இனிதே இலக்கியம் – 7 அன்பே கடவுள்! : இராமலிங்க அடிகள்
7 அன்பே கடவுள்! அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே அன்புரு வாம் தேவ தேவே! “அன்பு என்னும் கைப்பிடிக்குள் அடங்கும் பெருமலையே! பெருமனையில் தங்கியிருந்தாலும் அன்பெனும் சிறு குடிலுக்குள் புகும் அரசே! அன்பாகிய வலைக்குள் அகப்படும் பெரும் பரம்பொருளே! அன்பெனும் கைக்குள் அடங்கும் அமுதே! அன்பாகிய சிறு குடத்திற்குள் அடங்கும்…
இனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! : தாயுமானவர்
6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே ஆரமிர்தே என்கண்ணே அரிய வான பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப் பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக் காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும் விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே! பாரதிக்கு முன்னோடியாக எளிய நடையில் பாடல் எழுதிய தாயுமானவரின் இறைச்சுவை உணர்த்தும் பாடல் இது. தாயுமானவர் பாடல் தொகுப்பில் ஆகாரபுவனம் – சிதம்பர இரகசியம்…
பாவம் செய்யாதே! – கடுவெளிச் சித்தர்
பாவம் செய்யாதே! பாபஞ்செய்யாதிரு மனமே நாளைக் கோபச்செய்தேயமன் கொண்டோடிப்போவான் பாபஞ்செய்யாதிரு மனமே. – கடுவெளிச் சித்தர்
ஊழிநீ! உலகு நீ! – நந்திக்கலம்பகம்
ஊழிநீ! உலகு நீ! ஊழிநீ; உலகு நீ; உருவும் நீ; அருவும் நீ; ஆழிநீ; அமுதம்நீ; அறமும்நீ; மறமும்நீ; – நந்திக்கலம்பகம்
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! அனைத்துலகில் பிறப்பும் நீ; அனைத்துலகில் இறப்பும் நீ; அனைத்துலகில் துன்பமும் நீ; அனைத்துலகில் இன்பமும் நீ; வானோர்க்குத் தந்தையும் நீ; வந்தோர்க்குத் தந்தையும் நீ; ஏனோர்க்குத் தலைவனும் நீ; எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்
வள்ளலடி வணங்குவோம்! – பாம்பாட்டிச் சித்தர்
வள்ளலடி வணங்குவோம்! பொன்னி லொளிபோல வெங்கும் பூரணமதாய்ப் பூவின் மணம்போலத் தங்கும் பொற்புடையதாய் மன்னும் பலவுயிர்களில் மன்னி பொருந்தும் வள்ளலடி வணங்கி நின் றாடு பாம்பே. (3) நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடிவருமோ கூடுபோனபின் பலவற்றாற் கொள்பய னென்னோ கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே. (40) மாடகூட மாளிகைகள் வண்ணமண்டபம் மதிழ் சூழ்ந்த வரண்மனை மற்றும் உள்ளவை கூடவரா தென்றவந்தக் கொள்கையறிந்தோர் குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே. (43) – பாம்பாட்டிச் சித்தர்
முத்தமிழ் கற்றால் போதுமே! – குதம்பைச்சித்தர்
முத்தமிழ் கற்றால் போதுமே முத்தமிழ்கற்று முயங்குமெய்ஞ்ஞானிக்குச் சத்தங்களேதுக்கடி– குதம்பாய் சத்தங்களேதுக்கடி அல்லவைநீக்கி யறிவோடிருப்பார்க்குப் பத்தியமேதுக்கடி– குதம்பாய் பத்தியமேதுக்கடி தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரமேதுக்கடி குதம்பாய் தேவாரமேதுக்கடி. – குதம்பைச்சித்தர்
எண்ணியதை முடிக்கலாம் – நக்கீரர்
எண்ணியதை முடிக்கலாம் – நக்கீரர்
எண்ணியதை முடிக்கலாம்!
யாம் இரப்பவை – கடுவன் இளவெயினனார்
இறைவனிடம் வேண்டுபவை -பரிபாடல்
உட்கலந்த ஒளியை நாடி ஓடி வாடிப் போகாதே! – சிவவாக்கியார்
உட்கலந்த ஒளியை நாடி ஓடி வாடிப் போகாதே!
இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால் எழுதப்பெற்ற ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது. இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின்…