பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண்    :     மலரே நீ வருவாய்! தாள்கொஞ்சம் திறவாய்! கள்வனோ அல்ல;                                                                                                                                                               கணவனே! வந்தேன்! பூங்       :     இதோ நான் வந்தேன்! இனிய நீர் சுமந்து! பாதமோ கழுவி…

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு தமிழை இனிமை என்றனர் பாவலர்கள் தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள் தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் ! தமிழ் விழிப்புற்றது பாரதியால் தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால் தமிழ் போராடியது இலக்குவனாரால் எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர் எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர் இருந்தும் எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன ! எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின ! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று தொன்று தமிழருக்கு…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   காட்சி – 7அங்கம் :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடில் முன்வாசல் நிலைமை  :     (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப :     நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி       :     வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்!…

நாள்தோறும் நினைவில் 11 : ஆதாரங்களைப் பயன்கொள் – சுமதி சுடர்

ஆதாரங்களைப் பயன்கொள் இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களை பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  – சுமதி சுடர், பூனா

பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து!   பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!   பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து!   பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து!   பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து!   பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து!   பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து!   பொங்கல் திருநாள்  புதுக்கட்டும் சாதிமதம்…

நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்

உடலைப் பேணு உடற்பயிற்சி செய் தூய்மையாக இரு அளவோடு உண் தட்பவெப்ப பாதுகாப்பு பெறு பொருள்படைக்க உழை உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை இயற்கையொடு இணைந்து வாழ் நோய்க் குறிகளை அறி மருத்துவத்தின் துணைகொள் ஆழ்ந்து உறங்கு  – சுமதி சுடர், பூனா

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! காட்சி – 6 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குடில் முன் உள்ள மரக்கிளை நிலைமை  :     (நாடகம் பற்றிய கருத்துரையில் பேடும் சிட்டும் ஈடுபடல்) ஆண் :     நாடகம் எப்படி உள்ளது சொல்? பேடே! நீயும் பெண் தானே! பெண் :     எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல?     உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு! ஆண் :     நடப்பிற்கும்…

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…

பொங்கலோ பொங்கல்! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பொங்கலோ பொங்கல் என்றுபா டுங்கள் மன்றிலா டுங்கள் எங்கள்நா டெங்கள் அன்புநா டென்று நன்றுபா டுங்கள் பொங்கியா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! தங்கமே தங்கம் மண்டுநீ ரெங்கும் இங்கும்வா னெங்கும் நன்றுகா ணுங்கள் மிஞ்சியா டுங்கள் சிந்துபா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! எங்கும் ஆதந்து லந்தபா லுங்க ரும்பினோ டும்க லந்துமே பொங்க நைந்தவா கும்ப ழங்கள் தே னுங்க லந்துவா னுங்க மகிழ்ந்தவா றுண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! இங்குநா மின்று கண்டபே ரின்பம் என்றுமே…

நாள்தோறும் நினைவில் 9 : வாழ்வைத் திட்டமிடு – சுமதி சுடர்

வாழ்வைத் திட்டமிடு முதன்மையை அறி உயர்ந்த குறிக்கோள் கொள் பட்டறிவைச் சேகரி வாழ்வை வடிவமை கால்வரை திட்டமிடு நேரத்தைப் பகிர்ந்துகொள் கலந்து முடிவு செய் திட்டத்தை நிரல்படுத்து முடிவுகளைப் பரப்புக விளைவுகளைக் கணி தொலை நோக்கு பார்வைகொள்  – சுமதி சுடர், பூனா  

நாள்தோறும் நினைவில் 8 : வெளி உலகை உள்வாங்கு – சுமதி சுடர்

வெளி உலகை உள்வாங்கு பல மொழி கல் சமூக அறிவியலை அறி பல தொழில் பயில் அறிவியலைத் தெரிந்துகொள் பொது அறிவைப் பெறு நிர்வாகத்தை கற்றுக்கொள் ஐம்புலங்களில் உணர் நடு நிலையோடு ஏற்றுக்கொள் பொழுதுபோக்கில் இன்புறு துறவுநிலை நில்  – சுமதி சுடர், பூனா      

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை   மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும்…