க௬. தமிழர் செய்ய வேண்டுவன?-திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௬. தமிழர் செய்ய வேண்டுவன? க. விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். உ. மதுக்கடைகளை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்செய்தல்௩. உப்பு காய்ச்சுதல், உப்பு அள்ளுதல் போராட்டம்நடத்தல்.௪. வரிகொடாப் போராட்டம் நடத்தல்.ரு. காவிரிநீர் கொடாமலும், திருவள்ளுவர் படிமம்நாட்ட இசைவு கொடாமலும், கருநாடகத் தமிழர்பலரைக் காவு கொடுத்த கருநாடக அரசுடன்தமிழக அரசு எவ்வகை உறவும் வைத்துக்கொள்ளக் கூடாதென்று தமிழக அரசைவற்புறுத்தல்.௬. தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம்வெளியேற்றுமாறும், இனி எவரையும்தமிழ்நாட்டில் குடியமர விடக்…

வெருளி நோய்கள் 831-835: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 826-830) வெருளி நோய்கள் 831-835 குப்பைத் தொட்டி(dumpster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பைத் தொட்டி வெருளி.குப்பைத்தொட்டியில் உள்ள குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், கழிவு போன்றவற்றால் எற்படும் தீ நாற்றம் குறித்து அ்ருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாகின்றனர். குப்பைத் தொட்டி காலியாக இருந்தாலும் இவை குறித்த எண்ணத்தால் வெருளி கொள்வர்.காண்க: குப்பை வெருளி-Purgamentophobia00 குப்பை வாளி(trash can) குறித்த வரம்பற்ற பேரச்சம் குப்பை வாளி வெருளி.குப்பைத் தொட்டி வெருளி போன்றதுதான் குப்பை வாளி வெருளி. குப்பை வாளியில் உள்ள குப்பை,…

வெருளி நோய்கள் 826-830: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 821-825: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 826-830 பூச்சிகளின் கொடுக்கு அல்லது தாவரங்களின் முள்ளிழை முதலான குத்துமுனைகள் குறித்த அளவு கடந்த பேரச்சம் குத்துமுனை வெருளி.வெருளிக்குக் காரணமான ஒரு பகுதியைக மட்டும் கருத்தில் கொண்டு நேர் பொருளாகக் கொடுக்கு வெருளி(Cnidophobia) எனக் குறித்திருந்தேன். ஆனால் பூனைக்காஞ்சொறிச் செடி வகை செடி கொடிகளின் குத்தும் முள்ளிழைக்கும் நச்சுப் பூச்சிகளின் கொட்டுமுனைகளுக்கும் பொதுவான குத்து முனை என்பதை இப்பொழுது பயன்படுத்தி உள்ளேன்.00 குத்தப்படுவோம் எனப் பேரச்சம் கொள்வது குத்து வெருளி.grothia, gronthokopo, ஆகிய கிரேக்கச் சொற்களின்…

வெருளி நோய்கள் 821-825: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 816-820: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 821-825 குட்டையர் பற்றிய காரணமற்ற பேரச்சம் குட்டையர் வெருளி.“கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே” என்பது பழமொழி. குள்ள உருவத்தில் வாமனனாகத் தோற்றம் எடுத்து சேர மன்னனையே(மகாபலி) ஏமாற்றியவன் திருமால். எனவேதான் கள்ளத்தனம் செய்வோரை நம்பினாலும் குள்ளனை நம்பாதே எனப் பழமொழி வந்தது. ஆனால் இக்கதையைப் புரிந்து கொள்ளாமல் குட்டையாக இருப்பவர்கள்பற்றி அஞ்சுவோர் உள்ளனர்.00 தங்களைக் கவர்ச்சியாளர்களாக எண்ணிக்கொண்டுள்ள உண்மையில் பருத்த தோற்றம் உடைய அழகற்ற பெண்களைக் கண்டால் வரும் தேவையற்ற பேரச்சம் குண்டுப்பெண் வெருளி.குண்டுப் பெண்களில்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8 திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு செய்யக்கூடியது ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யக்கூடியது ஒன்றிய அரசு செய்யக்கூடியது போன்ற மூவகை திட்டங்கள் போட்டுச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் முன் வந்து செய்யக்கூடியதும் வர வேண்டும். அது மட்டுமல்ல இங்கே சமற்கிருத கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் கருதுநிலை பல்கலைக்கழகங்களாக அஃதாவது டீம்டு யுனிவர்சிட்டி (Deemed University) என்று ஆக்கினார்களோ, அதே போன்று உலகின் பல நாடுகளில் ,பல…

வெருளி நோய்கள் 816-820: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 811-815: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 816-820 குடும்ப மர வலைத்தளங்கள் குறித்தும் உருவாக்கநர் குறித்தும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது குடும்ப மர வெருளி.தடத்தள வெருளி(Oikoechophobia) என்பது குடும்பர மர உருவாக்கல் தொடர்பான குறிப்பிட்ட -குடும்பத்தடம் – வலைத்தளம் பற்றியது. இது பொதுவாகக் குடும்ப மரம்(Family Tree) குறித்த எல்லா வலைத்தளங்கள் பற்றியது.00 கண்ணாடிக் கொள்கலனில் வளர்க்கப்படும் பயிர்கள் குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் குடுவைப்பயிர் வெருளி.கண்ணாடிக் குடுவைப் பயிர் என்னும் பொருள் கொண்ட terrarium என்ற சொல்லில் இருந்து Terraro…

வெருளி நோய்கள் 811-815: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 806-810:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 811-815 குடிநீர் ஊற்று தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடிநீர் ஊற்று வெருளி.சீன மொழியில் shui என்றால் தண்ணீர் எனப் பொருள்.“Yinshui” என்றால் தண்ணீர் குடிக்க என்று பொருளாகும்.நீர் வெருளி உள்ளவர்களுக்குக் குடிநீர் ஊற்று வெருளி வரும் வாய்ப்புள்ளது.00 போதைநீர்களைக் குடிப்பது தொடர்பான இயல்பு மீறிய பேரச்சம் குடிப்பு வெருளி.குடிப்பு என்பது மதுவகைகளைக் குடிப்பதைக் குறிக்கிறது. மதுப் பழக்கத்தைக் கைவிடாமல் அதே நேரம், குடிப்பழக்கம் தொடர்பில் அளவுமீறிய பேரச்சம் கொள்வதே இது.குடிப்பழக்கத்தின் தீமைகளை அறிந்தே குடித்துக்கொண்டு அதற்கு…

நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: தொடர்ச்சி) கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்செல்லாது வைகிய வைகலும், – ஒல்வகொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்படாஅவாம் பண்புடையார் கண்   நாலடியார் பாடல் 169 பண்புடையவ ர்கள் படிக்காமல் இருக்கும் நாள் இல்லை;பெரியவர்களிடம் சென்று பழகாத நாள் இல்லை; தன்னால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுக்காத நாள் இல்லை.  பதவுரை: கல்லாது=கற்க வேண்டிய நூற்களைக் கற்காது; போகிய=போன; நாளும்=நாள்களும்; பெரியவர்கண்=பெரியோரிடத்து; செல்லாது= போகாது; வைகிய=இருந்த; வைகலும்= நாள்களும் ஒல்வ=முடியக்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 13 இடைச்செருகல்கள் இருவகை இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும்  சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக்…

வெருளி நோய்கள் 806-810: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 801-805: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 806-810 குச்சிப் பனி மீதான மிகையான பேரச்சம் குச்சிப் பனி வெருளி .இதனை உருவாக்கும் நிறுவனப் பெயரில் பாப்புசிக்கில் வெருளி என்றும் சொல்வதுண்டு.00 குடல் செயல்பாடு தொடர்பான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் குடலியக்க வெருளி.Defecalgesiophobia என்றால் குடல் நோவு வெருளி எனலாம். எனினும் ஒத்த பொருளை இருவகையாகச் சொல்வதை விடக் குடலிறக்க வெருளி என்றே அழைக்கலாம்.de என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் இருந்து / இடத்திலிருந்து/முதலாக முதலியன. fec என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குடலினின்றும்…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 149 & 150 ; நூலரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௪ – 414) தமிழே விழி!                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 149 & 150 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 கார்த்திகை 28, 2056 ஞாயிறு  14.12.25 காலை 10.00 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…

கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3: திருத்துறைக் கிழார்

(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 3/3 ஆயின், ஆப்பிரிக்காவில் வாழும் ‘இந்தி’யர், அமெரிக்கா, இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் உறையும் இந்தியர் (வடநாட்டார்)க்கு ஓர் இடர் என்றால் இந்திய அரசு எதிர்ப்புக்குரல்  எழுப்புவதும் குற்றமன்றோ? இராசீவு காந்தியின் இறப்பைச் சாக்காக வைத்து தமிழ்மக்களின் விடுதலை உணர்வையும், உயிரையும், பொருட்படுத்தாமல் மானங்காக்க, உரிமைபெறப் போராடும் ஈழத்தமிழரின் வீர உணர்வையும் மழுங்கடிக்க இந்திய அரசும், தமிழக அரசும் பாடுபடுவது நன்றன்று. இதனை முன்வைத்து…