இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் – மு.வை.அரவிந்தன்
இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர் என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தனக்கு முன் வேறு சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப்பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களை விட, சொல்லதிகாரத்தில் பல இடங்களில் இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார். ‘என்ப ஒருசாரார் ஆசிரியர்’ (44,57), ஒருவன் சொல்லுவது (4,18, 25, 38, 44), ஒரு திறத்தார் கூறுப (1, 56, 58),…
தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் – மு.வை.அரவிந்தன்
தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் பிறர்கருத்தை மதித்தலும் புலமை முதிர்ச்சியும் நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன. இளம்பூரணர்த் தமிழ்க்கடலுள் பலகால் மூழ்கிதீ திளைத்தவர்; தமிழ் மரபு நன்கு அறிந்த சான்றோர். இவரது தமிழ் நெஞ்சம் பல இடங்களில் வெளிப்படுகின்றது. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.146
மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நேயம் மறந்தாலும் மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே! தன் எளிமையாலும் இளைஞர்களிடம் நம்பிக்கை விதைக்கும் உரைகளாலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும், சொல்லப்போனால் உலகளாவிய புகழ் பெற்றவர் மேதகு அப்துல்கலாம். அவரின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. முகநூல் பக்கங்களிலும் பதிபேசிப் பக்கங்களிலும்(வாட்சுஅப்) இப்பொழுது மிக மிகுதியாகப் பகிரப்படுவன அவரைப்பற்றிய நினைவுகளும் புகழுரைகளுமே! சாதி, சமய, இன, மொழி வேறுபாடின்றி அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு உழைப்பால் உயர்ந்தவராகத் திகழ்கிறார் தமிழ் வழிபடித்துத் தரணி ஆள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார்….
தெற்றிக் காடுகளும் நாகலிங்க மரங்களும்
ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் வைகைப்படுகையில் செங்காற்றால் உருவான தெற்றிக் காடுகளும் காற்றில் அதிகக் கந்தகம் இருந்தால் வெளிப்படுத்தும் நாகலிங்க மரங்களும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழன் நிலத்தை 5 பிரிவுகளாகப் பிரித்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அழைத்தான். பாலை நிலம் போன்று அதே வேளையில் பாலை நிலம் அல்லாத நிலம்தான் தெற்றிக்காடுகள். தேனிமாவட்டத்தில் கள்ளிக்காடு, தெற்றிக்காடு, கோயில்காடு, பனங்காடு எனக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் பண்டைய காலத்தில் சிங்கம், புலி, கரடி, பருவிலங்கு (காண்டாமிருகம்) எனப் பல…
செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
காந்திகிராம ஊரகப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய [பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை] பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழில் கலைச்சொற்கள் பெருகி வருகின்றன. எனினும் துறைதோறும் பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்கள் தேவை. புதிய கலைச்சொற்களை உருவாக்க நாம் எங்கும் செல்ல வேண்டிய தேவை இல்லை. புதிய கலைச்சொற்கள் என்பன பழந்தமிழ்ச் சொல்லின் மீட்டுருவாக்கமாகவோ பழஞ்சொற்களின் அடிப்படையில் பிறந்த சொற்களாகவோதான் அமைகின்றன. செவ்வியல் காலச் சொற்களின் தொடர்ச்சியாகப்…
நானில மக்களை நால்வருண மக்களாகக் காட்டினர்
“மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” என்னும் நூற்பா 22இல் உள்ள நால்வர் என்னும் சொல் நான்கு திணைகளில் வாழ்பவரை குறிப்பதாகும். ஆனால் இது நான்கு வருணமக்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் மேலோர் என்பது, முதல் இரு வருணத்தை சேர்ந்த இருபிறப்பாளர்கள் எனத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த சொல் வல்லமை மிக்கவர்களையே குறிக்கிறது. – பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies) தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்
திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது. –…
பேராசிரியர் எனப் பலர் உள்ளனர்
பேராசிரியர் எனப் பலர் உள்ளனர் திருக்கோவையார் உரைகண்ட பேராசிரியர் பொதுப்பாயிரம் செய்த ஆத்திரையன் பேராசிரியர் மயேச்சுரர் என்னும் பேராசிரியர் குறுந்தொகை உரையாளர் பேராசிரியர் பேராசிரியர் நேமிநாதர் தொல்காப்பிய உரையாளர் பேராசிரியர்
சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார் – டி.வி.சதாசிவம்(பண்டாரத்தார்
சமற்கிருதப் பற்றால் தமிழுக்கு ஒவ்வாக் கருத்துகளையும் சேனாவரையர் கூறியுள்ளார் சேனாவரையர் வடமொழியும் தமிழும் நன்கு பயின்றவர். இவ்விரு பெரிய மொழிகளும் இருவேறு தனிமொழிகள் என்பதை மறந்து வடநூல் முடிவுகளையும் கொள்கைகளையும் தமிழுக்குரிய இலக்கணங்களில் புகுத்தி அவற்றிற்கு அமைதி கூறுவர். -ஆராய்ச்சி அறிஞர் டி.வி.சதாசிவப் பண்டாரத்தார்: தமிழ் இலக்கிய வரலாறு: பக்கம். 36
பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் – மு.வை.அரவிந்தன்
பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் கடல்கோளுக்கும் நெருப்புக்கும் நீருக்கும் கறையானுக்கும் கல்லாத மக்களின் பொல்லாத அறியாமைக்கும் இரையாகி, கணக்கற்ற தமிழ்நூல்கள் மறைந்து விட்டன. அந்நூல்களின் சில பகுதிகளையும் பெயர்களையும் உரையாசிரியர்களே நமக்கு வழங்கிப் பேருதவி புரிந்துள்ளனர்… உரையாசிரியர்கள் தம் காலத்து மக்கள் நிலை,வாழ்க்கை முறை, நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு, அரசியல் போக்கு ஆகியவற்றை ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றனர். தமிழ்நாட்டு வரலாறு எழுதுவோர், பழைய உரைகள் வாயிலாகக் காலத்தின் குரலைக் கேட்கலாம்; வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். வரலாற்று ஆசிரியர்கள் பழைய உரைகளைச் சிறந்த வரலாற்று…
உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் –
உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் உரையாசிரியர்கள், தாம் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமைச் செல்வத்தை எல்லாம் தம் உரைகளில் கொட்டி நிரப்புவதால் நாம் அறிவுக்களஞ்சியத்தினுள் எளிதில் புகுந்து இன்புமுற முடிகிறது. சில பாடல்களுக்கு உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும் நயமிக்க விளக்கமும் எழுதியிருப்பதால் அவை இலக்கியப் பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன. விளங்காமல் இருந்த – ஐயத்திற்கு இடமாக இருந்த எத்தனையோ செய்திகள் வெளிப்படுகின்றன. காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் இயல்பு, தனித்தன்மை ஆகியவற்றை உரை கொண்டே நாம் அறிய முடிகின்றது. தமிழ் மொழியின் அமைப்பு,…
இளம்பூரணர் உரை தமிழ்ப்பண்பாட்டைப் போற்றிக் கூறுவது
இளம்பூரணர் உரை தமிழ்ப்பண்பாட்டைப் போற்றிக் கூறுவது. துறவியான இவர், தமிழ் சமய இலக்கியங்களுள் ஒன்றைத் தேர்ந்து உரைசெய்ய முற்படாமல், ஒல்காப் பொருமைத் தொல்காப்பியம் என்ற சிறப்பு நூலைத் தேர்ந்து கொண்டதனால், இவருடைய தமிழார்வமும், சிறந்த பண்பும் நன்கு விளங்குகின்றன. சிறப்புப் பாயிரத்துக்கு உரை எழுதினார். – உரையாசிரியர்கள்
