திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது  கடைப்பிடிக்க  வேண்டிய  முறைகள்.   அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க,      இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார்.         மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல்,         நெருங்காமல் ஆய்ந்து பழகு.   மன்னர் விழைய விழையாமை, மன்னரால்      மன்னிய ஆக்கம் தரும்.      ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை,         நிலைக்கும் நன்மைகள் தரும்.     போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின்,      தேற்றுதல்…

திருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்

(அதிகாரம்  068. வினை செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 069. தூது தூதரது கல்விஅறிவு, தூதுஇயல் அறிவு, செயல்உறுதி, சொல்முறை.       681.  பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு.               நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும்,          பண்பும், தூதர் இலக்கணம்.   அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு)             இன்றி யமையாத மூன்று.         அன்பும், அறிவும், சொல்ஆய்வுத்         திறனும், தூதர்க்கு மிகத்தேவை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள்      வென்றி வினைஉரைப்பான்…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room   ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…

உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்

உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்   உலகமயமாக்கலின் அதிவேகமான நடைமுறைப்படுத்தலில் பண்டைய மரபுகள், குழுஇனங்காணுதல், அடையாளப்படுதல் ஆகியன மறைந்து போய் ஒரே பண்பாட்டுத்துறை நடைமுறையிலாகிவிடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாட்டுப்புறவியல் என்பது மீள் விளக்கம் செய்யப்படவேண்டும் என்னும் கருத்து வேகமாகப் பரவிவருகின்றது. புதிய குடியேற்ற ஆதிக்கத்தின் விளைவைக் குமுகாயத்தில் கண்டறிந்து எதிர்விளையாற்றவேண்டிய காலத்தின் கட்டாயம் நாட்டுப்புறவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியானது குறிப்பிட்ட அளவு மக்கள் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பாதித்திருக்கிறது.   சிற்றூர்கள் அழிந்து நகரங்களாக மாறிவருகின்றன. விளைநிலங்கள், ஏரிகள்,…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 : இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 தொடர்ச்சி) 13 அட்டவணை – 01 [+ குறியீடு மட்டும் இருப்பின் சொல் தேடல் இருப்பதைக் குறிக்கும். பக்க எண் +என்றால் பக்க எண் தேடல் இருப்பதையும் பாடல் + அல்லது பா+ என்றால் பாடல் எண் தேடல் இருப்பதையும் அதிகாரம் + என்றால் அதிகார எண் தேடலையும் குறிக்கும். பா எண் என்பது பாடல் அல்லது நூற்பா எண்ணைக் குறிக்கும். அட்டவணைப் பத்தி எண் 2 இல் குறிப்பிடப்படும் சொல் என்பது முகப்புப்பக்க அட்டவணையில் அமையும்…

வலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  2 வலைமம் – Network வலைமச் சொற்களில் சில வருமாறு : – தே.வா.வா.ப.வலைமம் நாசா என்பது  National Aeronautics and Space Administration  என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி  எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom) முனைப்பு மின் வலைமம் Active electric network அகப்பரப்பு வலைமம்  / அ.ப.வ Local Area Network / LAN அகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN அகலக்கற்றைவலைமம்…

துலுக்கப்பயலே! 6 -வைகை அனிசு

(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 தொடர்ச்சி) 6 பழமை மாறாத இந்து மரபைப் பின்பற்றும் இசுலாமியர்கள்    சமயம் மாறினாலும் இந்துக்கோட்பாட்டின் படி இந்துக்கள் செய்கின்ற சடங்குகளை இன்றளவும் இசுலாமியர்கள் செய்துவருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலத்தெய்வம் இருப்பது போல இசுலாம் மார்க்கத்திற்கு வந்தவர்களும் தங்களுடைய முன்னோர்கள் செய்த சடங்குகள் போல மாயாண்டி துணை, கருப்பாயி துணை, எடமலையான் துணை, பதினெட்டாம்பட்டியான் துணை, காமாட்சியம்மன் துணை என்றெல்லாம் ஏகப்பட்ட குட்டித் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.  இந்துக்கள்,  இதே போன்று …

எல்லாம் தமிழ்நிலமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில.   புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே.   ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும்.   எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த…

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.   தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில்  தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1   இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 : அறிவிப்பு 3

பதிவு விவரம்   கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற உள்ள ‘தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கத்திற்கான பதிவு’ கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் (www.kanithamizh.in)   தொடங்கப்பட்டுள்ளது. பதிவுப்படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் தமிழ் வரிவடிவ வரலாற்றில் நடைபெறும் முதல் கருத்தரங்கு இது. இதில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) வடிவமைப்புப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்,…

திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 066. வினைத் தூய்மை  தொடர்ச்சி) 02. பொருள் பால்    06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம்     செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான            செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல்   வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்;      மற்றய எல்லாம் பிற.           செயல்உறுதி என்பது மனஉறுதி;         மற்றவை, எல்லாம் வேறு.             ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின்     ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள்.           வரும்முன் காத்தலும், வந்தபின்         தளராமையும் ஆய்வாளர் கொள்கை.   கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…