குறட் கடலிற் சில துளிகள் 39 : உழவின் பின்னே உலகம் உணர்த்தும் அறிவியல் உண்மை! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 38. நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – தொடர்ச்சி) உழவின் பின்னே உலகம்! அறிவியல் உண்மையை உணர்ந்து அறிவியலில் சிறப்போம்! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௧ – 1031) பொழிப்புரை: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது  (கலைஞர் மு. கருணாநிதி) பதவுரை: சுழன்றும் – உலகம் சுழன்றாலும் / சுழலும்…

வெருளி நோய்கள் 981-985: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 981-985 981. சல வெருளி-Hydrophobia நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி / வெறிநாய்க்கடி வெருளி.இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். இதில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி ஒலித்ததால், தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் வந்து விட்டது.தண் அம் துவர் பல ஊட்டிச் சலம்…

பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்

பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்     கோவையிலுள்ள தனியார் அறக்கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், “பகவத்து கிதையை வெறும் மதநூலாகப் பார்க்கக்கூடாது. அஃது ஒரு தார்மீக அறிவியல் நூல்; தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்து கீதை, இந்த மண்ணின் தாக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.    அஃதாவது இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகத்து கீதை இந்துக்களுக்கமட்டுமல்ல…

வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 971-975: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 976-980 சமையல் மேசை(kitchen table) குறித்த வரம்பற்ற பேரச்சம் சமையல் மேசை வெருளி.சமையல் வெருளி உள்ளவர்களுக்குச் சமையல் மேசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 சமைப்பது மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சமையல் வெருளி.சமையல் வெருளியையும் உணவு வெருளி(cibophobia)யுடன் சேர்த்துக் கொள்ளலாம்.சில வகை உணவுமீது வெறுப்பு வரும்பொழுது அவற்றைச் சமைப்பதிலும் வெறுப்பும் பேரச்சமும் வருகிறது. சிலர் சமைக்கத் தொடங்கிய புதிதில் காய்கனி நறுக்குகையில் கையில் காயம்பட்டிருப்பர். இதனால ஏற்பட்ட அச்சம் ஆழமாகப் பதிந்து சமையல்…

வெருளி நோய்கள் 966-970: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 961-965: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 966-970 சட்டை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சட்டை வெருளி.பெளகமிசோ – Poukamiso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சட்டை.ஆடை வெருளி உள்ளவர்களுக்குச் சட்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சதுரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சதுர வெருளி.சதுரமான கட்டடங்கள், சதுரமான அரங்குகள், சதுரமான அமைப்புகள் முதலியவை மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.சிலர் சதுரம் என்பதை வடசொல்லாகக் கருதுகின்றனர். எனவே, அதனை நாற்கரம் என்பர். ஆனால், வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத              வாழ்வு கண்ட தமிழகம்        மகிமை கெட்டே அடிமைப் பட்டு              மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)யே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு              தலைநி மிர்ந்து நில்லடா!        தரணி யெங்கும் இணையி லாஉன்              சரிதை கொண்டு செல்லடா!…

வெருளி நோய்கள் 961-965: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 956-960: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 961-965 சங்கடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கட வெருளி.சங்கடங்கள் (Embarrassment) மனஅளவிலும் குமுக அளவிலும் பல தீமைகளை ஏற்படுத்தும். அவை மனச்சோர்வு, பதற்றம், அவமானம், தன்மதிப்புக் குறைவு, மற்றவர்களைப் பற்றிய பயம்,தோல்வி பயம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மேலும் சில சமயங்களில், குமுகத் தொடர்புகளைத் தவிர்ப்பதற்கும், செயல்திறன் வீழ்ச்சிக்கும் வழிவகுத்து, தனிப்பட்ட/கல்வி/தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, சங்கடங்கள் நேரும்பொழுதோ சங்கடங்கள் வரும் என எதிர்நோக்கும் பொழுதோ வெருளிக்கு ஆளாகின்றனர். இறையன்பர்கள் சங்கடங்களால் வரும் தீமைகளைத் தடுக்கும்…

வெருளி நோய்கள் 956-960: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 956-960 கடைப்பொருள் தள்ளி / சகடி (shopping cart) குறித்த வரம்பற்ற பேரச்சம் சகடி வெருளி.குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியுடன்(stroller) குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இங்கே தள்ளுவண்டி எனப் பயன்படுத்தவில்லை.வண்டி, உருடை, ஒழுகை, சகடம், சகடி முதலானவை வண்டியைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். சகடி என்னும் சொல்லை நாம் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. எனவே கடைக்குள் பொருள்களை எடுத்து வருவதற்காகப் பயன்படுத்தப்படும சக்கரங்கள் உள்ள தள்ளுவண்டியைக் கடைச்சகடி என்றும் சுருக்கமாகச் சகடி என்றும் குறிக்கலாம்.00 சக்கர நாற்காலி…

வெருளி நோய்கள் 951-955: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 951-955 கோர உருவன் என்னும் அசைவூட்டப் படப்பாத்திரத்தின் மீதான காரணமற்ற பேரச்சமே கோரன் வெருளி.சிறு கோர உரு என்னும் பொருளிலான Pocket Monsters என்பதன் சுருக்க வடிவமே போகெமன். அல்லது பாகெமன். கோர உருவுடையவன் என்ற பொருளில் கோரன் எனலாம்.00 கோழைநாய் வீரன் என்னும் அசைவூட்டப் பாத்திரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கோழைநாய் வீரன் வெருளி.கோழை நாய் வீரன்(Courage the Cowardly Dog) என்பது அமெரிக்கத் திகில் நகைச்சுவை தொலைக்காடசித் தொடர். தில்வொர்த்து(John R. Dilworth)…

வெருளி நோய்கள் 946-950: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 941-945:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 946-950 கோவேறு கழுதை குறித்த அளவுகடந்த பேரச்சம் கோவேறு கழுதை வெருளி.00 கோழியை பார்ததால் ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கோழி வெருளி.கோழி இறைச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சமும் கோழி வெருளியுள் அடங்கும். இதனைத் தனியே கோழி இறைச்சி வெருளி எனச் சொல்ல வேண்டா.alektor என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேவல்.00 கோபுரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கோபுர வெருளி.கோபுரத்தின் தோற்றம் உயரம் குறித்துக் காரணமின்றி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 கோப்பு தடுப்பறை அல்லது…

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2057

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்     உழந்தும் உழவே தலை.   (திருவள்ளுவர், திருக்குறள்,௲௩௰௧ – 1031) தமிழே விழி!                                                       தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்   தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2057 “பொங்கற் புதுநாள் தமிழர் திருநாளே! திராவிடரும் கொண்டாடலாம்! பிற யாவரும் கொண்டாடலாம்!” இணைய வழி நிகழ் நாள்: மார்கழி 27, 2056 / 11.01.2026 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி…

இணைய உரை 3,தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி

தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 3 நாள் மார்கழி 26, 2056 / 10.01.2026 சனி காலை 10.00 கூட்டத்தில் இணைய : https://meet.google.com/wko-iivr-bah தொடக்கவுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை : புலவர் தி.வே.விசயலட்சுமி பிற அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் வா. ஆனந்தி முனைவர் புத்தேரி தானப்பன் செயலர் தலைவர்