச்சுருள் முகவராக உள்ளதுபற்றிக் கேட்டதற்குத் தான்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

      உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர்.   இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத்…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 4 expertise : தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை, சிறப்பறிவுத் திறம் , சிறப்பறிவாளர் கருத்துரை, தொழில் நுட்ப அறிவு, வல்லமை, நிபுணத்துவம், சிறப்புத் திறன் எனப் பலவாகக் குறிப்பிடுகின்றனர். வல்லமை என்பதையே கையாளலாம். மருத்துவ வல்லமை – medical expertise வல்லமை அறிவாற்றல்     – expertised knowledge வல்லமை மேலாண்மை – expertise management இவ்விடங்களில் வல்லுநர் அறிவாற்றல், வல்லுநர் மேலாண்மை எனக் குறி்க்கின்றனர். அது தவறு. வல்லமையுடையவர் வல்லுநர் ஆவார். இங்கே…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 4 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 31, 2046 /ஆக.16, 2015 தொடர்ச்சி) 3.] சங்க இலக்கியச் சொல்லடைவு இதில் தேடுபொறி இல்லை. அகரவரிசைப்படி நாம் சொல்லைத் தேடுவதற்கு மாற்றாகச் சொல் தேடுதல் அமைந்தால் எளிதில் பொருள்காண இயலும். நேரம் வீணாவது தடுக்கப்படும். நூற்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளது. 4.] திருக்குறட் சொல்லடைவு ‘திருக்குறட் சொல்லடைவு சொல் தேடல்’ என்னும் தலைப்பு உள்ளது. இதன் மூலம் அகரவரிசையிலான முழுப் பக்கங்களைத்தான் காண இயலும்(பட உரு 20). வேண்டும் சொல்லுக்கான பொருளை எளிதில் காண இயலாது. ஆனால், இதில் பக்க…

செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆடி 24, 2046 / ஆக 09, 2015 தொடர்ச்சி) 3    பதவிப்பெயர்கள் அல்லாமல் வேலைத் தேர்ச்சி அடிப்படையிலும் வகைப்பாடு கொண்டு நாம் தொழிலாளிகளைப் பிரிக்கிறோம். வேலையில் முழுமையான தேர்ச்சி அல்லது அரைகுறை தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை என்ற மூன்றின் அடிப்படையில் தேர்ச்சிநிலையையும் தேர்ச்சி நிலைக்குரிய தொழிலாளர்களையும் குறிப்பிடுவர்.   skilled labour     அல்லது skilled worker –  செயல்திற வேலையாள்,  தேர்ச்சியுடைத் தொழிலாள்,  திறமிகு தொழிலாளர்,  தேர்ச்சியுற்ற தொழிலாள், திறமையான தொழிலாளர்,  திறமிகு பணியாளர் எனப்பலவகையாக இப்பொழுது குறிப்பிடுகின்றனர்.  (skilled person …

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்

காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையக்கல்விக்கழகத்தின்  இப்போதைய ‘நோக்கும் போக்கும்’ எவ்வாறுள்ளது என்பது குறித்தும் எவ்வாறு அவை அமைய வேண்டும் என்பது குறித்தும் ஒரு சிற்றாய்வு. ங.) சிதைக்கப்படும் நோக்கம்: “உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் தமிழ். இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்”…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

3   தமிழ்கியூப் அகராதி(http://dictionary.tamilcube.com/ ) முதலான பிற அகராதிகளில் மேற்குறித்த எவ்வகையில் சொல் அமைந்தாலும் உரிய பொருள்களைக் காட்டும். எடுத்துக்காட்டு விளக்கம் வருமாறு(பட உரு 15, 16 & 17):-    படவுருக்கள் 15, 16 & 17  ஐரோப்பிய அகராதியில் (http://eudict.com) இடைக்கோடு இருக்க வேண்டிய இடங்களில் இடைக்கோடு இல்லாவிட்டால் மட்டும் காட்டாது(படவுருக்கள்18 & 19). படவுருக்கள்18 & 19 தனியார் சிறப்பான முறைகளில் தேடுபொறிகளை அமைத்துப் பயன்படுத்துநர் உரிய பயனை அடைவதில் கருத்து செலுத்தும் பொழுது தஇகக அதில் கருத்து…

திருக்குறள் வாழ்விலாக்க எழுச்சி விழா

ஆவணி 05, 2046 / ஆகத்து 22,2015 சனி காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை சென்னை  உலகத் திருக்குறள் மையம் முனைவர் கு.மோகன்ராசு முனைவர் பா.வளன்அரசு முனைவர் ஆறு.அழகப்பன் இலக்குவனார் திருவள்ளுவன் பேரா.வெ.அரங்கராசன் முனைவர் கா.மு.சேகர் புலவர் மு.வேங்கசடேசன் நூல் வெளியீடுகள் திருக்குறள் தூதர்கள் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம்

இலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்!

தமிழினப் பகைவர்களை வீழ்த்துங்கள்!     இலங்கையில் ஆனி 11, 2046 / சூன் 26, 2015 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14 ஆவது நாடாளுமன்றத்தைப் பதவிக் காலத்திற்குப் பத்துத் திங்கள் முன்கூட்டியே கலைத்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆடி 32, 2016 / ஆகத்து 17, 2015 திங்கள் கிழமை நடைபெறுகிறது. அமைய உள்ள 15 ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவாகஉள்ளனர்.  இத்தேர்தலில் ஈழ வாக்காளர்கள் சலனங்களுக்கு ஆட்படாமல் இனக் கொலையாளிகளையும் இனப்பகைவர்களையும் வீழ்த்த வேண்டும். இராசபக்சேவை வீழ்த்தியதுபோல்…

பொறி. தி.ஈழக்கதிர் – இவன் பெற்றோர் என்நோற்றார் என வியக்க வைத்துள்ளவன்!

பொறி. தி.ஈழக்கதிர் நூறு நூறு ஆண்டுகள் வாழ்கவே!    ஆடி 27, 2046 / ஆக12, 2015 அன்று பிறந்தநாள் பெருமங்கலம் காணும் எங்கள் மகன் தி.ஈழக்கதிர் நல்ல மனைவிமக்கள் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கி, நலம், வளம் நிறைந்து, தமிழ்நலம் பேணி நூறாண்டிற்கும் மேல்வாழ உள்ளன்புடன் வாழ்த்துகிறோம்!   ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பிள்ளைகள் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கும். அத்தகைய நினைவுகளில் சிலவற்றை அன்பு மகனின் பிறந்தநாளில் பகிர விரும்புகின்றேன்.   அப்பொழுது சென்னை அண்ணா நகரில் திருவேணி குடியிருப்பில் குடியிருந்தோம். மிக அருகிலுள்ள…