திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 014. ஒழுக்கம் உடைமை

(அதிகாரம் 013. அடக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்.                 02.இல்லற இயல்                  அதிகாரம்   014. ஒழுக்கம் உடைமை   நல்லவற்றையே சிந்தித்தும், சொல்லியும், செய்யும் வாழ்வியல் உயிர்நெறி   ஒழுக்கம், விழுப்பம் தரலான், ஒழுக்கம்,    உயிரினும், ஓம்பப் படும்     சிறப்புத் தருகின்ற ஒழுக்கத்தை,   உயிரைவிடவும் உயர்வாய்க் காக்க.   பரிந்(து),ஓம்பிக், காக்க ஒழுக்கம்; தெரிந்(து),ஓம்பித்     தேரினும், அஃதே துணை.   எவ்வளவு வருத்தினும், ஒழுக்கமே, காக்க வேண்டிய ஆக்கத்துணை.   ஒழுக்கம் உடைமை, குடிமை; இழுக்கம்,   …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை

(அதிகாரம் 012. நடுவு நிலைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                   02.இல்லற இயல்                 அதிகாரம் 013. அடக்கம் உடைமை      ஐந்து புலன்களையும் அடக்கி,    முந்து நல்வழியில் நடத்தல்.   அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை,      ஆர்இருள் உய்த்து விடும்.          அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்;        அடங்காமை, இருளுக்குள் செலுத்தும்.   காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம்,      அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு.          உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை,        உயரிய பொருளாய்க் காக்க….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 012. நடுவு நிலைமை

(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்  அதிகாரம் 012. நடுவு நிலைமை     யாருடைய பக்கமும் சாயாமல்,    நேர்மையாக நடக்கும் சமநிலை.   தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்,    பால்பட்[டு] ஒழுகப் பெறின்.             அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப           நடக்கும் தகுதியே நடுநிலைமை.   செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி,     எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து.          நடுநிலையார் வளநலம் வழிவழி        வருவார்க்கும், பாதுகாப்பு…

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர் – மு.இராகவையங்கார்

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர்   பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கட்டலைத் தம்மதிவலிகொண்டு கடைந்து முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார். – மு.இராகவையங்கார்: ஆராய்ச்சித் தொகுதி: பக்கம்: 398-399

இறையனார் அகப்பொருள் உரையாளர் சிறப்பு – மறைமலையடிகள்

இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும் அளவையின் விளைவும் தெளிவுற விரித்து சுவைபெற உரைத்த நவையில் புலமையும் மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும் சீரிதின் இயைந்த கீரன் -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: திருவொற்றியூர் மும்மணிக்கோவை: 55-61

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள் – மு.வை.அரவிந்தன்

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள்   இறையனார் களவியலுரை, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகை நூல்களிலிருந்து பல செய்யுட்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளது. இடம் விளங்கா மேற்கோள் பாடல்கள் சில உள்ளன. அவை இலக்கியச் சுவை மிகுந்தவை; கற்கும்தோறும் இன்பமூட்டவல்லவை. “பையுள் மாலை” (சூத்.7), ‘ஏனல்’ (சூத்.7), ‘வெள்ளாங்குருகின்’ (சூத்.9), ‘நெருநலு முன்னாள்’ (சூத்.12) என்னும் தொடக்கத்தையுடைய அகப்பாடல்கள் எடுத்துக்­காட்டப்பட்டுள்ளன. இவை, தொகைநூலில் இடம்பெறாத பழைய அகப்பாடல்கள். தொகுத்தவை போக எஞ்சிய பாடல்கள் இவை போன்றவை பல இருந்திருக்கக் கூடும். (பிற உரையாசிரியர்களும்…

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்:

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்: தெய்வச்சிலையார் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் உரையினது அளவை (எழுத்துகளால்) குறிப்பிடுகின்றார். கிளவியாக்கத்தின் இறுதியில், ‘இவ்வோத்தினுள் சூத்திரமும் உள்பட உரையினது அளவு கிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது’ என்கிறார். இவ்வாறே ஏனைய இயல்களுக்கும் அளவு கூறுகின்றார். … தெய்வச்சிலையார் உரை நடை உயிரோட்டமுடைதாய், எளிதாய் உள்ளது. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.213-217

உதவிடலாம் ! – எம் .செயராம(சர்மா)

உதவிடலாம் ! பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து நிற்பார்க்கு மருத்துவத்தைத் தெரிந்தவர்கள் மனதார உதவிடலாம் ! ஏமாற்றிப் பிழைப்பவரின் இடருக்குள் புகுந்தவர்கள்…

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் பேராசிரியர்கள் உரை விளக்கம் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளை­யும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள இவர் உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள்தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி, இலக்கியக் கொள்கை இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில் அவரை பற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு….

பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார்

  பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் எனபதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது. “அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்.189) “காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18) “அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்.19) “முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்” (செய்.1) “முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்” (செய்.30) என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர் அகத்திணை…

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை

திட்பமும் நுட்பமும் வாய்ந்த சேனாவரையர் உரை   சேனாவரையர் உரை திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. சேனாவரையரின் புலமைப் பெருமிதமும் ஆராய்ச்சி வன்மையும் கருத்துத் தெளிவும் உரை முழுவதிலும் காணலாம். கற்கண்டை வாயிலிட்டு மெல்ல மெல்லச் சுவைத்து இன்புறுவதுபோல் இவர் உரையை நாள்தோறும் பயின்று மெல்ல மெல்ல உணர்ந்து மகிழவேண்டும். பலமுறை ஆழ்ந்து பயின்றாலும் இவ்வுரையை முற்றும் பயின்று விட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுவதில்லை. செங்குத்தான மலைமீது ஏற, கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த குறுகிய வழியில் வெயிலில் நடப்பது போன்ற உணர்ச்சியை, இவ்வுரையைக்…

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் – மு.வை.அரவிந்தன்

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர் என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தனக்கு முன் வேறு சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப்பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களை விட, சொல்லதிகாரத்தில் பல இடங்களில் இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார். ‘என்ப ஒருசாரார் ஆசிரியர்’ (44,57), ஒருவன் சொல்லுவது (4,18, 25, 38, 44), ஒரு திறத்தார் கூறுப (1, 56, 58),…