வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர் இலக்குவன் திருவள்ளுவன்(ர்)  அன்புடைத் தமிழ்ப்பணிக்கே அடியேனின் வாழ்த்துகள்! தங்கள் பணியெல்லாம் தாய்த்தமிழ் நற்பணியாய் எங்கெங்கும் உள்ளோர் இதயத்தால்-பொங்கிமகிழ் வெய்திடவே எந்நாளும் ஏற்றமுறப் பொங்கட்டும்! நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு! என்றும்தமிழ் அன்புடன் கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…

14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்

 வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)  

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்!     தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமன்று!  மூவா முத்தமிழாய் விளங்குவது!மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் திகழ்ந்து முன்னைப் பழமைக்கும் பழமையாய் இருப்பினும் காலந்தோறும் வளர்ந்து பின்னைப் புதுமைக்கும்  புதுமையாய்த் திகழ்வது!   பாரதி கூறியவாறு“வானம் அறிந்த தனைத்தும் அறிந்த வளர்மொழி”  யல்லவா நம் தமிழ்! எனவே,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் காலந்தோறும் தமிழை வளப்படுத்த வேண்டும். ஆனால்,தமிழ்ச்சொற்களால் தமிழை வளப்படுத்துவதுதான் முறையாகும். இல்லையேல் தமிழ் நாளும் நலிந்து போகும்.   சிலர், ஆங்கிலம் உலக மொழியானதன் காரணம், பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவதுதான் எனத் தவறாக நம்பியும் எழுதியும் பேசியும்…

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு எனவே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா றாகச் செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்! வாழ நாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!…

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்! வீழ்ந்தவர்கள் தாழலாமா?   காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே!   பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487)   மன உரமாவது வேண்டுமல்லவா? “வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில் “சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித்…

கலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)

மரபு இயைபியல் – genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை: மரபு வழியியல் – geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை: புவி வேதியியல் – geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை புவி வடிவ இயல் – geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை புவியியல் – geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும்…

கலைச்சொல் தெளிவோம் 185 – 194(அறிவியல் துறைப் பெயர்கள்)

மின்னணுவியல் – electronics: மின் சுற்றுகளின் பெருக்கத்தை ஆராயும் பயன் முறை அறிவியல் துறை 186. அகச் சுரப்பியியல் – endo crinology: தொண்டைச் சுரப்பி முதலிய அகச் சுரப்பிகளை ஆராயும் துறை பூச்சியியல் – entomology: பூச்சிகளை ஆராயும் துறை நொதித் தொழில் நுட்பவியல் – enzyme technology:தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் தூய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை நொதியியல் – enzymology: அறிவியல் முறையில் நொதிகளை ஆராயும் துறை கொள்ளை நோயியல் – epidomology: கொள்ளை நோய்களுக்குக் காரணமானவற்றை ஆராயும் துறை…

ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்!

சீரான ஒலிபெயர்ப்பை நடைமுறைப்படுத்த  தமிழக அரசிற்குத் தமிழறிஞர்களின் வேண்டுகோள்   மூல மொழிச் சொற்களை உள்ளவாறு உணர்வதற்கு உதவுவது ஒலிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழ்ச்சொற்களைப் பிற மொழியினர் அறிய உதவுவது ஒலி பெயர்ப்பு. பொதுவாக உரோமன்/ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கான ஒலிபெயர்ப்பு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. [பிற மொழியாளர்கள் புரிதலுக்காகத்தான் ஒலி பெயர்ப்பே தவிர, தமிழில் ஒலி பெயர்ப்பு முறையில் பிற மொழிச்சொற்களைக் கலக்கக்கூடாது.] ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், எத்தகைய ஒலி பெயர்ப்பு முறைகளைப் பிற மொழியினர் கையாண்டிருந்தனர் என நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர் வருகைக்குப்பின்னரே தமிழ்…

கலைச்சொல் தெளிவோம் 175 – 184 (அறிவியல் துறைப் பெயர்கள்)

  வேதியியல் –   chemistry: தனிமம் சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்புகளையும் ஆராயும் இயைபியல் துறை. வேதிவகைப்பாட்டியல் –   chemo-taxonomy: வேதிப் பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்த பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வுத் துறை. திரைப்படவியல் – cinematography: திரைப்படம் தொடர்பான நுணுக்கங்களை ஆராயும் துறை. மருத்துவ மரபணுவியல் – clinical genetics: நோயாளியை நேரடியாக உற்று நோக்கி உயிரியல் மரபுரிமையை ஆராயும் மருத்துவத் துறை. மருத்துவ நோய் இயல் – clinical pathology: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர், சளி முதலியவற்றை…

கலைச்சொல் தெளிவோம் 165 – 174 (அறிவியல் துறைப் பெயர்கள்)

வானியல் – astronomy : ஞாயிறு பிற கோள்கள் விண்மீன்கள் முதலிய வானில் உள்ளவற்றை ஆராயும் துறை வான இயற்பியல் –   astrophysics : விண்வெளியில் உள்ளவற்றின் இயல்பையும் அவற்றால் காற்றுவெளியில் நேரும் நிகழ்வுகளையும் ஆராயும் துறை உயிரிய வேதியியல் –   biochemistry: உயிரின் வேதிச்செயல்பாடுகளையும் வேதிப்பொருள்களையும் ஆராயும் துறை. உயிரிய வேதி வகைப்பாட்டியல் –   biochemical taxonomy: வேதிப்பண்புகளின் அடிப்படையில் உயிரிகளைப் பாகுபாடு செய்யும் ஆய்வுத் துறை. உயிரிய மின்னணுவியல் – bio electronics : உடலில் மின்னணுக் கருவி அமைப்புகளைப் பதிய…

கலைச்சொல் தெளிவோம்! 164.பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி

கலைச்சொல் 164. பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி – araskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia   வெள்ளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வெள்ளி மாழையையும், சிறுபான்மை வெள்ளிக் கோளையும் குறிக்கும் வகையிலேயே காணலாம். வெள்ளிக் கோளால் அமைந்த நாளே வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் நாள் அமையும் பொழுது வரும் பேரச்சமும், பிற கிழமையில் வரும் பதின்மூன்றாம் நாள் குறித்த பேரச்சமும் உள்ளன. அவை வருமாறு: பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி- Paraskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia . இலக்குவனார் திருவள்ளுவன்