வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்!     வாக்குவங்கி அரசியலில் தோற்குது தமிழ்நாடு, தூக்கிலிங்கு தமிழன் மானத்தை ஏற்றிய துயர்பாரு, வாட்டுமிந்த நரகத்திலே வாழ்வதும் பெரும்கேடு, காக்குமந்தக் கடவுளுக்கும் இலவசம் தரும் நாடு! வாக்களித்த பின்னர் பாவம் கடவளுக்கும்கூட, சீக்கிரத்தில் கிடைத்திடுமே சுடலையின் திருவோடு!   வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! வெட்கமின்றி வெறுந்தொடையுடன், விரசமான இழிநடையுடன், வலம்வருவோர் எண்ணிக்கையோ தாண்டும் பலநூறு! வீட்டுக்குள்ளே சாக்கடையை ஓடவிட்டு அதிலே, வெற்றுடம்புடன் படுத்துறங்கி சுகங்கண்டதன் பலனாய், வான்புகழைக் கொண்டதமிழ் நாட்டுக்குள்ளே கடலாய், வக்கிரகுணச் சாக்கடைகள் வீதியெங்கும்…

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு! – வைகோ அழைப்பு

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர்! வைகோ அழைப்பு  தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு  நடைபெறுகிறது.   இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.   இது தொடர்பாக, தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  மாற்று அரசியல் வெற்றி…

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம்  தேடாமல் கடமையாற்றட்டும்!  தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின்  அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது.   எடுத்துக்காட்டிற்கு ஒன்று:-   தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…

அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! – பாவா சமத்துவன்

அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றான் பாரதிதாசன். தமிழனையே அழித்தவர்கள் மீண்டும் மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்கு கேட்டு நம் வாசலுக்கே வருகிறார்கள்.. என்ன செய்யலாம் தமிழர்களே..? உன் விரலசைவிற்கு வரலாறு காத்திருக்கிறது..!   பாவா சமத்துவன்

நீரோடு நிலம் காப்பவனை ஆட்சியில் அமர்த்து! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தமிழினத்தின் பொற்காலம்! வாரங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான் உள்ளதடா, ஊரெங்கும் பரப்புரை ஒளிவேகம் எடுக்குதடா, கூரம்பாய் சிந்தனையை நீ கொஞ்சம் தீட்டிடடா, பாரங்கள் தீர்ப்பவர்கள் யாரென்று தேர்ந்திடடா! வீரங்கொண் டிதுவரையில் வசனங்கள் பேசியவர், கோரப்பல் சிரிப்பாலே கொடுங்கோலாய்ச் சீறியவர், வேரின்றி வீழ்கின்ற மரம்போலுன் காலடியில், பேரன்புச் சாயமிட்டு வீழ்வார்கள் புறந்தள்ளடா! ஈரங்கொண் டுள்ளத்தில் எரிமலையாய் வெடிப்பவனை, மாரெங்கும் தமிழனென்னும் பெருமிதத்தில் திளைப்பவனை, பாரெங்கும் தமிழகத்தின் பெருமைகளை வளர்ப்பவனை, நீரோடு நிலம் காக்கப் போராடும் நல்லவனை, யாரென்ன சொன்னாலும் தடுமாற்றம் இல்லாமல், ஆராய்ந்து பார்த்தபின் ஆட்சியில்…

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அம்மிக்கல் தமிழனும், ‘ஆட்சி’ என்னும் மிளகாயும்! அவலங்கள் ஆயிரம் அரங்கேற்றி, மக்களின் கவனத்தை வேறிடம் திசைமாற்றித் துணிவுடன், எவருக்கும் அஞ்சாமல் பாதகம் செய்வோரை, ஆண்டாண்டு காலமாய் ஆட்சியில் ஏற்றி, அடையாளம் தெரியாமல் போகின்ற தமிழா! அடிமைக்கும் அடிமைபோல் முதுகுத் தண்டுடைந்து, அல்லல்கொண் டழிவதிலே ஆனந்தம் கண்டாயோ? அடைகாக்கும் கோழிகூட அன்னியரைக் கண்டால், அடையாளம் கண்டுடனே தற்காத்துக் கொள்ளும்! அரைநூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும்கூட, அம்மிக்கல் போல்நீயும் அசையாமல் இருந்தால், அன்றாடம் மிளகாயை அரைத்துந்தன் தலைமீது, ‘ஆட்சி’ என்னும் பெயரிலே பூசுவார்கள் என்றும்! அறிவுக்கண் திறந்துந்தன்…

வாக்குச் சீட்டு காகிதமா ? ஆயுதமா ? – இரவி கல்யாணராமன்

வாக்குச் சீட்டு காகிதமா? ஆயுதமா? நெஞ்சைப் பிழிந்து கண்ணீர் மல்கக் கெஞ்சிக் கேட்கிறேன் அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் அடிமையாகி வீழ்ந்தது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நோக்குங்கள் எங்கும் உங்கள் குரலொலிக் கட்டும் தானம் இலஞ்சம் மறுத்து விடுங்கள் – தன் மானம் காக்க வாக்களியுங்கள் நேர்மை, துணிவு, பணிவெல்லாம் தேர்வு செய்து வாக்களியுங்கள் உங்களுக் காக உழைப்பேன் என்று வேலை கேட்டு வருகிறார்கள் வேட்பாளர்களாய் வீதிதோறும் வாக்கு கேட்டு வருகிறார்கள் பரப்புரையை நிறுத்தி விட்டுச் சிக்கல்களைக் கேட்கச் சொல்லுங்கள் அடக்கமாக வரச் சொல்லுங்கள்…

மதி படைத்த யானை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதி படைத்த யானை   குள்ளநரிகள் கள்ளவெறியில் தேர்தல் மணியை அடிக்குதாம், குருட்டு மறிகள் அந்த ஒலியில் பழசையெல்லாம் மறக்குதாம், குருதி வெறியில் நரிகளோடு கழுதைப்புலிகள் சேருதாம், குற்றுயிராய்க் குலையுயிராய் மறிகள்சாகு மென்றறிந்து, கொல்லும் அலகுக் கழுகுகளும் ஆசையோடு பறக்குதாம்! உள்ளம் குமுறிக் கண்டவர்கள் என்னசொல்லித் தடுத்த போதும், உண்மை அறியும் ஆற்றலின்றி ஊனமறிகள் சிரிக்குதாம்! மறிகளுக்கு அறிவையூட்டி, நல்வழியைக் காட்ட, மதிபடைத்த யானைஒன்று, தரை நடுங்க வருகுதாம்! தமிழ் நலம்பெருக்க வருகுதாம்! தன் நலம்மறந்து வருகுதாம்! தேர்தல் களம்வெல்ல வருகுதாம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2 தொடர்ச்சி)   2/2   தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  2/2    3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை    ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர்.   ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான்…

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2      உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.     சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! செம்மொழி பேசும் பெருமை பெற்ற, நம்மினம் அறிவில் வறுமை உற்று, ஐம்புலன் கருகி ஆற்றல் இழந்து, பொம்மையைப் போலப் பேசாமல் இருந்து, செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! இம்முறை யாவது சிந்தனை செய்து, சிம்மம் போலச் சீறி எழுந்து, செம்மை மிகுந்த தலைவன் கையில், நம்தமிழ் நாட்டின் ஆட்சியைக் கொடுப்போம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

தேர்தல் சீர்திருத்தம் – தஞ்சை இறையரசன்

தேர்தல்  சீர்திருத்தம் தேர்தல் நெருங்கிவிட்டது; சாலைகள் போடுகிறார்கள்; ஊர் ஊராக தெருத்  தெருவாக மக்களைச் சந்திக்கிறார்கள்; குடிசைக்குள் நுழைந்து கிழவிகளோடு படம்  எடுத்துக் கொள்கிறார்கள். தேநீர்க்கடைக்காரர் “இனி வருசம் ஒரு தேர்தல் வந்தாலும் நல்லதுதான்; தேர்தல் வரும் என்றதும் உடனே சாலை போடுகிறார்களே!” என்றார். பால் ஊற்ற வந்த உள்ளூர் ஆசிரியர் சொன்னார்: “இந்தத் தெருச் சாலை முன்று முறை போட்டதாச் சொல்லிப் பங்குபோட்டுக்கொண்டார்கள். அதிலே ஆளுக்குக் கொஞ்சம்பணம் போட்டு இப்ப இந்தச் சாலை!” “எவ்வளவு பெரிய பணக்காரர்களும் சேற்றிலே காலை வைத்துக் குடிசையிலே…