கலைச்சொல் தெளிவோம் 206. அந்தர ஊர்தி – Hovercraft: இலக்குவனார் திருவள்ளுவன்

  Propellers push the hovercrafat forward Passenger cabin Air intaker Fan (blows air downward) Air escaper (through gaps in skirt) Area of high air pressure under craft Air makes skirt balloon out and down Flexible rubber skirt Radar

நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்

நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை!  …

தமிழை விலக்கும் தனிப்பிரிவு

தமிழை விலக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு    தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமைச் செயலகத்தில் இயங்குவதையும் இப்பொழுது இணைய வழியாகக் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அனைவரும்அறிவார்கள்.  தனிப்பிரிவிற்கு மடல் அனுப்பினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. மக்கள் அனுப்பும் முறையீடுகளைப் பெரும்பாலும் வேறு துறைக்கு மாற்றுதல் அல்லது முறையான மறுமொழி அளிக்காமை முதலானவையே பெரும்பாலும் துறைகளின் பணிகளாக நிகழ்கின்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மடல்கள்மீது துறைகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு சான்று.   பொதுநூலகத்துறையில் நூல் வாங்குவதற்கு…

இடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்

எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்!    இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்? வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம். மக்கள்…

இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையமாநாடு 2015, சிங்கப்பூர்   இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com முன்னுரை:     உலகின் முதல் குடியாகிய தமிழ்க்குடி தோன்றிய பின்னர், இயற்கைச் சீற்றங்களால், கடல் கோள்களால், நிலத் திட்டு நகர்வுகளால் மக்களினம் பிரியும் சூழல் ஏற்பட்டது. அங்கங்கே பிரிந்து சென்றவர்கள் தாய்க்குடியுடன் தொடர்பின்றி அங்கங்குள்ள சூழலுக்கேற்பப் பேசி புதிய மொழிகள் பிறந்தன. பல மொழிகள் பிறந்ததும், வெவ்வேறு மொழி பேசுவோரிடையே தொடர்பு   ஏற்பட்டதும் மொழிபெயர்ப்பும் உருவானது. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டிற்கு…

அரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்

     பொதுமக்கள் நன்மைக்காகத் தமிழக அரசு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் “இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் உரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு உரூ. 1 இலட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உரூ. 4 இலட்சம் உரூபாய் வரை சிகிச்சை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நோய்களுக்கு…

வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர் இலக்குவன் திருவள்ளுவன்(ர்)  அன்புடைத் தமிழ்ப்பணிக்கே அடியேனின் வாழ்த்துகள்! தங்கள் பணியெல்லாம் தாய்த்தமிழ் நற்பணியாய் எங்கெங்கும் உள்ளோர் இதயத்தால்-பொங்கிமகிழ் வெய்திடவே எந்நாளும் ஏற்றமுறப் பொங்கட்டும்! நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு! என்றும்தமிழ் அன்புடன் கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…

14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்

 வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி (முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை. அழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)  

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்!     தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமன்று!  மூவா முத்தமிழாய் விளங்குவது!மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் திகழ்ந்து முன்னைப் பழமைக்கும் பழமையாய் இருப்பினும் காலந்தோறும் வளர்ந்து பின்னைப் புதுமைக்கும்  புதுமையாய்த் திகழ்வது!   பாரதி கூறியவாறு“வானம் அறிந்த தனைத்தும் அறிந்த வளர்மொழி”  யல்லவா நம் தமிழ்! எனவே,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் காலந்தோறும் தமிழை வளப்படுத்த வேண்டும். ஆனால்,தமிழ்ச்சொற்களால் தமிழை வளப்படுத்துவதுதான் முறையாகும். இல்லையேல் தமிழ் நாளும் நலிந்து போகும்.   சிலர், ஆங்கிலம் உலக மொழியானதன் காரணம், பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவதுதான் எனத் தவறாக நம்பியும் எழுதியும் பேசியும்…