நாள்தோறும் நினைவில் 6 : வளம்பறிக்கும் நிலை – சுமதி சுடர்

வளம்பறிக்கும் நிலை வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான் வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான் உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால் உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம் உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும் உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான் வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு  – சுமதி சுடர், பூனா

நாள்தோறும் நினைவில் – 5 : எப்பொழுதும் கல் – சுமதி சுடர்

எப்பொழுதும் கல் இளமையில் கல் இல்லறத்தில் கல் தொண்டில் கல் துறவறத்தில் கல் வீட்டில் கல் பள்ளியில் கல் தொழிலகத்தில் கல் குழுக்களில் கல் மனமறியக் கல் மனமடங்கக் கல் – சுமதி சுடர், பூனா

நாள்தோறும் நினைவில்- மனத்தை வளப்படுத்து- சுமதி சுடர்

  மனத்தை வளப்படுத்து தியானம் செய் கவலை ஒழி அறுகுணம் சீரமை நினைவாற்றலை அதிகப்படுத்து உயர்ந்த நோக்கம் கொள் அறிவுத் தெளிவுபெறு திறனை வளர் தன்னம்பிக்கை வை தற்சோதனை செய் வேண்டுதலை விடு  – சுமதி சுடர், பூனா  

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 5 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு !   (மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி) காட்சி – 5 (நாடகக் காட்சி – 1) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண் மொழி  வருகைக்காகத் திருமகள் காத்தே இருக்க வருகின்றான் அருண்மொழி ஆங்கே! பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!) அருண்   :     கண்ணானக் கண்ணே!                      ஏனிந்த வாட்டம்?                            பெண்ணே! நான் நீங்கிச்               சென்ற…

நாள்தோறும் நினைவில்: ஆதாரங்களைப் பயன்கொள்

ஆதாரங்களைப் பயன்கொள்! இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களைப் பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  – சுமதி சுடர், பூனா  

நாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்

ஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிமுறைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய்  – சுமதி சுடர், பூனா  

மாந்தர்குல வரலாறு – சுமதிசுடர்

  கடற்கோளால் சிதறுண்டு கடல்கடந்து சென்றோம்; கற்றறிவின் துணைகொண்டு சூழலுக்குள் வாழ்ந்தோம்; அடக்குமுறை கொள்கையாளர் ஆட்சியினைப் பற்றி அழித்துவிட்டார் பண்பாட்டுக் கூறுகளை மெல்ல; கடந்துவந்த பயணத்தை ஓரளவே பதிந்தோம்; காணாமல் விட்டவற்றை கண்டறிந்து பதிவோம்; அடங்காத உணர்ச்சிநிலை ஆய்வுகளால் பயன்என் ஆய்வுசெய்யும் சித்தனாகி அறம்செழிக்கச் செய்வோம்.                                                                             –  சுமதிசுடர், பூனா

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! – பெருஞ்சித்திரனார்

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்

உள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத்தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது  – சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 4 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி -4 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (நாடகம் காண வந்தோரைப் பேடது கண்டு திகைக்கின்றது) பெண்   :           இன்றென்ன! வருவோர்! போவோருமாக                    நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்? ஆண்     :        பொங்கல் திருநாள் நாடகமன்றோ? எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்!                 “தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்?                         அமிழ்தாய் இங்கு உரைத்தார்!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)     காட்சி –3 அங்கம்    :     கவிஞர், அன்பரசன், இடம்      :     கவிஞரது குடில் நிலைமை  : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!                    வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப   : …