வெருளி நோய்கள் 1166-1170 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1161-1165: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1166-1170 தசைக்கனி (Berry) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தசைக்கனி வெருளி.இதனைச் சிலர் Fructophobia என்கின்றனர். fructus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பழம் எனப் பொருள். எனவே, Fructophobia என்பதைப் பழ வெருளி எனப் பொதுவாகக் குறிப்பிட வேண்டும். Mourophobia என்பது குறிப்பாகத் தசைக்கனியைக் குறிப்பது.தசைக்கனியில் வழல் நச்சம்(சப்போனின்/saponin) என்னும் நச்சுக் கலவை உள்ளது. இது குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பை முதலியவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசைக்கனி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00…

வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1156-1160:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1161-1165 புனைவுரு கதைப்பாத்திரமான சோனிகன்(Sonic) குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனிகன் வெருளிசப்பானியக் காணொளி ஆட்டத்தின் பெயரே ‘சோனிக்கு’ (Sonic, the Hedgehog). இப்பெயரில் திரைப்படமும வந்துள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களுக்கும் இதனை ஆடும் சிறுவர்களால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என அஞ்சும் பெற்றோர்களுக்கும் சோனிகன் வெருளி வருகிறது.‘க்‘ எழுத்தில் சொல் முடியாது. எனவே, ‘சோனிக்’ என்பது அன் விகுதி சேர்த்து சோனிகன் எனப்பட்டது.00 ஞாயிற்றுக்கிழமை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஞாயிற்றுக் கிழமை வெருளி.விடுமுறை நாள் என்பதால் வரும் சோம்பல்,…

சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 1036. Avyavaharika         அறநெறியற்ற Avyavaharika debts – அறநெறியற்ற கடன்கள் – மது, சூதாட்டம், பிற ஒழுக்கக் கேடான செயல்களால் ஏற்படும் கடன்கள் – இந்துச் சட்டத்தில் குறிக்கப்பெறுகிறது. 1037. Award          தீர்வம் தீர்வளிப்பு தீர்ப்பு வழங்கு award  என்றால் பொதுவாக நாம் விருது என்றும் சில நேரங்களில் பரிசு என்றும் கருதுகிறோம். ஆனால், வழங்கல் என்னும் பொருள் உண்டு. எனவே, சட்டத்துறையில் வழங்கப் பெறும் தீர்ப்பினைக் குறிக்கிறது. தீர்வு…

கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 30 **** “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே.         – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7 தலைவி கூற்று திணை: நெய்தல் கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள். பொருள்: தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்…

வெருளி நோய்கள் 1151-1155: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1146-1150: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1151-1155 சேலாப்பழம் (Cherry) பற்றிய அளவுகடந்த பேரச்சம் சேலாப்பழ வெருளி.சேலாப்பழத்தில் கொடிய நச்சுப்பு(சயனைடு) உள்ளது. ஒவ்வொரு கல்(கிராம்) விதையிலும் 0.17 கல்(கிராம்) நச்சுப்பு உள்ளது இருப்பதால், புதியதாக உடைக்கப்பட்ட பருப்பு ஒன்று அல்லது இரண்டு உட்கொண்டாலே உயிரை எடுக்கும். பருப்பின் அளவைப் பொறுத்து நச்சுத்தன்மை அளவும் மாறுபடும். பக்க விளைவுகளும் உண்டு. எனவே, இதனை மிகுதியாக உட்கொள்ளக் கூடாது. சேலாப்பழம் மீது வெருளி கொள்கின்றனர்.Kerasi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேலாப்பழம்(cherry)00 சேறு குறித்த பேரச்சம்…

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் –   நிறைவுரை 1 அன்புள்ள அவையோருக்கு வணக்கம்.   “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன்  தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07 தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல்   ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )              செந்தமிழ் நிலத்து…

வெருளி நோய்கள் 1121-1125: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1116-1120 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1121-1125 1121. செயற்கை நுண்ணறிவு வெருளி – Arachtophobia செயற்கை நுண்ணறிவு குறித்த வரம்பற்ற பேரச்சம் செயற்கை நுண்ணறிவு வெருளி.கணிணி முதலான செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு மனித ஆற்றலையும் விஞ்சுவதால் தீங்கு நேரும் என்ற பேரச்சம் கொள்கின்றனர்.செயற்கை உயிரி வெருளி(Logicomechanibiophobia) உள்ள வர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு வெருளி(Arachtophobia) வரும் வாய்ப்பு உள்ளது.00 செய்தித்தாள் குறித்த வரம்பற்ற பேரச்சம் செய்தித்தாள் வெருளி.திடீர் இறப்புகள், பயங்கரமான நேர்ச்சி( விபத்து)கள், துயர நிகழ்வுகள் , போர்ச்செய்திகள் முதலானவற்றைப் படிக்க நேர்வதால்…

வெருளி நோய்கள் 1116-1120: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1111-1115: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1116-1120 செந்நிற முடி உடையவர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் செம்முடியர் வெருளி. செந்நிற முடி என்னும் பொருள் கொண்ட rufus சொல்லில் இருந்து Rufo உருவானது.00 செயல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செயல் வெருளி.Praxi என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் செயல் என்று பொருள்.00 செம்மறியாட்டினைக்கண்டால் அல்லது செம்மறியாடு தொடர்பாக ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் செம்மறியாட்டு வெருளி.Ovina என்னும் இசுபானியச் சொல்லிற்குச் செம்மறியாடு என்று பொருள். பின்னர் இலத்தீனிலும் இதே பொருளில் கையாளப்பட்டு வருகிறது.00…

வெருளி நோய்கள் 1111-1115: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1111-1115 செந்நெல்லி(Cranberry)குறித்த அளவுகடந்த பேரச்சம் செந்நெல்லி வெருளி.1959 ஆம் ஆண்டு , செந்நெல்லி அறுவடையில் அமினோட்ரியசோல்(aminotriazole) என்ற களைக்கொல்லி கலந்திருப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவித்தன, இதனால் இவ்வுணவு மீது அச்சம் ஏற்பட்டது. இதனால் வந்நதே செந்நெல்லி வெருளி( Kurberiphobia) 00 செம்மஞ்சள் நிற முடியுடையவர்களைக்கண்டால் ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் செம்மஞ்சள் முடியர் வெருளி.Ginger என்பதற்கு இஞ்சி முதலான பொருள்களுடன் மங்கிய செம்மஞ்சள் நிறம் என்றும் பொருள் உண்டு. இங்கே செம்மஞ்சள்…

வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1101-1105:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1106-1110 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 2/5

3 ] தமிழ்நாடு ,    க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்

  (க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? – தொடர்ச்சி) தமிழ்நாடுக. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில், அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம். மக்களும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம்’ எனக் கருதி வாழ்நதனர்.சங்க காலத்திற்குப் பிறகு ஆண்ட அரசர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பொருட்படுத்தாமையால் அமைச்சர்களே சிலர் முற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அப்போதுதான் மக்களிடையே அரசப் பற்றின்மை…