எப்படி வளரும் தமிழ்? 3/3 : கவிஞர் முடியரசன்

(எப்படி வளரும் தமிழ்? 2/3  தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்?  3/3     இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஃச்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது.   இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9   இந்தியாவில் உள்ள மொழிகள் தமிழாயினும் வங்காளமாயினும் மராத்தியாயினும் பஞ்சாபியாயினும் அனைத்துமே இந்திய நாட்டு மொழிகள்தாம். இம்மொழிகள் அனைத்துமே ஒரு செடியில் பூத்த பல மலர்களே. இவை அனைத்தும் மொழிகளின் அரசியும் கடவுள்களின் மொழியுமாகிய சமற்கிருதத்திலிருந்து பிறந்தவையே!  வளமையையும் தூயத் தன்மையையும் கொண்ட அது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கவல்ல பொது ஊடகமாகும். சமற்கிருதத்தைக் கற்பது கடினமன்று. இன்றைய நிலையில் சமற்கிருதம் இந்திய…

திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 105. நல்குரவு உணவு,உடை, உறைவிடம் போன்றவை எதுவும் இல்லாத ஏழ்மைநிலை. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின்       இன்மையே, இன்னா தது. ஏழ்மையைவிடக், கொடிது யாது….? ஏழ்மையே எழ்மையினும் கொடிது.   இன்மை எனஒரு பாவி, மறுமையும்,       இன்மையும் இன்றி வரும்.      வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும் தொடரும்; தொடர்ந்து வருத்தும்.   தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக,     …

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்    [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடக்கம்  பேராசிரியர் தந்தை மு.சிங்காரவேலர் பத்து மா நிலங்களும் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் மளிகைக்கடையும் உடைய செல்வத்தில் திளைத்தவரே. தாய் அ.இரத்தினம்மாள் நாட்டாண்மைப் பெருமை பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே. இரு வாசல் இருப்பின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அத்தகைய இரு வாசல் உடைய மிகச் சில வீடுகளில் இவர்களின் வீடும் ஒன்று. என்ன இருந்து…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. ஊக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 29.ஊக்க முடைமை ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி. உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும். ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும். ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும். ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர். ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள். ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற…

எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்

(எப்படி வளரும் தமிழ்? 1/3  தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்?  2/3 கல்வித் துறையில்   இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம்…

இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்

இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்   காவிரி நீர்ச் சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகள் கருநாடக மண்ணில் எங்கு பார்த்தாலும் தாக்கப்படுவதும்…எரிக்கப்படுவதும்…வண்டிஓட்டுநர்கள் அம்மணமாக்கப்படுவதும்…நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா என்ற பேரச்சத்தை எனக்குள் எழுப்பியுள்ளது.   2011-இல் முல்லைப்பெரியாற்றுச்சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து  தொடர்புடைய இடுக்கிமாவட்டத்தில் மட்டுமல்ல, கேரளத்தின் எந்த மாவட்டத்திற்கும் நீங்கள் தமிழக பதிவெண்கொண்ட ஊர்தியில் போனாலும்,   அலட்சியப் பார்வையை மலையாளிகள் உங்கள் மீது வீசுவதை தவிர்க்க முடியாது. கேரளத்தில் உள் பகுதிகளான கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, பகுதிகளில் தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகளில் …

பாய்புலியே! எங்கே உன் சீற்றம்? – பெருஞ்சித்திரனார்

பாய்புலியே! எங்கே உன் சீற்றம்? இன்னமும் எத்தனை யாண்டுகள் தமிழா இங்ஙனே உணர்வற்றிருப்பாய்? – நீ இங்ஙனே உணர்வற்றிறிருப்பாய்? தின்னும் இனப்பகை உன்றனை மாய்த்தது, தீராத மடமைநின் இனத்தையே சாய்த்தது, மன்னும் அடிமையா வாழ்வென வாய்த்தது? மாளாத துயரையா உன்மரம் காய்த்தது? எந்தமிழ் மொழிபேணி வருகநீ யாண்டும், இழந்தநின் பேராற்றல் எழ, அது தூண்டும்! வெந்திறல் ஆண்மையொடு நீஎழல் வேண்டும்! வீழ்கின்ற பகையோடு அடிமையுனைத் தாண்டும்! வடவர்க்குத் தமிழ்நாடு வாழும்பட் டயமா? s வல்லதோ ரடிமைக்கு வேண்டும் நயமா? மடமைக்குத் தமிழ்நாடு மீன்மேயும் கயமா?…

எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! – நீரை. அத்திப்பூ

எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வங்கியில் கணக்கு வை தம்பீ வாழ்க்கையில் உனக்குப் பலம் தம்பீ எங்கிருந்தாலும் சேமிப்பாய் எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வீணாய்ச் செலவுகள் செய்யாதே வெற்றாய்ப் பொழுதைக் கழிக்காதே தானாய் வருமென நினைக்காதே தகுதி உயர்த்திட மறக்காதே! சிறுசிறு துளியே பெருவெள்ளம் சேர்த்துப் பார்த்தால் அது சொல்லும் வருமானத்தைப் பெருக்கிடுவாய் வாழ்வில் இமயப் புகழடைவாய்! இன்றே தொடங்கிடு சேமிப்பு இனிமை வாழ்வுடன் பூரிப்பு நன்றே நினைத்திடு வென்றிடுவாய் நாளைய தலைமை கொண்டிடுவாய்! – நீரை. அத்திப்பூ ஆசிரியர்: தகவல் முத்துகள் நீர்முளை அஞ்சல 614711 நாகை…

கூப்பிடு கூப்பிடு வீரர்களை! – காசி ஆனந்தன்

கூப்பிடு கூப்பிடு வீரர்களை!   பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை பாய்ந்து கலக்கிய சேர மகன் ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை! ஏடா தமிழா! எடடா படை! கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை? கூப்பிடு கூப்பிடு வீரர்களை! ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை? கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு! குருவிக்குக் கூடு மரத்திலுண்டு! காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு! கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு! கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர் குலத்துக்கொரு புகல் இங்கிலையோ? நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

1-10 இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி  ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம்  இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம்.     நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம்.   இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள…

முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்

முருங்கை மரத்து வேதாளம் ! வாழ்க்கை வாழ்வதற்கே !   வாழ்க்கை என்பது முருங்கை மரத்து வேதாளம் என்று வெட்டி வெட்டி எறிந்தாலும் நம் தோள்மீது அது ஏறிக்கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையை வெறுப்பது என்பது தான் அந்த வேதாளம். வாழ்க்கையை நோக்கி வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு எல்லா வேதாளங்களும் அணுக முடியாமல் ஓடியே போய்விடும். இப்போது எல்லா வேதாளங்களும் உன் காலடியில். உருத்திரா இ பரமசிவன்