சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்!
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ போராட்டம்! தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக…
‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது! – புருசோத்தமன் தங்கமயில்
‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது! ‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், ‘கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக மிகையளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சூழல் இதுவாகும்’ என்பது. ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய மக்களாட்சி இடைவெளியைத் தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆக்கவழியிலான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளின் போக்கிலும், மிகையான உணர்ச்சியூட்டல்கள்…
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! – முருகவேல் சண்முகன்
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! தமிழரின் தாகம் தணிவதில்லை. அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சூழ்நிலைகளில் அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாகக் கடந்த புரட்டாசி 08, 2047 / 24.9.2016 அன்று நடைபெற்ற ‘எழுக தமிழ்’ப் பேரணி அமைந்திருந்தது. தற்காப்பு முறையில், உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் அறப் போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது இப்பேரணி. அதுவும், இப்பொழுதைய கால ஓட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான தொடக்கக் கட்டமைப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. தான் தொடங்கப்பட்ட…
‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்!
‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்! வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றக் கோரியும், தீவிரச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து ‘எழுக தமிழ்’ எனும் எழுச்சிப் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளனர். ‘தமிழ் மக்கள் பேரவை’யின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரணத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் ஏற்கும் நிகராட்சி (சம ஆட்சி) முறையான தீர்வு வேண்டுமென்றும், தமிழ்த்…
யாழில் 3000 ஆயிரம் பேர்! – ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை!
யாழில் 3000 ஆயிரம் பேர்! ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியால் ஆட்டம் கண்ட இலங்கை! தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் அமைதிப்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது! ஈகையர் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் கிழமையில்(வார) இந்த மக்கள் எழுச்சி நிகழ்ந்திருப்பது கவனிப்புக்கு உரியது. இனப்படுகொலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரான இந்த ஏழாண்டுகளில் இத்தகைய மாபெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்குக் காரணம், தமிழர் தாயகப் பகுதிகள் தீவிரமான…
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! – சு.குமணராசன், மும்பை
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! உலகின் மிகப் பழமையான மொழிகள் என வரலாற்றாய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமசுகிருதம், ஈபுரு ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சமசுகிருதம் போன்றவை குறுகியும் அழிவு நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. எஞ்சியிருக்கின்ற சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் போது செவ்வியல் தன்மையும் சீர்மையும் தனித்தியங்கும் தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் அறநெறிக் கொள்கைகளின் கருவூலமாகவும் விளங்குவது தமிழ் மொழி ஒன்றே ஆகும். சற்றொப்ப முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு…
தமிழ் நாட்டு வரலாறு – பா.இறையரசன்; நூலாய்வு
தமிழ் நாட்டு வரலாறு – நூலாய்வு பக்.352; உரூ.250; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; 044-2526 7543. மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம் தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம், இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம், ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது. தொன்மையும் பழைமையும் உடைய…
இயன்றவரை உதவுங்கள்!
இயன்றவரை உதவுங்கள்! இனப்படுகொலைப்போரில் இந்த உடன்பிறந்தாளுக்கு ஓர் ஆண், ஓரு பெண் என இரு குழந்தைகள் . இவருக்குத் தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும், தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை எனவும் பண உதவி செய்ய யாரும் முன் வந்தால் தன் இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி கொடுத்து வளர்த்து எடுக்க முடியும் என்றும் தெரிவித்து உதவி வேண்டுகிறார். உதவும் உள்ளங்கள் உதவுங்கள்! தொடர்பு இலக்கம்:-009477 549 9988 சிறீகாந்த சீவா கிளிநொச்சி…
நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு உதவுக!
நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு உதவுக! பட்டினியால் கதறியழும் தாய்! இனப்படுகொலைப்போரின் கொடூரத்தில் இரு கண் பார்வையினை இழந்து தவிக்கும் மகள். நாட்டுக்காக தன் இரு மக்களைப் பறிகொடுத்துவிட்டுப் பட்டினியின் கொடூரத்தில் வாழ வழியின்றிக் கதறி அழும் தாயின் அவலம். உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள். தொலைபேசி இலக்கம்; 0094776553238 வங்கிக் கணக்கு இலக்கம்: எசு.நாகேசுவரி 016020540202, அட்டன் தேசிய வங்கி (HNB) https://youtu.be/nnp5yFzyRu0
சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்!
சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்! போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை! தீருமா அவளின் வேதனை? 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதக் காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மிகக் கொடூரமாக அங்கவீனமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு உடுப்புக்குள ஊரைச் சேர்ந்த இரத்தினராசா சீவனா (அகவை 11) என்னும் சிறுமி, படுகொலை நடவடிக்கையில் சிக்கிப் போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார். 2009 ஆம்…
நவநேசனின் தற்றொழிலுக்கு உதவுவோம்!
தளபதி கிட்டு குண்டுவீச்சுக்கலன் படையணி நவநேசனின் இன்றைய இரங்கத்தக்க நிலை! நந்தகுமார் நவநேசன். ஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,அல்லது சிங்களத் தேசியக் கூட்டமைப்பு போன்ற வேட்டிகட்டிய தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில், 2009 இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழே இயங்காமல், தனது மருத்துவம் ஒரு பக்கம் தனது வாழ்க்கைச் சுமை மறு பக்கம் எனத் தனது அன்றாட வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார். எனினும் தன்னால் ஒரு தற்றொழில்…
விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக!
நாட்டினருக்காகத் தன்னை ஒப்படைத்த விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக! சன்னங்களையும், தகடுகளையும் தன் உடலில் தாங்கி வேதனையில் வாடும் முன்னாள் போராளி பிறையாளனின் வாழ்வு செழிக்குமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை களமுனைப் போராளியாகப் பல களம் கண்டவர்தான் பிறையாளன் என்றழைக்கப்படும் நல்லையா இயேசுதாசன். இலங்கைப்படையினரின் அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்வை ஒப்படைத்தவர்களில் பிறையாளனும் ஒருவர். தமது வாழ்க்கையை ஈகம் செய்து, உணர்வுகளையும்,…
